ராகுல் காந்தி கைது செய்யப்படுவார்: அதிரடி காட்டும் அஸ்ஸாம் முதல்வர்!
Oct 25, 2025, 04:23 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

ராகுல் காந்தி கைது செய்யப்படுவார்: அதிரடி காட்டும் அஸ்ஸாம் முதல்வர்!

Web Desk by Web Desk
Jan 25, 2024, 05:54 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

மக்களை போராட்டத்துக்குத் தூண்டியதாக வழக்குப் பதிவு செய்யப்பட்டிருக்கும் நிலையில், ராகுல் காந்தி கைது செய்யப்படுவார் என்று அஸ்ஸாம் மாநில முதல்வர் ஹிமந்தா பிஸ்வா ஷர்மா அதிரடி காட்டி இருக்கிறார்.

அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் தலைவரும், கேரள மாநிலம் வயநாடு தொகுதியின் எம்.பி.யுமான ராகுல் காந்தி பாரத் ஜோடோ நியாய யாத்திரையை வடகிழக்கு மாநிலங்களில் தொடங்கி இருக்கிறார். சமீபத்தில் மணிப்பூரில் தொடங்கிய இந்த யாத்திரை நாகாலாந்து மாநிலத்தைக் கடந்து தற்போது அஸ்ஸாம் மாநிலத்தை வந்தடைந்திருக்கிறது.

அப்போது, அஸ்ஸாம் மாநில முதல்வர் ஹிமந்தா பிஸ்வா ஷர்மாவைப் பற்றி ராகுல் காந்தி கடுமையாக விமர்சித்து வந்தார். இதனிடையே, கடந்த 22-ம் தேதி அயோத்தி இராமர் கோவில் கும்பாபிஷேகம் நடைபெற்றதால், ராகுல் காந்தி யாத்திரைக்கு தடை விதிக்கப்பட்டது. அதேபோல, அங்குள்ள பல்கலைக்கழத்துக்குள் செல்வதற்கும் தடை விதிக்கப்ப்பட்டது.

எனவே, ராகுல் காந்தி பஸ் மீது ஏறி நின்று பேசினார். மேலும், ராகுலுக்கு தடை விதிக்கப்பட்டதால் காங்கிரஸ் தொண்டர்கள் சாலையில் இருந்து இரும்புத் தடுப்புகளை உடைத்தெறிந்தனர். இதையடுத்து, மக்களை போராட்டத்துக்குத் தூண்டியதாக ராகுல் காந்தி மீது போலீஸார் வழக்குப் பதிவு செய்தனர். எனினும், இதற்கெல்லாம் நான் பயப்பட மாட்டேன் என்று ராகுல் காந்தி கூறியிருந்தார்.

இந்த நிலையில்தான், ராகுல் காந்தி கைது செய்யப்படுவார் என்று அஸ்ஸாம் மாநில முதல்வர் ஹிமாந்தா பிஸ்வா ஷர்மா தெரிவித்திருக்கிறார். இது தொடர்பாகப் பேசிய ஹிமாந்தா பிஸ்வா ஷர்மா, “நாங்கள் சிறப்பு விசாரணைக்குழு அமைப்போம். இந்தக் குழு ராகுல் காந்திக்கு எதிரான வழக்குகள் குறித்து விசாரணை நடத்தும்.

மக்களவைத் தேர்தலுக்குப் பிறகு நாங்கள் அவரை கைது செய்வோம். தற்போது நடவடிக்கை எடுத்தால், இது அரசியல் நடவடிக்கை என்று கூறுவார்கள். எங்களிடம் ஆதாரம் உள்ளது. கௌகாத்தியில் மக்களை தூண்டும் வகையில் பெரிய சம்பவம் நடைபெற்றிருக்கிறது” என்று தெரிவித்திருக்கிறார்.

Tags: rahul gandhiAssam CmHimanta Biswa Sarmawill arrest
ShareTweetSendShare
Previous Post

அயோத்தி இராமர் கோவிலில் முதல் நாள் காணிக்கை ரூ.3 கோடி!

Next Post

மாலி நாட்டில் தங்க சுரங்க விபத்து – 70-க்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு

Related News

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 3-வது ஒருநாள் கிரிக்கெட் போட்டி – இநதியா வெற்றி!

நெல் கொள்முதல் செய்வதில் திமுக அரசு தோல்வி – அன்புமணி குற்றச்சாட்டு!

தஞ்சை நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் நயினார் நாகேந்திரன் ஆய்வு!

ஆந்திராவில் பேருந்து தீப்பிடித்து எரிந்த விபத்து – திருப்பூர் இளைஞர் உயிரிழப்பு!

ஆந்திராவில் தீப்பிடித்த பேருந்தை அகற்றும் போது கவிழ்ந்த கிரேன் – ஓட்டுனர் காயம்!

வங்கக்கடலில் மோன்தா புயல் – எண்ணூர், கடலூர் உள்ளிட்ட துறைமுகங்களில் ஒன்றாம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்!

Load More

அண்மைச் செய்திகள்

திமுகவை ஆட்சியில் இருந்து அகற்ற ஒத்த கருத்துடைய கட்சிகள் ஒன்றிணைய வேண்டும் – ஜிகே.வாசன் அழைப்பு!

சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் 8 கிலோ கஞ்சா பறிமுதல் – ஒருவர் கைது!

கோவையில் பொதுமக்களின் எதிர்ப்பை மீறி விநாயகர் கோயில் இடிப்பு – திமுக நிர்வாகியே காரணம் என பக்தர்கள் குற்றச்சாட்டு!

சென்னை விமான நிலையத்தில் ரூ. 10 கோடி மதிப்பிலான கஞ்சா பறிமுதல்!

நடப்பு நிதியாண்டில் இந்திய பொருளாதார வளர்ச்சி 6.6 சதவீதமாக இருக்கும் – சர்வதேச நாணய நிதியம்

நெல்லை மாஞ்சோலையில் வீடு புகுந்து பெண்ணிடம் அத்துமீறிய வனக்காவலர் கைது!

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயில் கந்த சஷ்டி விழா – சண்முக விலாஸ் மண்டபத்தில் கனிப்பந்தல்!

கும்பக்கரை, சுருளி அருவிகளில் வெள்ளப்பெருக்கு – சுற்றுலா பயணிகள் குளிப்பதற்கான தடை நீட்டிப்பு!

மதுரை அனுப்பானடி பகுதியில் ராட்சத குடிநீர் குழாயில் உடைப்பு!

வங்கி வாடிக்கையாளர்கள் இனி 4 வாரிசுதாரரை நியமிக்கலாம் – மத்திய நிதியமைச்சகம் அறிவிப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies