ஞானவாபி ஆய்வறிக்கை: பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்து பெற்றுக் கொள்ள உத்தரவு!
Aug 3, 2025, 06:08 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

ஞானவாபி ஆய்வறிக்கை: பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்து பெற்றுக் கொள்ள உத்தரவு!

Web Desk by Web Desk
Jan 24, 2024, 06:24 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

ஞானவாபி மசூதி வளாகத்தில் நடத்தப்பட்ட தொல்லியல் துறை ஆய்வறிக்கையை இரு தரப்பினரும் பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்து பெற்றுக் கொள்ளலாம் என்று வாரணாசி நீதிமன்றம் இன்று உத்தரவு பிறப்பித்திருக்கிறது.

உத்தரப் பிரதேச மாநிலம் வாரணாசியில் புகழ்பெற்ற காசி விஸ்வநாதர் கோவில் அமைந்திருக்கிறது. இதனை ஒட்டி ஞானவாபி மசூதி உள்ளது. இந்த மசூதி, முகலாய அரசர் ஒளரங்கசீப் காலத்தில் காசி விஸ்வநாதர் கோவிலின் ஒரு பகுதியை இடித்து விட்டு கட்டப்பட்டது என்று இந்துக்கள் கூறிவருகின்றனர்.

இது தொடர்பாக, இந்துக்கள் தரப்பில் தொடரப்பட்ட வழக்கில், மசூதிக்குள் தொல்லியல் துறை ஆய்வு செய்து அறிக்கை தாக்கல் செய்யும்படி வாரணாசி நீதிமன்றம் உத்தரவிட்டது. அதன்படி, தொல்லியல் துறை அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டபோது, மசூதி வளாகத்தில் சிவலிங்கம் கண்டுபிடிக்கப்பட்டது.

இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், தொல்லியல் துறையின் ஆய்வும் நீண்டு கொண்டே சென்றது. நிறைவாக, தொல்லியல் துறை ஆய்வறிக்கையை டிசம்பர் 18-ம் தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும் என்று வாரணாசி நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.

அதன்படி, கடந்த மாதம் 18-ம் தேதி ஞானவாபி மசூதி தொடர்பான ஆய்வறிக்கையை தொல்லியல் துறை அதிகாரிகள் தாக்கல் செய்தனர். அதேசமயம், இந்த ஆய்வறிக்கையை 4 வாரங்களுக்கு வெளியிட வேண்டாம் என்று தொல்லியல் துறை சார்பில் வேண்டுகோளும் வைக்கப்பட்டது.

இதையடுத்து, வாரணாசி நீதிமன்றமும் ஆய்வறிக்கையை வெளியிடவில்லை. எனினும், ஞானவாபி மசூதி தரப்பில் ஆய்வறிக்கையை வழங்கும்படி வலியுறுத்தப்பட்டது. இந்த சூழலில்,  இரு தரப்பினருக்கும் ஆய்வறிக்கையை வழங்க வேண்டும். ஆனால், அதை பொதுவெளியில் வெளியிடக் கூடாது என்று நீதிமன்றம் உத்தரவிட்டிருக்கிறது.

மேலும், ஆய்வறிக்கையை ரகசியமாக வைத்திருப்போம், பொதுவெளியில் வெளியிட மாட்டோம் என்று பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்து இரு தரப்பினரும் ஆய்வறிக்கையைப் பெற்றுக் கொள்ளலாம் என்று வாரணாசி மாவட்ட நீதிபதி ஏ.கே.விஷ்வேஷ் உத்தரவிட்டிருக்கிறார்.

Tags: Gnanavabi Mosquecourt orderArchaeological Survey
ShareTweetSendShare
Previous Post

ஜெய்ப்பூர் அரச குடும்பம், ராமரின் வழித்தோன்றலா?

Next Post

தங்கம், வெள்ளி நகைகள் மீதான இறக்குமதி வரி உயர்வு! – மத்திய அரசு

Related News

நீட் தேர்வில் வெற்றி பெற்று அரசு பள்ளி மாணவி சாதனை – குவியும் பாராட்டு!

போடி அருகே தடையை மீறி மாடுகளை மேய்ச்சலுக்கு அழைத்து சென்ற சீமான்!

சுதந்திர போராட்ட வீரர்களை போற்றுவதிலும், பாராட்டுவதிலும் பாஜகவே முதன்மையான கட்சி – நயினார் நாகேந்திரன்

திருமங்கலத்தில் பூட்டிய வீட்டுக்குள் சடலமாக கிடந்த சிபிஎஸ்இ மண்டல அலுவலர் – போலீஸ் விசாரணை!

விபத்தில் சிக்குபவர்களுக்கு சிகிச்சை அளிக்க அரசு மருத்துவமனைகள் அலட்சியம் காட்டுகின்றன – ஆம்புலன்ஸ் ஓட்டுநர்கள் குற்றச்சாட்டு!

செய்யாறு அருகே சந்தையை இடம் மாற்றம் செய்ய எதிர்ப்பு – வியாபாரிகள் சாலை மறியல்!

Load More

அண்மைச் செய்திகள்

சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த நபர் மீது புகாரளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை – பெற்றோர் வேதனை!

ஓபிஎஸ் விலகியது குறித்து தலைமை பதிலளிக்கும் – எல்.முருகன்

கிட்னியை விற்கும் நிலைக்கு மக்கள் தள்ளப்பட்டதே திராவிட மாடல் அரசின் சாதனை – வானதி சீனிவாசன்

பிரதமர் மோடி பெயரை கூறுமாறு அதிகாரிகள் சித்ரவதை செய்தனர் – பிரக்யா சிங் தாக்கூர்

தூத்துக்குடியில் விரிவாக்கம் செய்யப்பட்ட விமான நிலையம் – விமான சேவை தொடங்கியது!

ஆணவ கொலை நடைபெறுவதற்கு திமுக அரசு வெட்கித் தலைகுனிய வேண்டும் – தமிழிசை

பவானி சாகர் அணை நீர்ப்பிடிப்பு பகுதியில் மாணவர் மாயம் – தேடும் பணி தீவிரம்!

சட்டமன்ற தேர்தலையொட்டி பொங்கல் பரிசு வழங்கும் திமுக அரசு – நயினார் நாகேந்திரன்

ஷியாவிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்கும் விவகாரம் – டிரம்ப்பின் கருத்துக்கு இந்தியா மறுப்பு!

ஆடிப்பெருக்கு கோலாகலம் – நீர்நிலைகளில் குவிந்த புதுமணத்தம்பதிகள்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies