நேதாஜியின் கொள்கையும், ஆர்.எஸ்.எஸ். கொள்கையும் ஒன்றுதான்: மோகன் பகவத்!
Jul 25, 2025, 04:20 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

நேதாஜியின் கொள்கையும், ஆர்.எஸ்.எஸ். கொள்கையும் ஒன்றுதான்: மோகன் பகவத்!

Web Desk by Web Desk
Jan 24, 2024, 12:13 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

நேதாஜியின் கொள்கையும், தங்களது கொள்கையும் ஒன்றுதான் என்றும், இரண்டுக்கும் வித்தியாசம் இல்லை என்றும் ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் தலைவர் மோகன் பகவத் கூறியிருக்கிறார்.

நேதாஜி சுபாஷ் சந்திரபோஸின் 127-வது பிறந்தநாள் பராக்கிரம தினமாக நாடு முழுவதும் கொண்டாடப்பட்டது. அந்த வகையில், மேற்குவங்க மாநிலம் வடக்கு 24 பர்கானாஸ் மாவட்டத்தில் நடந்த நேதாஜி பிறந்தநாள் விழாவில் ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தின் தலைவர் மோகன் பகவத் கலந்துகொண்டார்.

நிகழ்ச்சியில் பேசிய மோகன் பகவத், “நவீன இந்தியாவின் சிற்பிகளில் நேதாஜியும் ஒருவர். எனவே, அவரின் வாழ்க்கை மற்றும் திறன்களை நாம் அறிந்து கொள்ள வேண்டும். சுதந்திரப் போராட்டத்திற்கு நேதாஜி ஆற்றிய விலைமதிப்பற்ற பங்களிப்புகளுக்கு நன்றியறிதலுடன் மட்டுமல்லாமல், அவரது குணங்கள், இலட்சியங்கள் மற்றும் கொள்கைகளை உள்வாங்குவதை உறுதிசெய்வதற்காகவும் நாம் அவரை நினைவுகூர வேண்டும்.

நேதாஜியின் கனவுகள் இன்னும் நிறைவேறவில்லை என்றால், அதை நிறைவேற்றுவது யாருடைய பொறுப்பு? தற்போதைய தலைமுறை அதை அடைவதற்காக பாடுபடுவதை அவர் பார்த்தால் மட்டுமே அது நிறைவேறும். இந்தக் கனவுகளை ஒரு தலைமுறையில் மட்டும் நிறைவேற்ற முடியாது என்பது அவருக்குத் தெரியும். அவருக்குப் பின் வரும் தலைமுறைகள் தொடர்ந்து உழைக்க வேண்டும்.

நேதாஜி விரும்பியபடி, அவரது கனவான இந்தியாவை அடைய நாம் உழைக்க வேண்டும். சுதந்திரப் போராட்ட தியாகிகள் என்ன கனவுகளுடன் நாட்டுக்காக உயிர்த் தியாகம் செய்தார்கள் என்பது உண்மையில் நமக்குத் தெரியுமா? சுதந்திரத்திற்குப் பிறகு, நாம் சுயநலத்துடன் உறங்கி விட்டோம். எனது குடும்பம் மற்றும் நான் என்பதைத் தாண்டி நாம் எதையும் பார்ப்பது கிடையாது. ஆணவம், சுயநலம் ஆகியவை தொடர்கின்றன. எனவே, நேதாஜி நமக்கு செய்ததை பெருமையுடன் எண்ணிப் பார்க்க வேண்டும்.

நேதாஜியின் மகத்தான பங்களிப்பை அங்கீகரிப்பது மிகவும் முக்கியமானது. நமது தேசத்தில் பன்முகத்தன்மை இருந்த போதிலும், அவர் அனைத்து வேறுபாடுகளுக்கும் மேலாக நாட்டை முதன்மைப்படுத்தினார். நாட்டிற்காக இராணுவத்தை உருவாக்கி வழிநடத்தினார். இது நாட்டின் மீது அவர் வைத்திருந்த அசைக்க முடியாத நம்பிக்கையைக் காட்டுகிறது. நேதாஜியின் கொள்கைக்கும், நமது கொள்கைக்கும் எந்த வேறுபாடும் இல்லை. இரண்டும் ஒன்றுதான்” என்றார்.

Tags: west bengalMohan bagawatParakram Diwas
ShareTweetSendShare
Previous Post

உலக பேட்மிண்டன் தரவரிசை : இந்திய வீரர்கள் முதலிடம்!

Next Post

ஜன் நாயக் கர்பூரி தாக்கூருக்கு பாரத ரத்னா விருது! – பிரதமர் மோடி மகிழ்ச்சி!

Related News

பிரதமர் மோடியின் புதிய பாணி : எதிரி நாடுகளை அடிபணிய வைக்கும் அதிசயம்!

நாடாளுமன்றம் முடக்கம் – 2 நாளில் ரூ.25 கோடி வீண் – மக்கள் பணத்தை வீணடிக்கும் எதிர்க்கட்சிகள்!

ஏழ்மையை பயன்படுத்தி சிறுநீரகங்கள் திருட்டு: திமுக எம்எல்ஏ.,விற்கு தொடர்பா?

50 பேருடன் மாயமான ரஷ்ய விமானம் : உடைந்த பாகங்கள் மீட்பு – பயணிகள் நிலை என்ன?

மோசடியில் புது ரூட் : போலி தூதரகம் தொடங்கி பணம் சுருட்டிய கில்லாடி!

கங்கை கொண்ட சோழபுரம் கோயில் : சோழர்கள் கட்டடக்கலைக்கு வரலாற்று சான்று!

Load More

அண்மைச் செய்திகள்

ரூ.96 கோடி அம்போ… : ரவுடிகளின் ராஜ்ஜியமான ஈரடுக்கு பேருந்து நிலையம்!

வலிமையான பாஸ்போர்ட் பட்டியல் : உலகளவில் 77வது இடத்திற்கு இந்தியா முன்னேற்றம்!

ஏவுகணைத் திட்டம் டமால் : மீண்டும் மண்ணை கவ்விய பாகிஸ்தானின் ஷாஹீன்-3!

தமிழக பெண்கள் திமுக அரசின் மீது கடும் அதிருப்தியில் இருக்கிறார்கள் : அண்ணாமலை

கழிவறையில் ரேஷன் கடையின் அரிசி மூட்டைகள் : திமுக அரசுக்கு நயினார் நாகேந்திரன் கண்டனம்!

எடப்பாடி பழனிசாமிக்கு இந்து முன்னணி கண்டனம்!

முதலமைச்சர் ஸ்டாலின் நலமுடன் உள்ளார் – மருத்துவமனை நிர்வாகம் அறிக்கை!

இரண்டு குழந்தைகளை கொன்ற அபிராமிக்கு சாகும் வரை ஆயுள் தண்டனை!

திமுக  ஆட்சியில் உடனடி சிகிச்சை என்பது ஏழை எளியோருக்கு எட்டாக்கனியாகவே இருக்கிறது : அண்ணாமலை குற்றச்சாட்டு!

மீன்பிடி தடை கால நிவாரணம் உயர்த்தி வழங்கப்படும் – எடப்பாடி பழனிசாமி

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies