நாடாளுமன்றத்தில் அனைத்து பிரச்சனைகள் குறித்தும் விவாதிக்கத் தயார்: மத்திய அரசு!
Jul 25, 2025, 07:32 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

நாடாளுமன்றத்தில் அனைத்து பிரச்சனைகள் குறித்தும் விவாதிக்கத் தயார்: மத்திய அரசு!

Web Desk by Web Desk
Jan 26, 2024, 02:43 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

நாடாளுமன்றத்தின் இடைக்கால பட்ஜெட் கூட்டத்தொடர் வரும் 31-ம் தேதி தொடங்கவிருக்கும் நிலையில், அனைத்துப் பிரச்சனைகள் குறித்தும் விவாதிக்க மத்திய அரசு தயாராக இருப்பதாக மத்திய அமைச்சர் அர்ஜூன் ராம் மேக்வால் தெரிவித்திருக்கிறார்.

ஒவ்வொரு முறையும் நாடாளுமன்றத் தேர்தலுக்கு முன்பாக பிப்ரவரி 1-ம் தேதி இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்வது வழக்கம். அந்த வகையில், பா.ஜ.க. தலைமையிலான மத்திய அரசின் பதவிக்காலம் வரும் ஜூன் மாதத்தோடு நிறைவடைகிறது. ஆகவே, ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் நாடாளுமன்றத் தேர்தல் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதையடுத்து, நாடாளுமன்ற இடைக்கால பட்ஜெட் கூட்டத்தொடர் வரும் 31-ம் தேதி தொடங்கி பிப்ரவரி 9-ம் தேதி வரை நடைபெறவிருக்கிறது. இதையொட்டி, மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பிப்ரவரி 1-ம் தேதி இடைக்கால பட்ஜெட்டை தாக்கல் செய்கிறார்.

இந்தக் கூட்டத் தொடரில்தான் அவை விதிமுறைகளின் கீழ் அனைத்து பிரச்சனைகள் குறித்தும் விவாதிக்க மத்திய அரசு தயாராக இருப்பதாக நாடாளுமன்ற விவகாரங்கள் துறை இணை அமைச்சரும், சட்டத்துறை அமைச்சருமான அர்ஜூன் ராம் மேக்வால் தெரிவித்திருக்கிறார்.

இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் அர்ஜூன் ராம் மேக்வால், “எதிர்கட்சிகள் தாங்கள் விவாதிக்க விரும்பும் பிரச்சனைகள் குறித்து நாடாளுமன்ற சபாநாயகர்களிடம் நோட்டீஸ் அளிக்கலாம். அந்த நோட்டீஸ்கள் ஏற்கப்படும் பட்சத்தில், அது குறித்த விவாதத்துக்கு மத்திய அரசு தயாராக இருக்கிறது.

இந்த நடைமுறையை அரசு எப்போதுமே கடைப்பிடித்து வருகிறது. அதேபோல, கூட்டத் தொடரின் முதல் நாளில் இரு அவைகளின் கூட்டுக் கூட்டம் நடைபெறும். இதில், குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு உரையாற்றுகிறார்” என்று தெரிவித்திருக்கிறார்.

இந்த இடைக்கால பட்ஜெட்டைத் தொடர்ந்து, நாடாளுமன்றத் தேர்தலுக்குப் பிறகு அமையும் புதிய அரசு முழு பட்ஜெட்டை தாக்கல் செய்யும். பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு தனது 2-வது ஆட்சிக் காலத்தில் தாக்கல் செய்யும் கடைசி பட்ஜெட் இது என்பதால் மக்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு நிலவுகிறது.

இது ஒருபுறம் இருக்க, பட்ஜெட் தயாரிப்பு டிஜிட்டல் முறைக்கு மாறினாலும், பழங்கால வழக்கப்படி பட்ஜெட் தயாரிக்கும் அரசு அதிகாரிகளுக்கு அல்வா கிண்டி வழங்கும் சம்பிரதாயம் இன்றுவரை கடைப்பிடிக்கப்படு வருகிறது.

அதன்படி, தலைநகர் டெல்லியில் உள்ள நிதித்துறை அமைச்சகத்தின் தலைமை அலுவலகத்தில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் முன்னிலையில் நேற்று அல்வா தயாரிக்கப்பட்டு அதிகாரிகளுக்கு வழங்கப்பட்டது.

Tags: Nirmala Sitharamanfinance ministerInterim Budget
ShareTweetSendShare
Previous Post

பாஜக தலைமையகத்தில் தேசிய கொடி ஏற்றினார் ஜே.பி. நட்டா!

Next Post

நாரி சக்தி வந்தான் ஆதினியம் பெண்களுக்கு அதிகாரமளிக்கும் ஒரு புரட்சிக் கருவி: திரௌபதி முர்மு!

Related News

நாடாளுமன்றம் முடக்கம் – 2 நாளில் ரூ.25 கோடி வீண் – மக்கள் பணத்தை வீணடிக்கும் எதிர்க்கட்சிகள்!

ராஜேந்திர சோழன் நினைவு நாணயத்தை வெளியிடுகிறார் பிரதமர் மோடி!

கிட்னி திருட்டு இல்லை – முறைகேடு, மா சுப்ரமணியன் : இப்படி சொல்வதற்கு உங்களுக்கு வெட்கமாக இல்லையா? – அண்ணாமலை கேள்வி!

தொழிலாளர்கள் தங்கும் விடுதி : திறந்து 3 மாதங்களாகியும் செயல்படாத அவலம்!

மத்திய அரசின் நிதி எங்கு தான் செல்கிறது? : அண்ணாமலை கேள்வி!

கோவை குண்டுவெடிப்பில் கைதான டெய்லர் ராஜா மீது மேலும் 2 வழக்குகள்!

Load More

அண்மைச் செய்திகள்

சிறுவன் கடத்தப்பட்ட வழக்கு : நாடு போலீஸ் ராஜ்ஜியத்திற்கு செல்கிறதோ?- சென்னை உயர்நீதிமன்றம் காட்டம்!

கங்கை கொண்ட சோழபுரம் பிரதமர் மோடி வருகை : ஹெலிகாப்டரை தரையிறக்கி பாதுகாப்புத்துறை அதிகாரிகள் சோதனை!

டிரான்ஸ்பார்மர்களை கொள்முதல் டெண்டர் ஒதுக்கீட்டில் முறைகேடு : செந்தில் பாலாஜிக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு!

நவீன ட்ரோன்களை உருவாக்க வேண்டியது அவசியம் : முப்படைகளின் தலைமைத் தளபதி அனில் சவுஹான்

திருப்பூர் : கர்ப்பிணி பெண்ணுக்கு காலாவதியான ஓ.ஆர்.எஸ் பவுடர் வழங்கியதால் அதிர்ச்சி!

போக்சோ சட்டத்தில் வயது வரம்பை குறைக்க முடியாது – மத்திய அரசு

குடியரசு துணைத் தலைவர் தேர்தல் – அதிகாரி நியமனம்!

நார்டன் மோட்டார் சைக்கிளை பார்வையிட்ட இரு நாட்டு பிரதமர்கள்!

ப்ரீ புக்கிங்கில் வசூலை குவிக்கும் கூலி திரைப்படம்!

நீலகிரி : லாரி மோதி கார் பள்ளத்தில் கவிழ்ந்ததில் ஒருவர் பலி!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies