இந்தியப் பெருங்கடலில் மீண்டும் ஊடுருவிய சீன உளவுக் கப்பல்!
Jun 18, 2025, 03:45 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

இந்தியப் பெருங்கடலில் மீண்டும் ஊடுருவிய சீன உளவுக் கப்பல்!

Web Desk by Web Desk
Jan 23, 2024, 03:09 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

சீனாவின் “சீயாங் யங் ஹாங் 03” என்ற உளவுக் கப்பல் தற்போது இந்தியப் பெருங்கடல் பகுதியில் ஊடுருவி இருக்கிறது. அதேசமயம், அக்கப்பல் வருகை ஏற்கெனவே திட்டமிட்ட ஒன்று என்று மாலத்தீவு அரசு விளக்கம் அளித்திருக்கிறது.

சர்வதேச நாடுகளின் சரக்குக் கப்பல் போக்குவரத்தில் இந்தியப் பெருங்கடல் முக்கியப் பங்கு வகிக்கிறது. ஆகவே, இந்தியப் பெருங்கடல் பகுதியில் இந்தியா ஆதிக்கம் செலுத்தி வருவதை சீனாவால் பொறுத்துக்கொள்ள இயலவில்லை.

எனவே, சீனா கடந்த 2008-ம் ஆண்டு முதல் இந்தியப் பெருங்கடல் பகுதிக்கு தனது உளவுக் கப்பல்களை அனுப்பி உளவு பார்க்கும் வேலையை செய்து வருகிறது. மேலும், இந்திய பெருங்கடலில் தனது ஆதிக்கத்தை நிலைநாட்ட சீனா தொடர்ந்து முயற்சி செய்கிறது.

அதோடு, இந்தியப் பெருங்கடல் பகுதியில் இருந்தவாறு சீன உளவு கப்பல்கள் மூலம் இந்தியாவிலுள்ள தொழிற்சாலைகள், அணுமின் நிலையங்கள், ராக்கெட் ஏவுதளம் உள்ளிட்டவை குறித்து மிக எளிதாக தகவல்களை திரட்ட முடியும்.

அதேபோல, சென்னை, விசாகப்பட்டினம், கொச்சி வரை உள்ள இந்திய இராணுவத் தளங்கள் பற்றிய தகவல்களையும் சேகரிக்க முடியும் எனவே, இந்தியப் பெருங்கடல் பகுதியில் சீன உளவுக் கப்பல்கள் அத்துமீறி நுழைவதற்கு இந்தியா தொடர்ந்து எதிர்ப்புத் தெரிவித்து வருகிறது.

அந்த வகையில், கடந்த மாதம் இலங்கைக்கு வரவிருந்த சீன ஆய்வுக் கப்பலை இந்தியா கடைசி நிமிடத்தில் தடுத்து நிறுத்தியது. இந்த சூழலில், இந்தியாவுக்கும், மாலத்தீவுக்கும் இடையே ஏற்பட்டிருக்கும் விரிசலை சீனா தனக்கு சாதகமாக பயன்படுத்தத் தொடங்கி இருக்கிறது.

அதன்படி, மாலத்தீவை மையமாக வைத்து இந்தியப் பெருங்கடல் பகுதியில் தனது இராணுவ பலத்தை அதிகரிக்கும் நடவடிக்கையை சீனா தொடங்கி இருக்கிறது. இதன் ஒரு பகுதியாக, சீனாவின் “சீயாங் யங் ஹாங் 03” என்ற ஆய்வுக் கப்பல் தற்போது இந்தியப் பெருங்கடல் பகுதியில் ஊடுருவி இருக்கிறது.

இந்தக் கப்பல் நேற்று காலை இந்தோனேஷியாவில் இருந்து இந்திய கடல் பகுதிக்குள் வந்திருக்கிறது. இக்கப்பல் மாலத்தீவை நோக்கிச் சென்று கொண்டிருக்கிறது. இது அடுத்த வாரம் மாலத்தீவு துறைமுகத்தை சென்றடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அதேசமயம், இக்கப்பல் மூலம் இந்தியப் பெருங்கடலின் முக்கியப் பகுதிகளை ஆய்வு செய்ய சீனா திட்டமிட்டிருப்பதாகத் தகவல் வெளியாகி இருக்கிறது. அந்தளவுக்கு இந்தக் கப்பலில் ஆண்டெனா, சென்சார் மற்றும் செயற்கைகோள்கள் பறக்க விடுவதை கண்காணிக்கும் கருவிகள், இராணுவ தளங்களை ஆய்வு செய்து படம் பிடிக்கும் எலக்ரானிக் கருவிகள் உள்பட பல்வேறு அதிநவீன கருவிகள் இருப்பதாகக் கூறப்படுகிறது.

இதே கப்பல்தான் கடந்த மாதம் இலங்கைக்கு வருவதாக இருந்தது. இந்தியாவின் அழுத்தம் காரணமாக அக்கப்பலுக்கு இலங்கை அரசு அனுமதி மறுத்து விட்டது. ஆகவே, தற்போது மாலத்தீவு உதவியுடன் சீனா அக்கப்பலை இந்தியப் பெருங்கடலில் ஊடுருவச் செய்திருக்கிறது.

இதனிடையே, அந்தக் கப்பல் வருகை ஏற்கெனவே திட்டமிடப்பட்ட ஒன்று என்று மாலத்தீவு அரசு விளக்கம் அளித்திருக்கிறது. மாலத்தீவு அதிபர் முகமது முய்ஸு சமீபத்தில் சீனாவுக்கு சென்று விட்டு திரும்பிய நிலையில், சீன உளவுக் கப்பல் இந்தியாவை நெருங்கி வந்திருப்பது முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது.

Tags: china shipIndian Ocean
ShareTweetSendShare
Previous Post

வெளிநாட்டு மருத்துவா்களுக்கான பதிவு உரிமம்: வழிகாட்டுதல் வெளியீடு!

Next Post

இராமர் கோவில் பிரதிஷ்டை– விளக்கேற்றி கின்னஸ் சாதனை படைத்த மாணவர்கள்!

Related News

இந்தியாவின் ராஜ தந்திரம் வெற்றி : GREY பட்டியலில் மீண்டும் சேர்க்கப்படும் பாகிஸ்தான்!

அமெரிக்காவுக்கு பின்னடைவு : F -35 போர் விமானத்தை சுட்டு வீழ்த்தியதா ஈரான்?

இஸ்ரேலின் சதுரங்க ஆட்டம் – திருப்பியடிக்கும் ஈரான் : மேற்கு ஆசியாவின் எதிர்காலம் என்ன?

இஸ்ரேல் – ஈரான் போர் : இந்தியாவுக்கு பாதிப்பா?

துருக்கிக்கு அடிமேல் அடி : இந்தியாவுடன் சைப்ரஸ் கைகோர்த்தது ஏன்?

டாஸ்மாக் முறைகேடு விவகாரத்தில் ஆகாஷ் பாஸ்கரன், விக்ரம் ரவீந்திரனுக்குத் தொடர்பு இருப்பதற்கான ஆவணங்களை தாக்கல் செய்ய உயர்நீதிமன்றம் உத்தரவு!

Load More

அண்மைச் செய்திகள்

பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்கு எஃப்ஏடிஎஃப் கண்டனம்!

சொத்துக்குவிப்பு வழக்கில் திமுக எம்பி ஆ.ராசா மீது குற்றச்சாட்டுப் பதிவு செய்யப்படும் : சென்னை சிறப்பு நீதிமன்றம்!

சத்துணவில் ஊழல் : படிக்கும் பிள்ளைகள் வயிற்றில் அடிக்கும் திமுக : நயினார் நாகேந்திரன் குற்றச்சாட்டு!

முதலமைச்சருக்கு, தேர்தல் வாக்குறுதி எண் 54 நினைவிருக்கிறதா? : அண்ணாமலை கேள்வி!

முருகன் மாநாட்டிற்காக 21ஆம் தேதி சிறப்பு ரயில் ஏற்பாடு : நயினார் நாகேந்திரன்

கோவை : குடியிருப்புகள் மத்தியில் ஜெபக்கூட்டம் கட்ட எதிர்ப்பு!

டெல்லி : 33 இடங்களில் சுகாதார மையங்கள் திறப்பு!

கிடுகிடுவென உயர்ந்து வரும் முல்லை பெரியாறு அணை!

பல்லடம் அருகே கண்டெய்னர் கவிழ்ந்து 2 பெண்கள் பலி!

திருச்சி : நடுரோட்டில் பழுதாகி நின்ற அரசு பேருந்து – போக்குவரத்து பாதிப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies