ரூ.1.25 லட்சம் கோடியில் 200 ரோப்வே திட்டங்கள்: நிதின் கட்கரி அறிவிப்பு!
Jul 26, 2025, 06:29 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

ரூ.1.25 லட்சம் கோடியில் 200 ரோப்வே திட்டங்கள்: நிதின் கட்கரி அறிவிப்பு!

Web Desk by Web Desk
Jan 24, 2024, 01:11 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

தேசிய ரோப்வே திட்டத்தின் கீழ் 1.25 லட்சம் கோடி ரூபாய் மதிப்பிலான 200 ரோப்வே திட்டங்களை மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் நிதின் கட்கரி அறிவித்திருக்கிறார்.

புதுடெல்லியில் ‘ரோப்வே: சிம்போசியம் – கம்-எக்ஸிபிஷன்’ என்ற தலைப்பில் உரையாற்றிய அமைச்சர் நிதின் கட்கரி, “நகரங்களில் நெரிசலைக் குறைக்கவும், மாசுபாட்டைக் குறைக்கவும், பயண நேரங்களை ஒழுங்குபடுத்தவும் நகர்ப்புற விரைவான போக்குவரத்து அமைப்பில் ரோப்வேகளை ஒருங்கிணைப்பது முக்கியமாகும்.

ரோப்வேயை பொருளாதார ரீதியாக லாபகரமானதாக மாற்ற வேண்டியதும் அவசியம். ஒட்டுமொத்த திட்டச் செலவைக் குறைப்பதன் மூலம் ரோப்வைக்களை பொருளாதார ரீதியாக லாபகரமானதாக மாற்றுவது மற்றும் நாட்டில் ரோப்வே நெட்வொர்க்கை உருவாக்க பொது மற்றும் தனியார் பங்களிப்பை ஊக்குவிப்பது எங்கள் முதன்மையான முன்னுரிமையாகும்.

மலைப்பாங்கான பகுதிகளில் சுற்றுலாவை வளர்ப்பதில் ரோப்வேகளின் இரட்டைப் பங்கையும், நகர்ப்புற பொதுப் போக்குவரத்தில் ரோப்வேயின் குறிப்பிடத்தக்க ஆற்றலையும் நாம் கவனிக்க வேண்டும். பர்வத்மாலா பரியோஜனா திட்டத்தின் கீழ், கணிசமான கட்டுமான மதிப்பீட்டில் 60 சதவீதத்தை ரோப்வே பாதைகளுக்காக கலப்பின வருடாந்திர முறையில் வழங்க அரசாங்கம் திட்டமிட்டுள்ளது.

இது தேசிய நெடுஞ்சாலைகளுக்கு வழங்கப்படும் 40 சதவீத மதிப்பிலிருந்து குறிப்பிடத்தக்க அதிகரிப்பு. இந்த நடவடிக்கையானது ரோப்வேகளின் வளர்ச்சியில் பங்குபெற அதிக தனியார் நிறுவனங்களை ஈர்ப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது. சுற்றுச்சூழல் அனுமதியின்றி ரோப்வே திட்டங்களுக்கு மாநிலங்கள் நிலத்தை வழங்கும்.

மேலும், மேக்-இன்-இந்தியா முன்முயற்சியின் கீழ், ரோப்வே உதிரிபாகங்கள் தயாரிப்பதை ஊக்குவிப்பதன் மூலம் தற்போதுள்ள கொள்கைகள் மற்றும் குறியீடுகளின் தரப்படுத்தலைக் கொண்டு வருவதற்கும், ரோப்வே தொழிற்துறையை மாற்றுவதற்கும் முன்னுரிமை அளிக்கப்படுகிறது.

இந்தியா 5 டிரில்லியன் டாலர் பொருளாதாரமாக மாறுவதற்கான பாதையில் உள்ளது. மேலும், 5-வது இடத்தில் இருந்து 3-வது பெரிய பொருளாதாரமாக மாறி இருக்கிறது. ஆகவே, காலக்கெடு, செலவு மற்றும் திறமையான, தரமான, நிலையான உள்கட்டமைப்பு மேம்பாட்டில் கவனம் செலுத்துகிறோம்” என்றார்.

இந்நிகழ்ச்சியில், சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை அமைச்சகத்தின் செயலாளர் அனுராக் ஜெயின் பேசுகையில், “குடிமக்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்துவதற்கு உள்கட்டமைப்பு மேம்பாடு நேரடியாக தொடர்புடையது. அரசாங்கம் பல்வேறு முன்முயற்சிகளை எடுத்துள்ளதோடு, நாட்டில் ‘வியாபாரத்தை எளிதாக்குவதை’ மேம்படுத்தியுள்ளது” என்றார்.

Tags: Nitin Gadkariannounces200 Ropeway Projects
ShareTweetSendShare
Previous Post

அரசு மருத்துவமனையில் சிறுவன் மரணம்! – திமுக அரசுக்கு அண்ணாமலை கண்டனம்!

Next Post

சென்னையில் கடல் தூய்மை விழிப்புணர்வு பிரசாரம்!

Related News

திருவள்ளூர் சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கு – கைது செய்யப்பட்ட இளைஞருக்கு மருத்துவ பரிசோதனை!

கங்கைகொண்ட சோழபுர விழாவில் பிரதமர் பங்கேற்பது தமிழர்களை மகிழ்ச்சி கடலில் ஆழ்த்தியுள்ளது – எல்.முருகன்

அன்புக்குரிய பிரதமரை வரவேற்பதில் தமிழகம் பெருமிதம் கொள்கிறது – அண்ணாமலை

பாரதப் பிரதமரை வரவேற்பதில் பெருமை கொள்கிறது தமிழகம் – நயினார் நாகேந்திரன்!

ஊதிய முரண்பாடுகளை களையவில்லை எனில் சிறை நிரப்பும் போராட்டம் – இடைநிலை பதிவு மூப்பு ஆசிரியர் இயக்கம் எச்சரிக்கை!

புவனகிரி சிறுமி பாலியல் வன்கொடுமை – காதலன் உள்ளிட்ட 4 பேர் கைது!

Load More

அண்மைச் செய்திகள்

பிரதமர் மோடி தமிழகம் வருகை – அரியலூர் மாவட்டத்தில் தீவிர பாதுகாப்பு!

மதுரையில் திமுக நிர்வாகிக்கு சொந்தமான ஐடி நிறுவனத்தில் GST நுண்ணறிவு பிரிவு அதிகாரிகள் சோதனை!

செம்பரம்பாக்கம் சுத்திகரிப்பு நிலையத்திற்கு செல்லும் குழாய்களில் இணைப்பு பணி!

ஆண்டிபட்டி பேரூராட்சியில் உள்ள இலவச கழிப்பறைகளில் பணம் வசூலிக்கப்படுவதாக குற்றச்சாட்டு!

ஆண்டிப்பட்டி பகுதியில் வாட்டர் ஆப்பிள் எனப்படும் நீர்க்குமிழி பழ சீசன் தொடங்கியது – விவசாயிகள் மகிழ்ச்சி!

கோயம்பேடு அருகே தனிநபர் ஆக்கிரமித்துள்ள சாலை – பொது பயன்பாட்டிற்கு கொண்டு வர பொதுமக்கள் வலியுறுத்தல்!

பிரிட்டன் : 5 கோடி ரூபாய் காப்பீட்டுத் தொகைக்கு ஆசைப்பட்டு, கால்களை வெட்டி கொண்ட மருத்துவர் கைது!

பிரதமரை எதிர்ப்பதாக நினைத்து, காங்கிரஸ் கட்சியினர் தேசத்தை எதிர்க்கின்றனர் : சிவராஜ் சிங் சௌகான்

இந்திய ராணுவம் ஆண்டு முழுவதும் 24 மணி நேரமும் தயார்நிலை இருக்க வேண்டும் : முப்படைகளின் தலைமை தளபதி அனில் சௌகன்

நீலகிரிக்கு மிக கனமழைக்கான ஆரஞ்சு அலர்ட்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies