இந்தியப் பெருங்கடலில் மீண்டும் ஊடுருவிய சீன உளவுக் கப்பல்!
Jul 29, 2026, 12:00 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

இந்தியப் பெருங்கடலில் மீண்டும் ஊடுருவிய சீன உளவுக் கப்பல்!

Abinaya Ganesan by Abinaya Ganesan
Jan 23, 2024, 03:09 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

சீனாவின் “சீயாங் யங் ஹாங் 03” என்ற உளவுக் கப்பல் தற்போது இந்தியப் பெருங்கடல் பகுதியில் ஊடுருவி இருக்கிறது. அதேசமயம், அக்கப்பல் வருகை ஏற்கெனவே திட்டமிட்ட ஒன்று என்று மாலத்தீவு அரசு விளக்கம் அளித்திருக்கிறது.

சர்வதேச நாடுகளின் சரக்குக் கப்பல் போக்குவரத்தில் இந்தியப் பெருங்கடல் முக்கியப் பங்கு வகிக்கிறது. ஆகவே, இந்தியப் பெருங்கடல் பகுதியில் இந்தியா ஆதிக்கம் செலுத்தி வருவதை சீனாவால் பொறுத்துக்கொள்ள இயலவில்லை.

எனவே, சீனா கடந்த 2008-ம் ஆண்டு முதல் இந்தியப் பெருங்கடல் பகுதிக்கு தனது உளவுக் கப்பல்களை அனுப்பி உளவு பார்க்கும் வேலையை செய்து வருகிறது. மேலும், இந்திய பெருங்கடலில் தனது ஆதிக்கத்தை நிலைநாட்ட சீனா தொடர்ந்து முயற்சி செய்கிறது.

அதோடு, இந்தியப் பெருங்கடல் பகுதியில் இருந்தவாறு சீன உளவு கப்பல்கள் மூலம் இந்தியாவிலுள்ள தொழிற்சாலைகள், அணுமின் நிலையங்கள், ராக்கெட் ஏவுதளம் உள்ளிட்டவை குறித்து மிக எளிதாக தகவல்களை திரட்ட முடியும்.

அதேபோல, சென்னை, விசாகப்பட்டினம், கொச்சி வரை உள்ள இந்திய இராணுவத் தளங்கள் பற்றிய தகவல்களையும் சேகரிக்க முடியும் எனவே, இந்தியப் பெருங்கடல் பகுதியில் சீன உளவுக் கப்பல்கள் அத்துமீறி நுழைவதற்கு இந்தியா தொடர்ந்து எதிர்ப்புத் தெரிவித்து வருகிறது.

அந்த வகையில், கடந்த மாதம் இலங்கைக்கு வரவிருந்த சீன ஆய்வுக் கப்பலை இந்தியா கடைசி நிமிடத்தில் தடுத்து நிறுத்தியது. இந்த சூழலில், இந்தியாவுக்கும், மாலத்தீவுக்கும் இடையே ஏற்பட்டிருக்கும் விரிசலை சீனா தனக்கு சாதகமாக பயன்படுத்தத் தொடங்கி இருக்கிறது.

அதன்படி, மாலத்தீவை மையமாக வைத்து இந்தியப் பெருங்கடல் பகுதியில் தனது இராணுவ பலத்தை அதிகரிக்கும் நடவடிக்கையை சீனா தொடங்கி இருக்கிறது. இதன் ஒரு பகுதியாக, சீனாவின் “சீயாங் யங் ஹாங் 03” என்ற ஆய்வுக் கப்பல் தற்போது இந்தியப் பெருங்கடல் பகுதியில் ஊடுருவி இருக்கிறது.

இந்தக் கப்பல் நேற்று காலை இந்தோனேஷியாவில் இருந்து இந்திய கடல் பகுதிக்குள் வந்திருக்கிறது. இக்கப்பல் மாலத்தீவை நோக்கிச் சென்று கொண்டிருக்கிறது. இது அடுத்த வாரம் மாலத்தீவு துறைமுகத்தை சென்றடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அதேசமயம், இக்கப்பல் மூலம் இந்தியப் பெருங்கடலின் முக்கியப் பகுதிகளை ஆய்வு செய்ய சீனா திட்டமிட்டிருப்பதாகத் தகவல் வெளியாகி இருக்கிறது. அந்தளவுக்கு இந்தக் கப்பலில் ஆண்டெனா, சென்சார் மற்றும் செயற்கைகோள்கள் பறக்க விடுவதை கண்காணிக்கும் கருவிகள், இராணுவ தளங்களை ஆய்வு செய்து படம் பிடிக்கும் எலக்ரானிக் கருவிகள் உள்பட பல்வேறு அதிநவீன கருவிகள் இருப்பதாகக் கூறப்படுகிறது.

இதே கப்பல்தான் கடந்த மாதம் இலங்கைக்கு வருவதாக இருந்தது. இந்தியாவின் அழுத்தம் காரணமாக அக்கப்பலுக்கு இலங்கை அரசு அனுமதி மறுத்து விட்டது. ஆகவே, தற்போது மாலத்தீவு உதவியுடன் சீனா அக்கப்பலை இந்தியப் பெருங்கடலில் ஊடுருவச் செய்திருக்கிறது.

இதனிடையே, அந்தக் கப்பல் வருகை ஏற்கெனவே திட்டமிடப்பட்ட ஒன்று என்று மாலத்தீவு அரசு விளக்கம் அளித்திருக்கிறது. மாலத்தீவு அதிபர் முகமது முய்ஸு சமீபத்தில் சீனாவுக்கு சென்று விட்டு திரும்பிய நிலையில், சீன உளவுக் கப்பல் இந்தியாவை நெருங்கி வந்திருப்பது முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது.

Tags: china shipIndian Ocean
ShareTweetSendShare
Previous Post

வெளிநாட்டு மருத்துவா்களுக்கான பதிவு உரிமம்: வழிகாட்டுதல் வெளியீடு!

Next Post

இராமர் கோவில் பிரதிஷ்டை– விளக்கேற்றி கின்னஸ் சாதனை படைத்த மாணவர்கள்!

Related News

டாஸ்மாக் கடைகள் தனியார் மயம்? : தமிழக அரசு திட்டம் என தகவல்!

கரூரில் செந்தில் பாலாஜிக்கு நெருக்கமானவர்களின் வீடுகளில் லஞ்ச ஒழிப்பு துறையினர் சோதனை!

இன்றைய தங்கம் விலை!

நீட் சட்டத்திருத்த மசோதா விவாதம் – எதிர்கட்சிகள் மீது மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜு குற்றச்சாட்டு!

கொல்கத்தா போராட்டத்தில் வன்முறையை தூண்டும் விதமாக செயல்பட்ட சமூக விரோதிகள் மீது குண்டாஸ் – அமைச்சர் அக்னிமித்ரா பால் திட்டவட்டம்!

தனது தரப்பு வாதத்தை கேட்க வேண்டும் என்று கோர கே.என்.நேருவுக்கு அடிப்படை உரிமை இல்லை – உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு வாதம்!

Load More

அண்மைச் செய்திகள்

டெல்லி போராட்டம் – மத்திய அமைச்சர்கள் அமித் ஷா, ஜெ.பி. நட்டா ஆலோசனை!

ஃபேஸ்புக்கில் பிரதமர் வீடியோ நீக்கப்பட்ட விவகாரத்தில் மெட்டா நிறுவனத்தின் பதில் திருப்தி அளிக்கவில்லை – மத்திய அரசு

டெல்லியில் போராட்டம் நடத்தியவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க கூடாது – உச்ச நீதிமன்றம் உத்தரவு!

பாதுகாப்பு தளவாட ஏற்றுமதியில் இந்தியா மகத்தான வெற்றி : பாதுகாப்புத் துறையில் தன்னிறைவு – சிறப்பு தொகுப்பு!

திமுக எம்எல்ஏ மார்க்கண்டேயன் ஜாமின் மனு மீதான தீர்ப்பு – தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பு!

பிரதமர் மோடி பதிவிட்ட வீடியோ தவறுதலாக நீக்கம் – மெட்டா நிறுவனம் விளக்கம்!

யூரியாவுக்கு மாற்றாக “அன்ஹைட்ரஸ் அமோனியா” ; மத்திய அரசு அனுமதி!

கரூரில் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு அரசுப்பணி தொடர்பான தீர்ப்பு – நயினார் நாகேந்திரன் கருத்து!

மனோன்மணியம் சுந்தரனார் பல்கலை பட்டமளிப்பு விழா – ஆளுநர் ராஜேந்திர அர்லேகர் பங்கேற்பு!

மேகதாது அணை விவகாரத்தில் பிரதமர் உடனடியாக தலையிட வேண்டும் – முதல்வர் விஜய் கடிதம்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies