இந்தியப் பெருங்கடலில் மீண்டும் ஊடுருவிய சீன உளவுக் கப்பல்!
Sep 12, 2026, 09:03 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

இந்தியப் பெருங்கடலில் மீண்டும் ஊடுருவிய சீன உளவுக் கப்பல்!

Abinaya Ganesan by Abinaya Ganesan
Jan 23, 2024, 03:09 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

சீனாவின் “சீயாங் யங் ஹாங் 03” என்ற உளவுக் கப்பல் தற்போது இந்தியப் பெருங்கடல் பகுதியில் ஊடுருவி இருக்கிறது. அதேசமயம், அக்கப்பல் வருகை ஏற்கெனவே திட்டமிட்ட ஒன்று என்று மாலத்தீவு அரசு விளக்கம் அளித்திருக்கிறது.

சர்வதேச நாடுகளின் சரக்குக் கப்பல் போக்குவரத்தில் இந்தியப் பெருங்கடல் முக்கியப் பங்கு வகிக்கிறது. ஆகவே, இந்தியப் பெருங்கடல் பகுதியில் இந்தியா ஆதிக்கம் செலுத்தி வருவதை சீனாவால் பொறுத்துக்கொள்ள இயலவில்லை.

எனவே, சீனா கடந்த 2008-ம் ஆண்டு முதல் இந்தியப் பெருங்கடல் பகுதிக்கு தனது உளவுக் கப்பல்களை அனுப்பி உளவு பார்க்கும் வேலையை செய்து வருகிறது. மேலும், இந்திய பெருங்கடலில் தனது ஆதிக்கத்தை நிலைநாட்ட சீனா தொடர்ந்து முயற்சி செய்கிறது.

அதோடு, இந்தியப் பெருங்கடல் பகுதியில் இருந்தவாறு சீன உளவு கப்பல்கள் மூலம் இந்தியாவிலுள்ள தொழிற்சாலைகள், அணுமின் நிலையங்கள், ராக்கெட் ஏவுதளம் உள்ளிட்டவை குறித்து மிக எளிதாக தகவல்களை திரட்ட முடியும்.

அதேபோல, சென்னை, விசாகப்பட்டினம், கொச்சி வரை உள்ள இந்திய இராணுவத் தளங்கள் பற்றிய தகவல்களையும் சேகரிக்க முடியும் எனவே, இந்தியப் பெருங்கடல் பகுதியில் சீன உளவுக் கப்பல்கள் அத்துமீறி நுழைவதற்கு இந்தியா தொடர்ந்து எதிர்ப்புத் தெரிவித்து வருகிறது.

அந்த வகையில், கடந்த மாதம் இலங்கைக்கு வரவிருந்த சீன ஆய்வுக் கப்பலை இந்தியா கடைசி நிமிடத்தில் தடுத்து நிறுத்தியது. இந்த சூழலில், இந்தியாவுக்கும், மாலத்தீவுக்கும் இடையே ஏற்பட்டிருக்கும் விரிசலை சீனா தனக்கு சாதகமாக பயன்படுத்தத் தொடங்கி இருக்கிறது.

அதன்படி, மாலத்தீவை மையமாக வைத்து இந்தியப் பெருங்கடல் பகுதியில் தனது இராணுவ பலத்தை அதிகரிக்கும் நடவடிக்கையை சீனா தொடங்கி இருக்கிறது. இதன் ஒரு பகுதியாக, சீனாவின் “சீயாங் யங் ஹாங் 03” என்ற ஆய்வுக் கப்பல் தற்போது இந்தியப் பெருங்கடல் பகுதியில் ஊடுருவி இருக்கிறது.

இந்தக் கப்பல் நேற்று காலை இந்தோனேஷியாவில் இருந்து இந்திய கடல் பகுதிக்குள் வந்திருக்கிறது. இக்கப்பல் மாலத்தீவை நோக்கிச் சென்று கொண்டிருக்கிறது. இது அடுத்த வாரம் மாலத்தீவு துறைமுகத்தை சென்றடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அதேசமயம், இக்கப்பல் மூலம் இந்தியப் பெருங்கடலின் முக்கியப் பகுதிகளை ஆய்வு செய்ய சீனா திட்டமிட்டிருப்பதாகத் தகவல் வெளியாகி இருக்கிறது. அந்தளவுக்கு இந்தக் கப்பலில் ஆண்டெனா, சென்சார் மற்றும் செயற்கைகோள்கள் பறக்க விடுவதை கண்காணிக்கும் கருவிகள், இராணுவ தளங்களை ஆய்வு செய்து படம் பிடிக்கும் எலக்ரானிக் கருவிகள் உள்பட பல்வேறு அதிநவீன கருவிகள் இருப்பதாகக் கூறப்படுகிறது.

இதே கப்பல்தான் கடந்த மாதம் இலங்கைக்கு வருவதாக இருந்தது. இந்தியாவின் அழுத்தம் காரணமாக அக்கப்பலுக்கு இலங்கை அரசு அனுமதி மறுத்து விட்டது. ஆகவே, தற்போது மாலத்தீவு உதவியுடன் சீனா அக்கப்பலை இந்தியப் பெருங்கடலில் ஊடுருவச் செய்திருக்கிறது.

இதனிடையே, அந்தக் கப்பல் வருகை ஏற்கெனவே திட்டமிடப்பட்ட ஒன்று என்று மாலத்தீவு அரசு விளக்கம் அளித்திருக்கிறது. மாலத்தீவு அதிபர் முகமது முய்ஸு சமீபத்தில் சீனாவுக்கு சென்று விட்டு திரும்பிய நிலையில், சீன உளவுக் கப்பல் இந்தியாவை நெருங்கி வந்திருப்பது முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது.

Tags: china shipIndian Ocean
Share
Tweet
SendShare
Previous Post

வெளிநாட்டு மருத்துவா்களுக்கான பதிவு உரிமம்: வழிகாட்டுதல் வெளியீடு!

Next Post

இராமர் கோவில் பிரதிஷ்டை– விளக்கேற்றி கின்னஸ் சாதனை படைத்த மாணவர்கள்!

Related News

பெரிம் தீவை கைப்பற்ற முயலும் ஹெளதி தீவிரவாதிகள் : அச்சத்தில் உலக நாடுகள் : பின்னணி என்ன? – சிறப்பு தொகுப்பு!

அனைவருடனும் நட்பு, யாருடனும் கூட்டணி இல்லை : பிரிக்ஸ் மூலம் இந்தியா சொல்லும் செய்தி – சிறப்பு தொகுப்பு!

நாடு முழுவதும் 80 லட்சம் சிறுமியருக்கு கர்ப்பப்பை வாய் புற்றுநோய் தடுப்பூசி!

ராஜதந்திரத்தின் உச்சக்கட்டம் மோடியுடன் ஜி ஜின்பிங் சந்திப்பு : உலக நாடுகள் உன்னிப்பாக கவனிப்பது ஏன்? – சிறப்பு கட்டுரை!

திருச்சியில் மண்டல அளவிலான டென்னிஸ் போட்டி – தமிழ் ஜனம் தொலைக்காட்சி நிர்வாக இயக்குநர் மது தொடங்கி வைத்தார்!

அமெரிக்காவில் விரைவில் UPI சேவை தொடக்கம்!

Load More

அண்மைச் செய்திகள்

திருப்பரங்குன்றம் மலையை அளவீடு செய்யும் விவகாரத்தில் அறநிலையத்துறைக்கு என்ன வேலை? – உயர் நீதிமன்றம் கேள்வி!

ரஷ்ய அதிபருடன் ஒரே காரில் பயணம் செய்த பிரதமர் மோடி : புதினின் ‘ஆரஸ் செனாட்’ கார் : வியக்க வைக்கும் பாதுகாப்பு ரகசியங்கள் – சிறப்பு தொகுப்பு!

உலக மக்களுக்கு புதிய வாய்ப்புகளை உருவாக்கும் பிரிக்ஸ் – பிரதமர் மோடி

ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத் பிறந்த நாள் – அமித் ஷா வாழ்த்து!

ஏ.ஐ. தொழில்நுட்பம் இருமுனை வாள் போன்றது – நிர்மலா சீதாராமன்

ஓட்டுநர் உரிமம் மற்றும் ஆர்சி சான்றிதழ்களை பதிவிறக்கம் செய்யும் வசதி – 15ஆம் தேதி முதல் அமல்!

விநாயகர் சதுர்த்தி விடுமுறை – அரியலூர், பெரம்பலூரில் போதிய பேருந்துகள் இயக்கப்படாததால் பயணிகள் அவதி!

தாம்பரம் GST சாலையில் அணிவகுத்த வாகனங்கள் – 500க்கு மேற்பட்ட போலீசார் குவிப்பு!

ஈரான் அதிபர் மசூத் பெசஷ்கியானுடன் பிரதமர் மோடி பேச்சுவார்த்தை!

பிரிக்ஸ் மாநாட்டில் பங்கேற்க டெல்லி வருகை தந்துள்ள ரஷ்ய அதிபர் புதின்; திருக்குறள் வழங்கி வரவேற்றார் பிரதமர் மோடி

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies