ஷாஹி ஈத்கா, ஞானவாபி மசூதிகளை இந்துக்களிடம் ஒப்படைக்க வேண்டும்!
Jan 14, 2026, 01:41 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

ஷாஹி ஈத்கா, ஞானவாபி மசூதிகளை இந்துக்களிடம் ஒப்படைக்க வேண்டும்!

Abinaya Ganesan by Abinaya Ganesan
Jan 24, 2024, 02:09 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

உத்தரப் பிரதேச மாநிலத்தில் அமைந்திருக்கும் ஷாஹி ஈத்கா, ஞானவாபி ஆகிய மசூதி வளாகங்களை இந்துக்களிடம் ஒப்படைக்க வேண்டும் என்று இந்திய தொல்லியல் ஆய்வுத் துறையின் முன்னாள் இயக்குனர் கே.கே.முகமது தெரிவித்திருக்கிறார்.

உத்தரப் பிரதேச மாநிலம் அயோத்தில் இருந்த பாபர் மசூதி, முகலாய மன்னர் பாபர் ஆட்சி காலத்தில் இராமர் கோவிலை இடித்துவிட்டுக் கட்டப்பட்டது என்றும், இதை இந்துக்களிடம் ஒப்படைக்க வேண்டும் என்றும் இந்துக்கள் தரப்பில் நீண்டகாலமாக கோரப்பட்டு வந்தது.

எனினும், பல்வேறு போராட்டங்கள் மற்றும் சட்டப் போராட்டங்களுக்குப் பிறகு, கடந்த 2019-ம் ஆண்டு அயோத்தி வழக்கில் இந்துக்களுக்குச் சாதகத் தீரப்பு வந்தது. தற்போது அங்கு பிரம்மாண்டமாக இராமர் கோவில் கட்டப்பட்டு கடந்த 22-ம் தேதி கும்பாபிஷேகம் நடத்தப்பட்டிருக்கிறது.

அதேபோல, மதுராவில் அமைந்திருக்கும் ஷாஹி ஈத்கா மசூதி, கிருஷ்ணர் பிறந்த இடமான கிருஷ்ண ஜென்ம பூமி என்றும், முகலாய ஆட்சி காலத்தில் அங்கிருந்த கிருஷ்ணர் கோவிலின் ஒரு பகுதியை இடித்து விட்டு மசூதி கட்டப்பட்டதாகவும் இந்துக்கள் தரப்பில் கூறப்பட்டு வருகிறது.

அதேபோல, காசியில் அமைந்திருக்கும் ஞானவாபி மசூதி, முகலாய அரசர் ஒளரங்கசீப் காலத்தில் 17-ம் நூற்றாண்டு, காசி விஸ்வநாதர் கோவிலின் ஒரு பகுதியை இடித்துவிட்டுக் கட்டப்பட்டது என்று இந்துக்கள் கூறி வருகின்றனர். இதை மெய்ப்பிக்கும் வகையில், தொல்லியல் துறை நடத்திய ஆய்வில், மசூதி வளாகத்தில் சிவலிங்கம் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

ஆகவே, மேற்கண்ட இரு மசூதிகளையும் இந்துக்களிடம் ஒப்படைக்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டு வருகிறது. இந்த சூழலில், இந்துக்களின் கோரிக்கைக்கு வலு சேர்க்கும் வகையில், ஷாஹி ஈத்கா மற்றும் ஞானவாபி ஆகிய 2 மசூதிகளையும் இந்துக்களிடம் ஒப்படைக்க வேண்டும் என்று இஸ்லாமிய ஆய்வாளர் கூறியிருக்கிறார்.

கேரள மாநிலத்தைச் சேர்ந்தவர் கே.கே.முகமது. இவர் ஒரு தொல்லியல் ஆராய்ச்சியாளராவார். அயோத்தியில் பாபர் மசூதி தொடர்பான சர்ச்சை எழுந்தபோது, 1976 – 77-ம் ஆண்டில் இந்திய தொல்லியல் துறையினர் ஆய்வு நடத்தினர். அப்போது, இந்தக் குழுவில் கே.கே.முகமதுவும் இடம் பெற்றிருந்தார்.

அந்த சமயத்தில், பாபர் மசூதி வளாகத்தை இந்துக்களிடம் ஒப்படைக்கும்படி வலியுறுத்தியதில், இவரும் ஒருவர். அதோடு, இந்துக்களுக்கு உரிமை உள்ள இடங்களை அவர்களிடமே ஒப்படைக்கும்படி நீண்ட காலமாகவே முஸ்லீம்களிடம் வலியுறுத்தி வருகிறார். இவர் கடந்த 2012-ம் ஆண்டு ஓய்வு பெற்று விட்டார்.

இந்த நிலையில், முன்னாள் தொல்லியல் துறை ஆய்வாளர் கே.கே.முகமது செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், “உத்தரப் பிரதேச மாநிலத்தில் கிருஷ்ணர் பிறந்த இடமாக நம்பப்படும் மதுராவில், கிருஷ்ணர் கோவிலையொட்டி கட்டப்பட்டுள்ள ஷாஹி ஈத்கா மற்றும் வாராணசியில் காசி விஸ்வநாதர் கோவிலையொட்டி அமைந்திருக்கும் ஞானவாபி வளாகம் ஆகியவற்றை இந்துக்களிடம் ஒப்படைக்க வேண்டும்.

இந்த வளாகங்கள் ஒளரங்கசீப்புடன் மட்டுமே முஸ்லீம்களை இணைக்கின்றன. ஆனால், இந்துக்களுக்கு இந்த தளங்கள் சிவன் மற்றும் கிருஷ்ணருடன் தொடர்புடையவை. நம்பிக்கையின் காரணமாக இந்துக்கள் எதிர்கொள்ளும் வேதனைகளை பார்த்திருக்கிறேன். அவர்களிடம் அறிவியல்பூர்வ ஆதாரம் எங்கு என்று கேட்க முடியாது. ஆகவே, இந்துக்களுக்கு சொந்தமான இடத்தை அவர்களுக்கே கொடுக்க வேண்டும்” என்றார்.

Tags: KASIMaduraMasqueHindustemple
ShareTweetSendShare
Previous Post

பால் புரஸ்கார் விருது பெற்ற குழந்தைகளுக்கு பரிசளித்த பிரதமர் மோடி!

Next Post

தமிழகத்தில் அடுத்த 6 நாட்களுக்கு வறண்ட வானிலை நிலவும்!

Related News

ஸ்டார்லிங் சேவையை துண்டித்த அதிநவீன ஜாமிங் தொழில்நுட்பம் – எலான் மஸ்கை அலறவிட்ட ஈரான் சீனா, ரஷ்யா உதவியதா?

வனத்தை ஆக்கிரமிக்கும் பார்த்தீனிய செடிகள் – வனவிலங்குகளை காக்க கோரிக்கை!

ஈரானில் கொடூரமாக கொல்லப்பட்ட மாணவி – இளைஞர்கள் போராட்டத்தின் அடையாளம்!

வெனிசுலா அதிபர் நான் தான் -அதிகார துஷ்பிரயோகம் அதிரடியில் டிரம்ப்!

பிரதமர் மோடியின் வருகை தமிழகத்தில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தும் – தமிழிசை சௌந்தரராஜன்

அரசியல் நன்றாக இருந்தால் தமிழர் பொங்கல்,அரசியல் நன்றாக இல்லை என்றால் திமுக பொங்கல்- அண்ணாமலை

Load More

அண்மைச் செய்திகள்

போராட்டத்தில் ஈடுபட்டு வரும் பகுதி நேர ஆசிரியர் தற்கொலை முயற்சி!

12 நாட்களில் பத்தரை லட்சம் பக்தர்கள் சபரிமலையில் சாமி தரிசனம்!

மழையால் நெற்பயிர்கள் சாய்ந்து சேதம் – விவசாயிகள் கவலை!

சென்னை தாம்பரம் அருகே தனியார் கல்லூரியில் நடைபெற்ற பொங்கல் விழா – மாணவ, மாணவிகள் பொங்கல் வைத்து வழிபாடு

சட்டமன்ற தேர்தல் கூட்டணி குறித்து ஜனவரி மாதத்திற்குள் முடிவெடுக்கப்படும் – பிரேமலதா விஜயகாந்த்!

“பெண்ணை பொய் புகார் கூற வைத்து வழக்கு” – எஸ்.ஜி.சூர்யா குற்றச்சாட்டு

சாத்தான் வேதம் ஓதுகிறது.. – ராகுலுக்கு தமிழிசை கடும் கண்டனம்

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திருச்செந்தூர் முருகன் கோயிலில் குவியும் பக்தர்கள்!

சென்னையில் பிரதமர் மாநாடு – இடம் தேர்வு பணியில் பாஜக மாநிலத்தலைவர்

தொடரும் ஆபரேஷன் சிந்தூர் – பாகிஸ்தானுக்கு ராணுவ தளபதி எச்சரிக்கை!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies