நேதாஜியின் கொள்கையும், ஆர்.எஸ்.எஸ். கொள்கையும் ஒன்றுதான்: மோகன் பகவத்!
Sep 13, 2026, 08:05 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

நேதாஜியின் கொள்கையும், ஆர்.எஸ்.எஸ். கொள்கையும் ஒன்றுதான்: மோகன் பகவத்!

Abinaya Ganesan by Abinaya Ganesan
Jan 24, 2024, 12:13 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

நேதாஜியின் கொள்கையும், தங்களது கொள்கையும் ஒன்றுதான் என்றும், இரண்டுக்கும் வித்தியாசம் இல்லை என்றும் ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் தலைவர் மோகன் பகவத் கூறியிருக்கிறார்.

நேதாஜி சுபாஷ் சந்திரபோஸின் 127-வது பிறந்தநாள் பராக்கிரம தினமாக நாடு முழுவதும் கொண்டாடப்பட்டது. அந்த வகையில், மேற்குவங்க மாநிலம் வடக்கு 24 பர்கானாஸ் மாவட்டத்தில் நடந்த நேதாஜி பிறந்தநாள் விழாவில் ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தின் தலைவர் மோகன் பகவத் கலந்துகொண்டார்.

நிகழ்ச்சியில் பேசிய மோகன் பகவத், “நவீன இந்தியாவின் சிற்பிகளில் நேதாஜியும் ஒருவர். எனவே, அவரின் வாழ்க்கை மற்றும் திறன்களை நாம் அறிந்து கொள்ள வேண்டும். சுதந்திரப் போராட்டத்திற்கு நேதாஜி ஆற்றிய விலைமதிப்பற்ற பங்களிப்புகளுக்கு நன்றியறிதலுடன் மட்டுமல்லாமல், அவரது குணங்கள், இலட்சியங்கள் மற்றும் கொள்கைகளை உள்வாங்குவதை உறுதிசெய்வதற்காகவும் நாம் அவரை நினைவுகூர வேண்டும்.

நேதாஜியின் கனவுகள் இன்னும் நிறைவேறவில்லை என்றால், அதை நிறைவேற்றுவது யாருடைய பொறுப்பு? தற்போதைய தலைமுறை அதை அடைவதற்காக பாடுபடுவதை அவர் பார்த்தால் மட்டுமே அது நிறைவேறும். இந்தக் கனவுகளை ஒரு தலைமுறையில் மட்டும் நிறைவேற்ற முடியாது என்பது அவருக்குத் தெரியும். அவருக்குப் பின் வரும் தலைமுறைகள் தொடர்ந்து உழைக்க வேண்டும்.

நேதாஜி விரும்பியபடி, அவரது கனவான இந்தியாவை அடைய நாம் உழைக்க வேண்டும். சுதந்திரப் போராட்ட தியாகிகள் என்ன கனவுகளுடன் நாட்டுக்காக உயிர்த் தியாகம் செய்தார்கள் என்பது உண்மையில் நமக்குத் தெரியுமா? சுதந்திரத்திற்குப் பிறகு, நாம் சுயநலத்துடன் உறங்கி விட்டோம். எனது குடும்பம் மற்றும் நான் என்பதைத் தாண்டி நாம் எதையும் பார்ப்பது கிடையாது. ஆணவம், சுயநலம் ஆகியவை தொடர்கின்றன. எனவே, நேதாஜி நமக்கு செய்ததை பெருமையுடன் எண்ணிப் பார்க்க வேண்டும்.

நேதாஜியின் மகத்தான பங்களிப்பை அங்கீகரிப்பது மிகவும் முக்கியமானது. நமது தேசத்தில் பன்முகத்தன்மை இருந்த போதிலும், அவர் அனைத்து வேறுபாடுகளுக்கும் மேலாக நாட்டை முதன்மைப்படுத்தினார். நாட்டிற்காக இராணுவத்தை உருவாக்கி வழிநடத்தினார். இது நாட்டின் மீது அவர் வைத்திருந்த அசைக்க முடியாத நம்பிக்கையைக் காட்டுகிறது. நேதாஜியின் கொள்கைக்கும், நமது கொள்கைக்கும் எந்த வேறுபாடும் இல்லை. இரண்டும் ஒன்றுதான்” என்றார்.

Tags: west bengalMohan bagawatParakram Diwas
Share
Tweet
SendShare
Previous Post

உலக பேட்மிண்டன் தரவரிசை : இந்திய வீரர்கள் முதலிடம்!

Next Post

ஜன் நாயக் கர்பூரி தாக்கூருக்கு பாரத ரத்னா விருது! – பிரதமர் மோடி மகிழ்ச்சி!

Related News

திருச்சியில் புதிய தலைமைச் செயலகம் அமைக்க வேண்டும் – மதிமுக எம்.பி துரை வைகோ வலியுறுத்தல்!

தமிழக காவல் துறையில் 29,108 புதிய பணியிடங்கள் – முதலமைச்சர் விஜய் ஒப்புதல்!

லண்டன் கார் பந்தயம் : 3-ம் இடம் பிடித்து அஜித் அணி அசத்தல்!

லண்டனில் முதலமைச்சர் விஜய் – நடிகர் அஜித் பங்கேற்ற கார் பந்தயத்தை தொடங்கி வைத்தார்!

கேரளத்தில் அறிவிக்கப்படாத மின்வெட்டு – பொதுமக்கள் அவதி!

பிரிக்ஸ் மாநாட்டில் பங்கேற்ற தலைவர்களுக்கு விருந்து!

Load More

அண்மைச் செய்திகள்

பயங்கரவாதம், மேற்காசிய போருக்கு எதிராக பிரதமர் நரேந்திர மோடி முன்மொழிந்த பிரகடனம்; ஒருமனதாக ஏற்பு

பிரிக்ஸ் அமைப்பை மேலும் வலுப்படுத்த வேண்டும்; பிரதமர் நரேந்திர மோடி

பெரிம் தீவை கைப்பற்ற முயலும் ஹெளதி தீவிரவாதிகள் : அச்சத்தில் உலக நாடுகள் : பின்னணி என்ன? – சிறப்பு தொகுப்பு!

அனைவருடனும் நட்பு, யாருடனும் கூட்டணி இல்லை : பிரிக்ஸ் மூலம் இந்தியா சொல்லும் செய்தி – சிறப்பு தொகுப்பு!

நாடு முழுவதும் 80 லட்சம் சிறுமியருக்கு கர்ப்பப்பை வாய் புற்றுநோய் தடுப்பூசி!

திருச்சியில் மண்டல அளவிலான டென்னிஸ் போட்டி – தமிழ் ஜனம் தொலைக்காட்சி நிர்வாக இயக்குநர் மது தொடங்கி வைத்தார்!

அமெரிக்காவில் விரைவில் UPI சேவை தொடக்கம்!

திருப்பரங்குன்றம் மலையை அளவீடு செய்யும் விவகாரத்தில் அறநிலையத்துறைக்கு என்ன வேலை? – உயர் நீதிமன்றம் கேள்வி!

ரஷ்ய அதிபருடன் ஒரே காரில் பயணம் செய்த பிரதமர் மோடி : புதினின் ‘ஆரஸ் செனாட்’ கார் : வியக்க வைக்கும் பாதுகாப்பு ரகசியங்கள் – சிறப்பு தொகுப்பு!

உலக மக்களுக்கு புதிய வாய்ப்புகளை உருவாக்கும் பிரிக்ஸ் – பிரதமர் மோடி

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies