சீனாவின் தெற்கு பகுதியில் நேற்று இரவு, 7.2 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டதாக, தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது. இந்த சக்திவாய்ந்த நிலநடுக்கம் வட இந்தியாவின் சில பகுதிகளில் உணரப்பட்டது.
சீனாவின் ஜின்ஜியாங் மாகாணத்தில் நேற்று இரவு 11.39 மணிக்கு நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவுகோலில் 7.2 ஆக பதிவானது. இந்த நிலநடுக்கம் பூமிக்கடியில் சுமார் 80 கிலோமீட்டர் ஆழத்தில் மையம் கொண்டு ஏற்பட்டதாக தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது.
நிலநடுக்கம் காரணமாக கட்டடங்கள் குலுங்கின. இதனால், அச்சமடைந்த மக்கள் வீடுகளை விட்டு வெளியேறி சாலைகளில் தஞ்சமடைந்தனர்.இந்த நிலநடுக்கத்தால், ஏற்பட்ட பாதிப்புகள் குறித்து உடனடியாக தகவல் வெளியாகவில்லை.
இந்த நிலநடுக்கத்தின் தாக்கம் இந்தியாவிலும் உணரப்பட்டது. டெல்லி உள்ளிட்ட வடமாநிலங்களில் லேசான நில அதிர்வு உணரப்பட்டது.