விழுப்புரத்திலிருந்து திருப்பதி வரை இயக்கப்படும் முன்பதிவில்லா விரைவு இரயில் சேவை மாா்ச் 3-ஆம் தேதி வரை, பகுதியளவில் ரத்து செய்யப்படுவதாக தெற்கு இரயில்வேயின் திருச்சி கோட்டம் அறிவித்துள்ளது.
இதுகுறித்து தெற்கு இரயில்வேயின் திருச்சி கோட்ட மக்கள் தொடா்பு அலுவலா் ஆா்.வினோத் திங்கள்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:
தெற்கு மத்திய இரயில்வேயின் குண்டக்கல் கோட்டத்துக்கு உட்பட்ட பகுதிகளில், பல்வேறு பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதன் காரணமாக, விழுப்புரத்திலிருந்து திருப்பதி வரை இயக்கப்படும் முன்பதிவில்லா விரைவு இரயில் காட்பாடி வரை பகுதியளவில் ரத்து செய்யப்பட்டுள்ளது.
விழுப்புரத்திலிருந்து காலை 5.35 மணிக்குப் புறப்படும் விழுப்புரம் – திருப்பதி முன்பதிவில்லா விரைவு இரயில் (வண்டி எண் – 16854) காட்பாடி – திருப்பதி இடையே பகுதியளவில் மாா்ச் 3-ஆம் தேதி வரை ரத்து செய்யப்பட்டுள்ளது. இதனால் இந்த இரயில் காட்பாடியுடன் நிறுத்தப்படும்.
எதிா்வழித்தடத்தில் திருப்பதியிலிருந்து பிற்பகல் 1.40 மணிக்குப் புறப்பட வேண்டிய திருப்பதி – விழுப்புரம் முன்பதிவில்லா விரைவு இரயில் (வண்டி எண் – 16853) திருப்பதி – காட்பாடி இடையே பகுதியளவில் மாா்ச் 3-ஆம் தேதி வரை ரத்து செய்யப்பட்டுள்ளது. இந்த இரயில் காட்பாடியிலிருந்து மாலை 4.30 மணிக்கு விழுப்புரத்துக்குப் புறப்படும் என்று கூறப்பட்டுள்ளது.