பிரதமர் மோடியின் தேசப்பற்றும், தெய்வப்பற்றும்: ஜி.கே.வாசன் புகழாரம்!
Sep 18, 2025, 09:51 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

பிரதமர் மோடியின் தேசப்பற்றும், தெய்வப்பற்றும்: ஜி.கே.வாசன் புகழாரம்!

Web Desk by Web Desk
Jan 23, 2024, 12:04 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

அயோத்தியில் ஸ்ரீராமர் சிலை பிரதிஷ்டை செய்யப்பட்டிருப்பதன் மூலம், பிரதமர் மோடியின் தேசப்பற்றும், தெய்வப்பற்றும் வெளிப்பட்டுள்ளது என்று த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன் தெரிவித்திருக்கிறார்.

உத்தரப் பிரதேச மாநிலம் அயோத்தியில் 1,800 கோடி ரூபாய் செலவில் மிகவும் பிரம்மாண்டமாக ஸ்ரீராமர் கோவில் கட்டப்பட்டு நேற்று திறப்பு விழா மற்றும் இராம் லல்லா சிலை பிரான் பிரதிஷ்டை விழா நடைபெற்றது. பாரதப் பிரதமர் நரேந்திர மோடிதான் இராம் லல்லா சிலையை பிரதிஷ்டை செய்தார்.

மேலும், அயோத்தியில் இராமர் கோவில் அமைவதற்கு முக்கியக் காரணமாக இருந்தவர் பிரதமர் மோடிதான். எனவே, பிரதமர் மோடியை பல்வேறு தரப்பினரும் பாராட்டி வருகின்றனர். குறிப்பாக, பிரபலங்கள் பலரும் மோடிக்கு பாராட்டுத் தெரிவித்து வருகின்றனர்.

அந்த வகையில், தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஜி.கே.வாசனும் மோடியை பாராட்டி இருக்கிறார். திருவாரூா் மாவட்டம் மன்னார்குடியில் நடந்த கட்சி நிர்வாகி இல்ல திருமண விழாவில் பங்கேற்ற ஜி.கே.வாசன், பின்னர் செய்தியாளர்களிடம் பேசினார்.

அப்போது, “அயோத்தியில் ஸ்ரீராமர் சிலை பிரதிஷ்டை செய்யப்பட்ட நாள் வரலாற்று சிறப்பு மிக்க நாள். இந்த நாளுக்கு முன்னதாக பிரதமர் மோடி தமிழகம் வந்து, இராமர் தொடர்புடைய புண்ணியத் தளங்களுக்குச் சென்று வழிபாடு நடத்தினார்.

இதன் பிறகே, இராமர் சிலையை பிரதிஷ்டை செய்திருக்கிறார். இதன் மூலம் அவரது தேசப்பற்றும் தெய்வப்பற்றும் சிறப்பாக வெளிப்பட்டிருக்கிறது. அதேசமயம், ஆன்மீக விவகாரங்களில் தி.மு.க. அரசின் நிலைப்பாடு நேர்மாறாக இருக்கிறது.

காஞ்சி காமாட்சியம்மன் கோவிலில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பங்கேற்ற இராமர் சிலை பிரதிஷ்டை நேரலை நிகழ்ச்சிக்கு வைக்கப்பட்டிருந்த எல்.இ.டி. திரையை அகற்றியது அரசியல் காழ்ப்புணர்ச்சியாகும்.

அதேபோல, சேலத்தில் நடைபெற்ற தி.மு.க. இளைஞரணி மாநாடு ஆட்சி அதிகாரத்தையும், பண பலத்தையும் காட்டும் மாநாடாக நடந்து முடிந்திருக்கிறது. த.மா.கா.வை வலுப்படுத்த தமிழகம் முழுவதும் பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகின்றன.

மக்களவைத் தேர்தல் கூட்டணி குறித்து கட்சியின் மாவட்டச் செயலாளர்களுடன் கலந்துபேசி உரிய நேரத்தில் அறிவிக்கப்படும். தமிழகத்தில் பத்திரப் பதிவுத் துறையில் குளறுபடிகளும், முறைகேடுகளும் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன” என்றார்.

Tags: PM ModiPraisedG K Vasan
ShareTweetSendShare
Previous Post

ஏப்ரல் 16- தேர்தல்!

Next Post

சூரிய சக்தி மேற்கூரை அமைப்பு! – தேசிய அளவிலான இயக்கத்தைத் தொடங்கப் பிரதமர் மோடி உத்தரவு!

Related News

எதிர்கால போருக்குத் தயாராகும் இந்தியா : ஒருங்கிணைந்த கட்டளை மையம் அமைக்க முடிவு!

இந்தியாவுக்கு அச்சுறுத்தல்? – பாக். – சவூதி பரஸ்பர பாதுகாப்பு ஒப்பந்தம்!

கற்பனையில் மிதக்கும் பாக்., ஃபீல்ட் மார்ஷல் : கானல் நீராகுமா இஸ்லாமிய நேட்டோ?

பாகிஸ்தான் பயங்கரவாதிகள் ஒப்புதல் : ஜெய்ஸ்-இ-முகமதுவிற்கு அசிம் முனீர் முழு ஆதரவு!

அமெரிக்க காதலி இந்தியாவில் எரித்துக் கொலை : பகீர் கிளப்பும் பின்னணி – நடந்தது என்ன?

தீவு ஒன்றுதான் இரு நாடுகளுக்கும் சொந்தமாம் : 360 ஆண்டுகால ரகசியத்தை தாங்கி நிற்கும் தீவு!

Load More

அண்மைச் செய்திகள்

ஊருக்குள் ஊடுருவும் யானைகளால் பரிதவிக்கும் மக்கள் – செயற்கை நுண்ணறிவை பயன்படுத்த அரசுக்கு கோரிக்கை!

நவராத்திரி விழா கொண்டாட்டம்… – சூடுபிடிக்கும் கொலு பொம்மை விற்பனை….!

கழிவுநீரால் நிரம்பி வழியும் சாலைகள் : சொந்த வீடுகளை விட்டு வெளியேறும் மக்களின் அவலம்!

தவெகவுக்கு சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி!

சட்டப்பேரவையில் வெளியிட்ட 256 திட்டங்களை கைவிட தமிழக அரசு முடிவு – அண்ணாமலை கண்டனம்!

தமிழ் ஜனம் செய்தி குழுவை மிரட்டிய திமுக பிரமுகர் மீது காவல்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் – சென்னை பத்திரிகையாளர் மன்றம் வலியுறுத்தல்!

மந்தகதியில் மழைநீர் வடிகால் பணிகள் : அம்பலப்படுத்திய தமிழ் ஜனம் செய்தியாளரை தாக்க முயன்ற திமுக கவுன்சிலர் மகன்!

தமிழ் ஜனம் தொலைக்காட்சி செய்தியாளரை தாக்க முயன்ற திமுக பிரமுகர் : அண்ணாமலைக் கண்டனம்

ஐக்கிய அரபு எமிரேட்ஸ் போட்டியை புறக்கணித்த பாகிஸ்தான் – எச்சரித்த ஐசிசி!

காட்டுமன்னார்கோவில் அருகே கொதிக்கும் எண்ணெயை கணவர் காலில் ஊற்றிய மனைவி கைது!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies