பாரதத்தை இணைக்கும் பாலமாக இராமர் உள்ளார் – ஆளுநர் ஆர்.என்.ரவி
Jul 26, 2025, 01:11 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

பாரதத்தை இணைக்கும் பாலமாக இராமர் உள்ளார் – ஆளுநர் ஆர்.என்.ரவி

Web Desk by Web Desk
Jan 26, 2024, 12:06 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

பாரத நாட்டின் அனைத்து குடிமக்களின் இதயங்களிலும், வாசம் செய்யும் இராமர், பாரதத்தை இணைக்கும் அனைவருக்குமான பாலமாகவும் இருப்பதாக ஆளுநர் ஆர்.என்.ரவி தெரிவித்துள்ளார்.

75-வது குடியரசு தின விழா நாடு முழுவதும், இன்று கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. இதையொட்டி, சென்னை மெரினா கடற்கரையில், காமராஜர் சாலையில் உழைப்பாளர் சிலை அருகே அமைக்கப்பட்டுள்ள கொடிமரத்தில், ஆளுநர் ஆர்.என்.ரவி தேசிய கொடியை ஏற்றி வைத்து மரியாதை செய்தார். தொடர்ந்து அணிவகுப்பு மரியாதையும் ஏற்றுக்கொண்டார்.

முன்னதாக, ஆளுநர் ஆர்.என்.ரவி கூறியதாவது, 75-வது குடியரசு தினத்தை முன்னிட்டு,தமிழ்நாட்டின் என் சகோதர, சகோதரிகளுக்கு என் வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

நமது நாட்டினை அந்நிய ஆட்சியிடமிருந்து மீட்டு, நமக்கு சுதந்திரத்தைப் பெற்றுக் கொடுத்த கணக்கில்லாத தியாகிகள் மற்றும் சுதந்திரப் போராட்ட வீரர்கள் ஆகியோரின் தியாகங்களுக்கு  என் இதயம் நெகிழ்ந்த அஞ்சலிகளைக் காணிக்கையாக்குகிறேன்.

நமது ராணுவத்தினர், பாதுகாப்பு அமைப்புகள், காவல்துறையினர் ஆகியோருக்கு வணக்கங்களைத் தெரிவிக்கிறேன். அவர்கள் இடைவிடாத விழிப்புடன் இருந்து, சாகசம் மற்றும் தியாகங்களைப் புரிந்து நமது நாட்டினைப் பாதுகாக்கிறார்கள்.

உள்நாட்டில் அமைதி, ஸ்திரத்தன்மை, சமூக நல்லிணக்கம் ஆகியவற்றை உறுதி செய்து இயற்கை பேரிடர்களின் போது, பாதிக்கப்படுவோரை மீட்டு, நிவாரண நடவடிக்கைகளில் ஈடுபடுகிறார்கள்.  மிக்ஜாங் புயல் மற்றும் தென் மாவட்டங்களில் பெய்த இடைவிடாத மழை மற்றும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டோரை மீட்டு நிவாரணம் வழங்கிய தன்னார்வலர்கள் மற்றும் தன்னார்வத் தொண்டு நிறுவனங்களுக்கு  பாராட்டுகளையும், நன்றியையும் தெரிவிக்கிறேன்.

சந்திரயான் 3, ஆதித்யா எல்1 ஆகியவை மூலம் நமது விஞ்ஞானிகள் நாட்டிற்குப் பெருமை சேர்த்துள்ளனர். தேசத்திற்கு கிடைத்த பெருமையை  உங்களோடு பகிர்ந்து கொள்கிறேன். சர்வதேச அளவில் சாதனை படைத்த நமது தலைசிறந்த விளையாட்டு வீரர்கள் மற்றும் வீராங்கனைகளுக்கு பாராட்டுக்கள்.

சில நாட்கள் முன்பு அயோத்தியில் பால ராமர் திருமேனி பிரதிஷ்டை செய்யப்பட்டது. இந்த வரலாற்று நிகழ்ச்சி, நாடு முழுவதும் சக்தியையும், உற்சாகத்தையும் ஏற்படுத்தியதோடு மட்டுமல்லாமல், மக்களின் மனங்களில் ஒரு முழுமையான வளர்ந்த பாரத்தை உருவாக்கத் தேவையான தன்னம்பிக்கை, புதிய ஆற்றல் ஆகியவற்றை வழங்கியது.

பாரத நாட்டின் அனைத்து குடிமக்களின் இதயங்களிலும் வாசம் செய்யும் அவர், பாரதத்தை இணைக்கும் அனைவருக்குமான பாலமாக உள்ளார் என்று ஆளுநர் ஆர்.என்.ரவி தெரிவித்துள்ளார்.

 

Tags: Indiagovernor rn raviRamar75th Republic Dayrn ravi speechRepublic Day greetings
ShareTweetSendShare
Previous Post

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பாரதிய டாஸ்மாக் தொழிலாளர் சங்கம் போராட்டம்!

Next Post

பயணிகளின் கவனத்திற்கு – மின்சார இரயில் சேவையில் மாற்றம்!

Related News

அமளியில் ஈடுபட மாட்டோம் என எதிர்க்கட்சிகள் வாக்குறுதி?

உலகின் நம்பகமான தலைவர்கள் – பிரதமர் மோடி முதலிடம்!

திருப்பூர் : தீர்த்த குடம் எடுத்து அம்மனுக்கு அபிஷேகம் செய்த பெண்கள்!

கம்போடியா : ராணுவ தளங்களை குறிவைத்து ட்ரோன் தாக்குதல்!

அமெரிக்கா : சூறைக்காற்றில் உருண்டோடிய கேம்பர் வாகனம்!

பிரேசில் : கார்களை ஏற்றிச் சென்ற லாரி கவிழ்ந்து விபத்து!

Load More

அண்மைச் செய்திகள்

போலந்து முதல்முறையாக ‘ஏர் பைக்கை’ உருவாக்கிய ஸ்டார்ட் அப் நிறுவனம்!

கன்னியாகுமரி : கூடுதல் பேருந்துகள் இயக்க கோரி பாஜக எம்.எல்.ஏ மனு!

திமுக ஆட்சியில் காவல்துறைக்கே பாதுகாப்பு இல்லை – அண்ணாமலை

தூத்துக்குடியில் ரூ.4,500 கோடி திட்டங்களை அர்ப்பணிக்கும் பிரதமர் மோடி!

பிரான்ஸ் அதிபருக்கு அமெரிக்கா கண்டனம்!

ராமநாதபுரம் : டிராக்டர் கவிழ்ந்து விபத்து – 3 பெண்கள் பலி!

சேலம் : சாமி சிலைகளை எடுத்து சென்ற விஏஓ மீது நடவடிக்கை எடுத்திடுக – முதியவர் மாவட்ட ஆட்சியரிடம் புகார்!

சென்னை : உங்களுடன் ஸ்டாலின் முகாமில் மனு கொடுக்க நீண்ட நேரம் காத்திருப்பு!

ராணுவ வீரர்களின்  துணிச்சலுக்கும், அசைக்க முடியாத அர்ப்பணிப்புக்கும் வணக்கம் செலுத்துவோம் – மத்திய அமைச்சர் எல்.முருகன்

டெல்லி : யமுனை நதியில் நீர்வரத்து அதிகரிப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies