நேதாஜி இல்லையென்றால் 1947 ஆம் ஆண்டு இந்தியாவிற்கு சுதந்திரம் இல்லை! - ஆளுநர் ரவி
Sep 13, 2026, 02:43 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

நேதாஜி இல்லையென்றால் 1947 ஆம் ஆண்டு இந்தியாவிற்கு சுதந்திரம் இல்லை! – ஆளுநர் ரவி

Murugesan M by Murugesan M
Jan 23, 2024, 05:16 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் இல்லை என்றால் 1947 ம் ஆண்டு இந்தியாவிற்கு சுதந்திரம் கிடைத்திருக்காது எனவும், 1942 க்கு பின்னர் காந்தியின் சுதந்திரப் போராட்டம் பலனளிக்கவில்லை என தமிழக ஆளுநர் ஆர். என்.ரவி  தெரிவித்துள்ளார்.

சென்னை அண்ணா பல்கலைக்கழக வளாகத்தின் விவேகானந்தர் அரங்கில், சுதந்திரப் போராட்ட வீரர் நேதாஜி சுபாஷ் சந்திர போஸின் 127 வது பிறந்தநாள் விழா நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சியில் தமிழக ஆளுநர் ரவி மற்றும் அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் வேல்ராஜ், இந்திய தேசிய ராணுவத்தில் பணியாற்றிய சுதந்திரப் போராட்ட வீரர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினர் கலந்து கொண்டனர்.

கூட்டத்தில் பேசிய தமிழக ஆளுநர் ஆர் .என் ரவி,

ஆங்கிலேயர் சென்ற பின்னர் நீண்ட காலம் நம் பாரம்பரியத்தை பண்பாட்டையும், ஆன்மீக சிறப்பையும் மறந்தோம். சுதந்திர போராட்ட வீரர்களை நாம் மறந்தோம். குழப்பத்திற்கும் ஆளானோம்.

நான் இந்திய தேசிய ராணுவம் குறித்து மிகவும் வியப்பு அடைகின்றேன். எண்ணற்ற வீரர்கள் இந்திய தேசிய ராணுவத்தில் பங்கு பெற்று உள்ளனர். இந்திய சுதந்திரபோராட்டத்தில் குறிப்பிடதக்கவர்களாகவும், நேதாஜியின் இந்திய தேசிய ராணுவத்திலும் தமிழர்கள் நிறைந்து இருந்துள்ளனர்.

ஒரு சிலரை மட்டும் தான் நாம் சுதந்திர போராட்ட வீரர்களாக அடையாள படுத்தி உள்ளோம். ஆனால் நமக்கு தெரியாத நிறைய சுதந்திர போராட்ட வீரராகள் பற்றி நாம் தெரிந்து கொள்ளவில்லை. நேதாஜியின் படையில் தமிழர்களின் பங்களிப்பு அதிகமாக இருந்தது என்பதை நாம் தெரிந்து கொள்ள வேண்டும். நேதாஜி பெண்கள் படையை கட்டமைத்த பின்னர் 7 தலைமுறைகளுக்கு பிறகே இந்திய இராணுவத்தில் பெண்கள் பொறுப்புகளில் அனுமதிக்கப்படுகின்றனர்.

1942 ஆம் ஆண்டிற்கு பிறகு காந்தியின் போராட்டம் பலன் அளிக்கவில்லை. இந்திய தேசிய ராணுவத்தினுடைய கட்டமைப்பு மற்றும் அவர்களின் கப்பற்படை மற்றும் விமானப்படையின் அச்சுறுத்தல் தான் நமக்கான சுதந்திரத்தை உறுதிப்படுத்தியது.

மேலும் 1947 ஆம் ஆண்டு இந்தியா சுதந்திரம் அடைவதற்கு நேதாஜியும் இந்திய தேசிய ராணுவமும் காரணம்.  நேதாஜி இல்லையென்றால் 1947ல் இந்தியாவிற்கு சுதந்திரம் கிடைத்திருக்காது.

இந்திய தேசிய காங்கிரசால் தான் இந்தியாவிற்கு சுதந்திரம் கிடைத்தது என்பதை முழுமையாக ஏற்க முடியாது. இந்தியா சுதந்திரம் அடைவதற்கு அது ஒரு சிறிய காரணம் அவ்வளவுதான். ஆனால் இந்திய தேசிய ராணுவத்தின் புரட்சி தான் இந்தியா சுதந்திரம் அடைவதற்கான மிக முக்கியமான காரணமாக இருந்தது.

அப்போதைய இங்கிலாந்து பிரதமர், இந்திய தேசிய காங்கிரஸின் போராட்டம் இந்தியா சுதந்திரம் அடைய ஒரு சிறிய காரணம் எனவும், நேதாஜியின் உடைய புரட்சியும் இந்திய தேசிய ராணுவத்தின் உடைய பலமும் தான் இந்தியாவிற்கு சுதந்திரம் வழங்க மிகப்பெரிய காரணமாக இருந்தது என குறிப்பிட்டுள்ளார் எனத் தெரிவித்தார்.

1946 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் பிரிட்டிஷார் ராணுவத்தில் இருந்த இந்தியர்களும் புரட்சியில் ஈடுபட்டனர். மேலும் இந்திய தேசிய ராணுவமும் புரட்சியில் ஈடுபட்டிருந்தது, அதனை கண்டு தான் பிரிட்டிஷார் இனி இந்த நாட்டை நம்மால் ஆள முடியாது என்ற எண்ணத்திற்கு வந்தனர். அப்போதே இந்திய தேசிய காங்கிரஸின் போராட்டம் பலனளிக்காது என தெரிந்து விட்டது. நம் பல்கலைக்கழகங்கள் நேதாஜி, INA, குறித்து ஆராய்சியில் அதிகளவில் ஈடுபட வேண்டும் என தெரிவித்தார்.

 

முன்னதாக சென்னை ராஜ் பவனில் ஆளுநர் ஆர். என். ரவி, நேதாஜி சுபாஷ் சந்திரபோஸின் பிறந்தநாளை முன்னிட்டு அவருக்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார்.

Tags: Governor R.N.RaviBirthday of Netaji Subhash Chandra Bose
Share
Tweet
SendShare
Previous Post

விழுப்புரம் – திருப்பதி விரைவு இரயில்: பகுதியளவில் ரத்து!

Next Post

டிஜிட்டல் உள்கட்டமைப்பில் வேகமாக வளர்ச்சி அடையும் இந்தியா : எஸ். ஜெய்சங்கர் பெருமிதம்!

Related News

பயங்கரவாதம், மேற்காசிய போருக்கு எதிராக பிரதமர் நரேந்திர மோடி முன்மொழிந்த பிரகடனம்; ஒருமனதாக ஏற்பு

பிரிக்ஸ் அமைப்பை மேலும் வலுப்படுத்த வேண்டும்; பிரதமர் நரேந்திர மோடி

பெரிம் தீவை கைப்பற்ற முயலும் ஹெளதி தீவிரவாதிகள் : அச்சத்தில் உலக நாடுகள் : பின்னணி என்ன? – சிறப்பு தொகுப்பு!

அனைவருடனும் நட்பு, யாருடனும் கூட்டணி இல்லை : பிரிக்ஸ் மூலம் இந்தியா சொல்லும் செய்தி – சிறப்பு தொகுப்பு!

நாடு முழுவதும் 80 லட்சம் சிறுமியருக்கு கர்ப்பப்பை வாய் புற்றுநோய் தடுப்பூசி!

ராஜதந்திரத்தின் உச்சக்கட்டம் மோடியுடன் ஜி ஜின்பிங் சந்திப்பு : உலக நாடுகள் உன்னிப்பாக கவனிப்பது ஏன்? – சிறப்பு கட்டுரை!

Load More

அண்மைச் செய்திகள்

திருச்சியில் மண்டல அளவிலான டென்னிஸ் போட்டி – தமிழ் ஜனம் தொலைக்காட்சி நிர்வாக இயக்குநர் மது தொடங்கி வைத்தார்!

அமெரிக்காவில் விரைவில் UPI சேவை தொடக்கம்!

திருப்பரங்குன்றம் மலையை அளவீடு செய்யும் விவகாரத்தில் அறநிலையத்துறைக்கு என்ன வேலை? – உயர் நீதிமன்றம் கேள்வி!

ரஷ்ய அதிபருடன் ஒரே காரில் பயணம் செய்த பிரதமர் மோடி : புதினின் ‘ஆரஸ் செனாட்’ கார் : வியக்க வைக்கும் பாதுகாப்பு ரகசியங்கள் – சிறப்பு தொகுப்பு!

உலக மக்களுக்கு புதிய வாய்ப்புகளை உருவாக்கும் பிரிக்ஸ் – பிரதமர் மோடி

ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத் பிறந்த நாள் – அமித் ஷா வாழ்த்து!

ஏ.ஐ. தொழில்நுட்பம் இருமுனை வாள் போன்றது – நிர்மலா சீதாராமன்

ஓட்டுநர் உரிமம் மற்றும் ஆர்சி சான்றிதழ்களை பதிவிறக்கம் செய்யும் வசதி – 15ஆம் தேதி முதல் அமல்!

விநாயகர் சதுர்த்தி விடுமுறை – அரியலூர், பெரம்பலூரில் போதிய பேருந்துகள் இயக்கப்படாததால் பயணிகள் அவதி!

தாம்பரம் GST சாலையில் அணிவகுத்த வாகனங்கள் – 500க்கு மேற்பட்ட போலீசார் குவிப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies