ஞானவாபி ஆய்வறிக்கை: பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்து பெற்றுக் கொள்ள உத்தரவு!
Mar 15, 2026, 09:32 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

ஞானவாபி ஆய்வறிக்கை: பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்து பெற்றுக் கொள்ள உத்தரவு!

Abinaya Ganesan by Abinaya Ganesan
Jan 24, 2024, 06:24 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

ஞானவாபி மசூதி வளாகத்தில் நடத்தப்பட்ட தொல்லியல் துறை ஆய்வறிக்கையை இரு தரப்பினரும் பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்து பெற்றுக் கொள்ளலாம் என்று வாரணாசி நீதிமன்றம் இன்று உத்தரவு பிறப்பித்திருக்கிறது.

உத்தரப் பிரதேச மாநிலம் வாரணாசியில் புகழ்பெற்ற காசி விஸ்வநாதர் கோவில் அமைந்திருக்கிறது. இதனை ஒட்டி ஞானவாபி மசூதி உள்ளது. இந்த மசூதி, முகலாய அரசர் ஒளரங்கசீப் காலத்தில் காசி விஸ்வநாதர் கோவிலின் ஒரு பகுதியை இடித்து விட்டு கட்டப்பட்டது என்று இந்துக்கள் கூறிவருகின்றனர்.

இது தொடர்பாக, இந்துக்கள் தரப்பில் தொடரப்பட்ட வழக்கில், மசூதிக்குள் தொல்லியல் துறை ஆய்வு செய்து அறிக்கை தாக்கல் செய்யும்படி வாரணாசி நீதிமன்றம் உத்தரவிட்டது. அதன்படி, தொல்லியல் துறை அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டபோது, மசூதி வளாகத்தில் சிவலிங்கம் கண்டுபிடிக்கப்பட்டது.

இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், தொல்லியல் துறையின் ஆய்வும் நீண்டு கொண்டே சென்றது. நிறைவாக, தொல்லியல் துறை ஆய்வறிக்கையை டிசம்பர் 18-ம் தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும் என்று வாரணாசி நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.

அதன்படி, கடந்த மாதம் 18-ம் தேதி ஞானவாபி மசூதி தொடர்பான ஆய்வறிக்கையை தொல்லியல் துறை அதிகாரிகள் தாக்கல் செய்தனர். அதேசமயம், இந்த ஆய்வறிக்கையை 4 வாரங்களுக்கு வெளியிட வேண்டாம் என்று தொல்லியல் துறை சார்பில் வேண்டுகோளும் வைக்கப்பட்டது.

இதையடுத்து, வாரணாசி நீதிமன்றமும் ஆய்வறிக்கையை வெளியிடவில்லை. எனினும், ஞானவாபி மசூதி தரப்பில் ஆய்வறிக்கையை வழங்கும்படி வலியுறுத்தப்பட்டது. இந்த சூழலில்,  இரு தரப்பினருக்கும் ஆய்வறிக்கையை வழங்க வேண்டும். ஆனால், அதை பொதுவெளியில் வெளியிடக் கூடாது என்று நீதிமன்றம் உத்தரவிட்டிருக்கிறது.

மேலும், ஆய்வறிக்கையை ரகசியமாக வைத்திருப்போம், பொதுவெளியில் வெளியிட மாட்டோம் என்று பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்து இரு தரப்பினரும் ஆய்வறிக்கையைப் பெற்றுக் கொள்ளலாம் என்று வாரணாசி மாவட்ட நீதிபதி ஏ.கே.விஷ்வேஷ் உத்தரவிட்டிருக்கிறார்.

Tags: Gnanavabi Mosquecourt orderArchaeological Survey
ShareTweetSendShare
Previous Post

ஜெய்ப்பூர் அரச குடும்பம், ராமரின் வழித்தோன்றலா?

Next Post

தங்கம், வெள்ளி நகைகள் மீதான இறக்குமதி வரி உயர்வு! – மத்திய அரசு

Related News

மோடியின் நவீன ராஜதந்திரம் – இந்தியாவுடன் இணக்கமாக இருக்க விரும்பும் ஈரான்!

ஐசிசி டி20 உலகக் கோப்பையை வென்ற இந்திய அணியினர் புகழ்பெற்ற சித்திவிநாயகர் கோயிலில் வழிபாடு!

கேரள மாநிலம் கருநாகப்பள்ளியில் பிரபல ரவுடி கும்பல் தலைவன் பட்டப்பகலில் வெட்டிக்கொலை!

சமையல் எரிவாயு குறித்த அச்சம் வேண்டாம் – மத்திய அரசு

திமுக மாணவரணி செயலாளர் பொறுப்பில் இருந்து ராஜீவ்காந்தி திடீர் விடுவிப்பு!

தூத்துக்குடி கொடூரம்.. அமைச்சர் கீதா ஜீவன், கனிமொழி எம்பி ராஜினாமா செய்ய வேண்டும் – பாஜக மாநில துணை தலைவர் வலியுறுத்தல்

Load More

அண்மைச் செய்திகள்

தூத்துக்குடியில் மாணவிக்கு நேர்ந்த கொடூரம் – 4 நாட்களாகியும் குற்றவாளிகளை கைது செய்ய முடியாமல் திணறும் போலீசார்..பொதுமக்கள் சாலைமறியல்!

மதுரை விமான நிலையத்தில் புதிய வான் கட்டுப்பாட்டு கட்டிடத்தை திறந்து வைத்த மத்திய அமைச்சர் ராம் மோகன் நாயுடு!

AI தொழில்நுட்பத்தை பயன்படுத்தி எதிர்க்கட்சிகள் பொய் பிரச்சாரம் செய்கிறது – மத்திய அமைச்சர் அர்ஜூன் ராம் மேக்வால் குற்றச்சாட்டு

ஷில்லாங் – சில்சார் இடையே அதிவேக 4 வழித்திட்டத்திற்கு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார்!

சண்முக நதி கரையோரம் மலைபோல் தேங்கும் குப்பைகளால் சுகாதார சீர்கேடு!

மலைக்கோயிலில் இந்து முன்னணி சார்பில் தூய்மை பணிகள்!

தூத்துக்குடி கொடூரம் -அதிமுக சார்பில் நீதி வேண்டி வாயில் கருப்பு துணி கட்டி ஆர்ப்பாட்டம்

காதணி விழாவுக்கு ரூ.15 லட்சம் மதிப்பில் அத்தை சீர்வரிசை!

ஆண்டிபட்டி அருகே முற்றிலும் இல்லாமல் போன வைகை அணையின் நீர்வரத்து!

மத்திய விமான போக்குவரத்து அமைச்சருக்கு பாரம்பரிய வரவேற்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies