14-வது தேசிய வாக்காளர் தின விழா – குடியரசுத் தலைவர் பங்கேற்பு
Apr 29, 2026, 09:56 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

14-வது தேசிய வாக்காளர் தின விழா – குடியரசுத் தலைவர் பங்கேற்பு

Abinaya Ganesan by Abinaya Ganesan
Jan 25, 2024, 06:48 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

தலைநகர் டெல்லியில் இன்று நடைபெற்ற 14-வது தேசிய வாக்காளர் தின விழாவில் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு கலந்துக் கொண்டார்.

2023-ஆம் ஆண்டில் தேர்தலை நடத்துவதில், சிறப்பாக செயல்பட்ட மாநில, மாவட்ட அளவிலான அதிகாரிகளுக்கு 2023-ஆம் ஆண்டிற்கான சிறந்த தேர்தல் நடைமுறைகள் விருதுகளை குடியரசுத் தலைவர் வழங்கினார். வாக்காளர்களின் விழிப்புணர்வுக்கு மதிப்புமிக்க பங்களிப்பை வழங்கிய அரசுத் துறைகள், ஊடக நிறுவனங்கள் உள்ளிட்ட முக்கிய துறையினருக்கும் விருதுகள் வழங்கப்பட்டன.

இக்கூட்டத்தில் குடியரசுத் தலைவர் திரௌபதி கூறியதாவது, நமது ஜனநாயகத்தின் பரந்த தன்மை, பன்முகத்தன்மை நமக்கு பெருமை அளிக்கிறது. நமது ஜனநாயகத்தின் பெருமைமிகு பயணத்தில் தேர்தல் ஆணையம் முக்கிய பங்காற்றியுள்ளது. இதுவரை 17 நாடாளுமன்றத் தேர்தல்களும், 400-க்கும் மேற்பட்ட சட்டப்பேரவைத் தேர்தல்களும் தேர்தல் ஆணையத்தால் நடத்தப்பட்டுள்ளதாக குறிப்பிட்ட அவர், நியாயமான, அனைத்தையும் உள்ளடக்கிய தேர்தல் நடைமுறையை உறுதி செய்ததற்காக தேர்தல் ஆணையத்தின் தற்போதைய மற்றும் முந்தைய குழுவினரை பாராட்டினார்.

நமது நாட்டின் தேர்தல் நடவடிக்கைகளில் நவீன தொழில்நுட்பத்தை பெருமளவில் வெற்றிகரமாக பயன்படுத்தியிருப்பது உலகின் அனைத்து ஜனநாயக நாடுகளுக்கும் ஒரு முன்மாதிரியாகும். தேர்தல் நடைமுறை தொடர்பான அனைத்து நடவடிக்கைகளிலும் தொழில்நுட்பத்தை தேர்தல் ஆணையம் திறம்பட பயன்படுத்துவதை மேலும் மேம்படுத்த முடியும்.

நாட்டின் அனைத்துப் பகுதிகளிலும், வசிக்கும் வாக்காளர்களுக்கு ஏற்பாடுகளை மேற்கொள்வது இலகுவானதல்ல. அனைத்து வகையான சவால்களையும் மீறி, தேர்தல் ஆணைய குழுவினர் இந்த கடினமான பணியை மேற்கொள்வதாகவும், இது நமது ஜனநாயகத்தின் மிகப்பெரிய சாதனையாகும். வாக்குச் சாவடிகளுக்குச் செல்ல முடியாதவர்களுக்கு வீட்டிலேயே வாக்களிக்கும் வசதியை வழங்கிய தேர்தல் ஆணையத்தை அவர் பாராட்டினார்.

நமது இளைஞர்கள் நமது ஜனநாயகத்தின் எதிர்காலத் தலைவர்கள். வாக்காளர் புகைப்பட அடையாள அட்டையைப் பெற்ற இளம் வாக்காளர்களுக்கு அவர் வாழ்த்து தெரிவித்தார்.

இந்த உரிமையைப் பெற்ற பிறகு, அவர்களின் கடமைகளும் அதிகரித்துள்ளன. தற்போது, கூடியுள்ள இளம் வாக்காளர்கள் நாட்டின் கோடிக்கணக்கான இளைஞர்களின் பிரதிநிதிகள் என்றும், 2047-ஆம் ஆண்டுக்கான பொன்னான இந்தியாவை உருவாக்குவதில், முக்கிய பங்காற்றுவார்கள் என்று தெரிவித்துள்ளார்.

பின்னர், தலைமைத் தேர்தல் ஆணையர் ராஜீவ் குமாரிடமிருந்து ‘பொதுத் தேர்தல் 2024-க்கான தேர்தல் ஆணைய முன்முயற்சிகள்’ என்ற புத்தகத்தின் முதல் பிரதியை குடியரசுத் தலைவர் பெற்றுக்கொண்டார்.

Tags: President Draupadi Murmunationalvotersday
ShareTweetSendShare
Previous Post

அயோத்தி இராமர் கோவில் : 2 நாட்களில் கோடிக்கணக்கில் நன்கொடை !

Next Post

இந்தியா – இங்கிலாந்து டெஸ்ட் : முதல் நாள் முடிவு !

Related News

கோவையில் தமிழக பாஜக மையக்குழு கூட்டம் – சட்டப்பேரவை தேர்தல் வாக்கு எண்ணிக்கை தொடர்பாக ஆலோசனை!

மே 2 ஆம் தேதி முதல் மறு உத்தரவு வரும் வரை போலீசார் விடுப்பு எடுக்கக்கூடாது – தமிழக டிஜிபி உத்தரவு!

நாகர்கோவில் திருப்பதிசாரம் திருவாழ் மார்பன் கோயில் தெப்பக்குளத்தை சீரமைக்க வேண்டும் – இந்து முன்னணி வலியுறுத்தல்!

கன்னியாகுமரி, சிவகங்கை மாவட்டங்களில் கோடை மழை – பொதுமக்கள் மகிழ்ச்சி!

முன்னெப்போதும் இல்லாத அளவில் அதிக எண்ணிக்கையில் வாக்களிக்க வேண்டும் – மேற்கு வங்க வாக்காளர்களுக்கு பிரதமர் மோடி அழைப்பு!

மேற்கு வங்க சட்டமன்ற தேர்தல் – இறுதிக்கட்ட வாக்குப்பதிவு தொடங்கியது!

Load More

அண்மைச் செய்திகள்

குஜராத் உள்ளாட்சி தேர்தல் – பாஜக அமோக வெற்றி!

மதுரை சித்திரை திருவிழா – திருக்கல்யாண அலங்காரத்தில் வீதியுலா சென்ற மீனாட்சி, சுந்தரேஸ்வரர்!

டிரான்ஸ்பார்மர் கொள்முதல் ஊழல் விசாரணை தொடர்பான வழக்கு – சென்னை உயர் நீதிமன்றம் இன்று தீர்ப்பு அளிக்கிறது!

ஈரான் தாக்குதலுக்கு பதிலடி : இஸ்ரேலின் அயர்ன் டோமை பயன்படுத்தும் ஐக்கிய அரபு அமீரகம் – சிறப்பு தொகுப்பு!

மேற்கு வங்க சட்டமன்ற தேர்தல் – நாளை இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு!

உலகின் முன்னணி ஐடி சேவை வழங்குநராக உயர்ந்துள்ளோம் – அஸ்வினி வைஷ்ணவ்

சிக்கிம் வளர்ச்சியை தடுத்த காங்கிரஸ் அரசு – பிரதமர் மோடி குற்றச்சாட்டு!

ஹார்முஸ் ஜலசந்தியை உடனடியாக திறக்க வேண்டும் – ஈரானுக்கு ஐநா பொதுச்செயலாளர் அறிவுறுத்தல்!

பஞ்சாப்பில் ரயில் தண்டவாளத்தை தகர்க்க முயற்சி – வெடிகுண்டு வெடித்ததில் ஒருவர் பலி!

சிக்கிம் மாநில உதய தின விழா – பிரதமர் மோடி பங்கேற்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies