ஜனவரி 26 குடியரசு தினமாகத் தேர்ந்தெடுக்கப்பட்டதன் பின்னணி !
Jul 23, 2025, 07:18 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

ஜனவரி 26 குடியரசு தினமாகத் தேர்ந்தெடுக்கப்பட்டதன் பின்னணி !

இந்தியாவின் 75வது குடியரசு தின விழா, இன்று ( ஜனவரி 26 ) நாடுமுழுவதும் கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது.

Web Desk by Web Desk
Jan 26, 2024, 11:58 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

குடியரசு என்பதன் பொருள் மக்களாட்சி ஆகும். அதாவது மக்கள், தேர்தல் மூலம் ஆட்சியாளர்களை தேர்ந்தெடுக்கும் முறைக்கு குடியாட்சி என அழைக்கப்படுகிறது.

‘மக்களுக்காக மக்களுடைய மக்கள் அரசு’ என குடியரசு என்ற வார்த்தைக்கு மிகச்சரியாக இலக்கணம் வகுத்து தந்தவர் அமெரிக்க அதிபர் ஆபிரகாம் லிங்கன்.

அப்படிப்பட்ட மக்களுக்கான அரசை இந்தியாவில் ஏற்படுத்தினால் தான், இந்தியா முழு சுதந்திரம் பெற்ற நாடாக ஏற்றுக்கொள்ளப்படும் என்ற நோக்கில் உருவாக்கப்பட்டது தான் இந்திய அரசியலமைப்பு சட்டம்.

1947ஆம் ஆண்டு இந்தியா சுதந்திரம் அடைந்தாலும் இந்தியாவுக்கு என்று தனியாக அரசியலமைப்பு சட்டங்கள் இல்லை.

ஆங்கிலேயர்கள் ஏற்படுத்திய சட்ட திட்டங்களையே பின்பற்றப்பட்டது. இந்தியாவிற்கு என்று தனியாக அரசியலமைப்பு சட்டம் வேண்டும் என்பதை உணர்ந்த இந்திய அரசு டாக்டர் பி.ஆர். அம்பேத்கர் தலைமையில் இந்திய அரசியலமைப்பின் வரைவுக்குழு அமைக்கப்பட்டு இந்திய அரசியல் சாசனம் எழுதப்பட்டது.

முகவுரை, விதிகள், அடிப்படை கடமைகள், உரிமைகள்,அட்டவணைகள், திருத்த மசோதாக்கள் போன்ற சிறப்பு அம்சங்களை கொண்டு நீண்ட ஆவணமாக எழுதப்பட்ட அரசியலமைப்பு சாசனம் இந்திய அரசியலமைப்பு நிர்ணய சபையால் ஏற்றுக்கொள்ளப்பட்டு 1950 ஆம் ஆண்டு ஜனவரி 26 ஆம் நாள் நடைமுறைக்கு வந்தது.

1929 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் லாகூரில் நடைபெற்ற ஒரு மாநாட்டில் 1930 ஆம் ஆண்டு ஜனவரி 26 ஆம் நாளை இந்திய சுதந்திர தினமாக கொண்டாட வேண்டும் எனக் கேட்டுக்கொள்ளப்பட்டது.

ஆனால் அந்த கோரிக்கை 1947 வரையிலும் நிறைவேற்றப்படவே இல்லை. முதலில் சுதந்திர தினமாக அறிவிக்கப்பட்ட ஜனவரி 26 ஆம் தேதிக்கு கௌரவிக்கும் விதமாக அரசியலமைப்பு சட்டத்தை ஜனவரி 1950 ஆம் இயற்ற அரசியலமைப்பு வரைவுக்குழுவில் முடிவுசெய்யப்பட்டது.

அதன்படி ஒவ்வொரு வருடமும் ஜனவரி 26-ம் நாள் இந்தியக்குடியரசு தினமாக கொண்டாடப்படுகிறது. குடியரசு தினம் அன்று டெல்லியில் குடியரசுத் தலைவர் தேசிய கொடியை ஏற்றிவைப்பார்.

குடியரசு தின விழா அணிவகுப்பு மற்றும் நாட்டிற்கு சேவை புரிந்த படைவீரர்களுக்கான பதக்கங்களும் விருதுகளும் வழங்கப்படும். மேலும் நாட்டின் பாதுகாப்பு படைகளின் அலங்கார அணிவகுப்புகளும் நடைபெறும்.

நாட்டின் பன்முக கலாச்சாரத்தை பறைசாற்றும் வகையில் பல்வேறு மாநிலங்களின் கலாச்சார அலங்கார ஊர்திகளும் நடைபெறும்.

டெல்லியில் குடியரசு தலைவர் கொடியேற்றுவதை போல் மாநிலங்களில் ஆளுநர் தேசியக்கொடி ஏற்றுவதுடன் காவலர் அணிவகுப்பு, அரசுத்துறை அலங்கார ஊர்திகளையும், கலைநிகழ்ச்சியையும் பார்வையிடுவார். மேலும் சிறந்த முறையில் பணியாற்றியவர்களுக்கு விருதுகள் வழங்கப்படும்.

Tags: nationrepublicday
ShareTweetSendShare
Previous Post

75-வது குடியரசு தினம் :தேசிய கொடியை ஏற்றி வைத்தார் திரௌபதி முர்மு!

Next Post

தைப்பூசம் : திரிசூல காளிகாம்பாள் ஆலயத்தில் 208 பால்குட ஊர்வலம் !

Related News

எம்பி ராபர்ட் புரூஸ் வெற்றி : ஆவணங்களைத் தாக்கல் செய்ய தேர்தல் ஆணையத்திற்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு!

கன்வர் யாத்திரையின் இறுதி நாளில் புனித நீராடிய பக்தர்கள்!

தாமிரபரணி ஆற்றில் உயிரிழந்த 17 பேருக்கு நினைவுத்தூண் அமைக்கக்கோரி சட்டசபையில் குரல் எழுப்புவேன் : எம். ஆர். காந்தி

கீவ் மீது ரஷ்யா ட்ரோன் தாக்குதல் – 2 பேர் உயிரிழப்பு!

ஜம்மு-காஷ்மீர் : பள்ளத்தாக்கில் ஜேசிபி விழுந்து விபத்து – 3 பேர் உயிரிழப்பு!

அஜித்குமார் கொலை வழக்கு : மடப்புரம் கோயில் பணியாளர்களிடம் சிபிஐ அதிகாரிகள் தனித்தனியாக விசாரணை!

Load More

அண்மைச் செய்திகள்

மிசஸ் அண்ட் மிஸ்டர் திரைப்படத்திலிருந்து இளையராஜா பாடலை நீக்க மாட்டேன் : வனிதா விஜயகுமார்

திருப்பதியில் போதை ஊசி செலுத்திக் கொண்டிருந்த இளைஞர்கள் பிடிபட்டனர்!

மகளிர் உரிமைத் தொகை வரவில்லை – அதிகாரிகளுடன் பெண்மணி வாக்குவாதம்!

திருப்பதி திருமலையில் அதிநவீன தொழில்நுட்ப வசதிகளுடன் கூடிய புதிய ஆய்வகம்!

கேரளா : பேருந்து மோதி பெண் பரிதாபமாக உயிரிழப்பு!

வியாழக்கிழமை காலை 11 மணி வரை அவைகள் ஒத்திவைப்பு!

மாமன்னர் ராஜேந்திர சோழனின் பிறந்த நாள் முப்பெரும் விழா!

பெண்களுக்கு ஆடை கட்டுப்பாடு: தலிபான்களுக்கு ஐ.நா., கண்டனம்!

மத்திய பிரதேசம் : கிணற்றில் விழுந்த புலி பத்திரமாக மீட்பு!

மருத்துவமனையில் இருந்தபடி காணொலி வாயிலாக மக்களிடம் உரையாடிய முதலமைச்சர் ஸ்டாலின்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies