அயோத்தி இராமர் கோவில் : 2 நாட்களில் கோடிக்கணக்கில் நன்கொடை !
Mar 15, 2026, 08:04 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

அயோத்தி இராமர் கோவில் : 2 நாட்களில் கோடிக்கணக்கில் நன்கொடை !

Abinaya Ganesan by Abinaya Ganesan
Jan 25, 2024, 05:55 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

அயோத்தி ராமர் கோவிலுக்கு கோடிக்கணக்கில் நன்கொடைகள் கிடைத்துள்ளதாக, விஸ்வ இந்து பரிஷத் நிர்வாகி சரத் சர்மா தெரிவித்துள்ளார்.

அயோத்தி ராமர் கோயிலில் குழந்தை ராமரின் பிராண பிரதிஷ்டை, பிரதமர் நரேந்திர மோடி முன்னிலையில் வெகு விமரிசையாக நடைபெற்றது.

கோவில் கும்பாபிஷேகம் நிறைவடைந்ததைத் தொடர்ந்து, மறுநாள் முதல் பொதுமக்கள் தரிசனத்துக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. நாடு முழுவதும் இருந்து ஏராளமான பக்தர்கள் அயோத்தியை நோக்கிப் படையெடுக்கத் தொடங்கினர்.

இந்நிலையில் அயோத்தி ராமர் கோவிலுக்கு கோடிக்கணக்கில் நன்கொடைகள் கிடைத்துள்ளதாக, விஸ்வ இந்து பரிஷத் நிர்வாகி சரத் சர்மா தெரிவித்துள்ளார்.

இது குறித்து பேசிய அவர், ” நாடு முழுவதும் உள்ள பக்தர்கள் பகவான் ஸ்ரீ ராமர் மீது கொண்டுள்ள தங்கள் அன்பை வெளிப்படுத்தி வருகிறார்கள். மேலும் பணம், தங்கம் மற்றும் வெள்ளியை நன்கொடையாக வழங்குகிறார்கள். பக்தர்கள் பகவான் ஸ்ரீ ராமர் மீது தூய்மையான அன்பும், பயபக்தியும் கொண்டுள்ளனர் ” என்று கூறினார்.

மேலும் அவர், ” பகவான் ஸ்ரீ ராமர் விஷ்ணுவின் அவதாரம், அவரது மனைவி லட்சுமி தேவி. ஆகையால் லட்சுமி தேவியின் ஆசீர்வாதத்தால் அயோத்தியில் ராமர் கோவில் எப்போதும் பொருளாதார ரீதியாக செழிப்பாக இருக்கும்.

அந்த வகையில் பக்தர்களும் பல்வேறு வழிகளில் நன்கொடை அளித்து வருகின்றனர். கோவிலுக்கு வரும் பக்தர்கள் அனைவரும் ஏதாவது ஒன்றை தானம் செய்கிறார்கள். தானியங்கள், ஆடைகள், பழங்கள், பொருட்கள் என நன்கொடையாக பக்தர்கள் அளித்துள்ளனர்.

இதுவரை ராமர் கோவிலுக்கு நேரில் வந்த பக்தர்கள் 2-3 நாட்களில் கோடிக்கணக்கான பணத்தை நன்கொடையாக அளித்துள்ளனர். ஆன்லைனில் நன்கொடையாக வழங்கப்படும் தொகை வங்கிகளால் கணக்கிடப்படும். அது பற்றிய புள்ளி விவரங்கள் இன்னும் தெரியவில்லை.

இதற்கிடையில் பிரான் பிரதிஷ்டை விழா முடிவடைந்து மூன்று நாட்கள் ஆகியும் இன்று அதிகாலை முதலே கடும் குளிர், மூடு பனி ஆகியவற்றையும் பொருட்படுத்தாமல் பக்தர்கள் கோவிலுக்கு சென்று கொண்டுள்ளனர்.

Tags: ayodhyaayodhiramtemple
ShareTweetSendShare
Previous Post

இந்தியா – இங்கிலாந்து டெஸ்ட் : இங்கிலாந்து 246 ரன்கள் குவிப்பு !

Next Post

14-வது தேசிய வாக்காளர் தின விழா – குடியரசுத் தலைவர் பங்கேற்பு

Related News

மோடியின் நவீன ராஜதந்திரம் – இந்தியாவுடன் இணக்கமாக இருக்க விரும்பும் ஈரான்!

ஐசிசி டி20 உலகக் கோப்பையை வென்ற இந்திய அணியினர் புகழ்பெற்ற சித்திவிநாயகர் கோயிலில் வழிபாடு!

கேரள மாநிலம் கருநாகப்பள்ளியில் பிரபல ரவுடி கும்பல் தலைவன் பட்டப்பகலில் வெட்டிக்கொலை!

சமையல் எரிவாயு குறித்த அச்சம் வேண்டாம் – மத்திய அரசு

திமுக மாணவரணி செயலாளர் பொறுப்பில் இருந்து ராஜீவ்காந்தி திடீர் விடுவிப்பு!

தூத்துக்குடி கொடூரம்.. அமைச்சர் கீதா ஜீவன், கனிமொழி எம்பி ராஜினாமா செய்ய வேண்டும் – பாஜக மாநில துணை தலைவர் வலியுறுத்தல்

Load More

அண்மைச் செய்திகள்

தூத்துக்குடியில் மாணவிக்கு நேர்ந்த கொடூரம் – 4 நாட்களாகியும் குற்றவாளிகளை கைது செய்ய முடியாமல் திணறும் போலீசார்..பொதுமக்கள் சாலைமறியல்!

மதுரை விமான நிலையத்தில் புதிய வான் கட்டுப்பாட்டு கட்டிடத்தை திறந்து வைத்த மத்திய அமைச்சர் ராம் மோகன் நாயுடு!

AI தொழில்நுட்பத்தை பயன்படுத்தி எதிர்க்கட்சிகள் பொய் பிரச்சாரம் செய்கிறது – மத்திய அமைச்சர் அர்ஜூன் ராம் மேக்வால் குற்றச்சாட்டு

ஷில்லாங் – சில்சார் இடையே அதிவேக 4 வழித்திட்டத்திற்கு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார்!

சண்முக நதி கரையோரம் மலைபோல் தேங்கும் குப்பைகளால் சுகாதார சீர்கேடு!

மலைக்கோயிலில் இந்து முன்னணி சார்பில் தூய்மை பணிகள்!

தூத்துக்குடி கொடூரம் -அதிமுக சார்பில் நீதி வேண்டி வாயில் கருப்பு துணி கட்டி ஆர்ப்பாட்டம்

காதணி விழாவுக்கு ரூ.15 லட்சம் மதிப்பில் அத்தை சீர்வரிசை!

ஆண்டிபட்டி அருகே முற்றிலும் இல்லாமல் போன வைகை அணையின் நீர்வரத்து!

மத்திய விமான போக்குவரத்து அமைச்சருக்கு பாரம்பரிய வரவேற்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies