நாடாளுமன்றத்தில் அனைத்து பிரச்சனைகள் குறித்தும் விவாதிக்கத் தயார்: மத்திய அரசு!
Mar 15, 2026, 08:13 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

நாடாளுமன்றத்தில் அனைத்து பிரச்சனைகள் குறித்தும் விவாதிக்கத் தயார்: மத்திய அரசு!

Abinaya Ganesan by Abinaya Ganesan
Jan 26, 2024, 02:43 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

நாடாளுமன்றத்தின் இடைக்கால பட்ஜெட் கூட்டத்தொடர் வரும் 31-ம் தேதி தொடங்கவிருக்கும் நிலையில், அனைத்துப் பிரச்சனைகள் குறித்தும் விவாதிக்க மத்திய அரசு தயாராக இருப்பதாக மத்திய அமைச்சர் அர்ஜூன் ராம் மேக்வால் தெரிவித்திருக்கிறார்.

ஒவ்வொரு முறையும் நாடாளுமன்றத் தேர்தலுக்கு முன்பாக பிப்ரவரி 1-ம் தேதி இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்வது வழக்கம். அந்த வகையில், பா.ஜ.க. தலைமையிலான மத்திய அரசின் பதவிக்காலம் வரும் ஜூன் மாதத்தோடு நிறைவடைகிறது. ஆகவே, ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் நாடாளுமன்றத் தேர்தல் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதையடுத்து, நாடாளுமன்ற இடைக்கால பட்ஜெட் கூட்டத்தொடர் வரும் 31-ம் தேதி தொடங்கி பிப்ரவரி 9-ம் தேதி வரை நடைபெறவிருக்கிறது. இதையொட்டி, மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பிப்ரவரி 1-ம் தேதி இடைக்கால பட்ஜெட்டை தாக்கல் செய்கிறார்.

இந்தக் கூட்டத் தொடரில்தான் அவை விதிமுறைகளின் கீழ் அனைத்து பிரச்சனைகள் குறித்தும் விவாதிக்க மத்திய அரசு தயாராக இருப்பதாக நாடாளுமன்ற விவகாரங்கள் துறை இணை அமைச்சரும், சட்டத்துறை அமைச்சருமான அர்ஜூன் ராம் மேக்வால் தெரிவித்திருக்கிறார்.

இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் அர்ஜூன் ராம் மேக்வால், “எதிர்கட்சிகள் தாங்கள் விவாதிக்க விரும்பும் பிரச்சனைகள் குறித்து நாடாளுமன்ற சபாநாயகர்களிடம் நோட்டீஸ் அளிக்கலாம். அந்த நோட்டீஸ்கள் ஏற்கப்படும் பட்சத்தில், அது குறித்த விவாதத்துக்கு மத்திய அரசு தயாராக இருக்கிறது.

இந்த நடைமுறையை அரசு எப்போதுமே கடைப்பிடித்து வருகிறது. அதேபோல, கூட்டத் தொடரின் முதல் நாளில் இரு அவைகளின் கூட்டுக் கூட்டம் நடைபெறும். இதில், குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு உரையாற்றுகிறார்” என்று தெரிவித்திருக்கிறார்.

இந்த இடைக்கால பட்ஜெட்டைத் தொடர்ந்து, நாடாளுமன்றத் தேர்தலுக்குப் பிறகு அமையும் புதிய அரசு முழு பட்ஜெட்டை தாக்கல் செய்யும். பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு தனது 2-வது ஆட்சிக் காலத்தில் தாக்கல் செய்யும் கடைசி பட்ஜெட் இது என்பதால் மக்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு நிலவுகிறது.

இது ஒருபுறம் இருக்க, பட்ஜெட் தயாரிப்பு டிஜிட்டல் முறைக்கு மாறினாலும், பழங்கால வழக்கப்படி பட்ஜெட் தயாரிக்கும் அரசு அதிகாரிகளுக்கு அல்வா கிண்டி வழங்கும் சம்பிரதாயம் இன்றுவரை கடைப்பிடிக்கப்படு வருகிறது.

அதன்படி, தலைநகர் டெல்லியில் உள்ள நிதித்துறை அமைச்சகத்தின் தலைமை அலுவலகத்தில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் முன்னிலையில் நேற்று அல்வா தயாரிக்கப்பட்டு அதிகாரிகளுக்கு வழங்கப்பட்டது.

Tags: Nirmala Sitharamanfinance ministerInterim Budget
ShareTweetSendShare
Previous Post

பாஜக தலைமையகத்தில் தேசிய கொடி ஏற்றினார் ஜே.பி. நட்டா!

Next Post

நாரி சக்தி வந்தான் ஆதினியம் பெண்களுக்கு அதிகாரமளிக்கும் ஒரு புரட்சிக் கருவி: திரௌபதி முர்மு!

Related News

மோடியின் நவீன ராஜதந்திரம் – இந்தியாவுடன் இணக்கமாக இருக்க விரும்பும் ஈரான்!

ஐசிசி டி20 உலகக் கோப்பையை வென்ற இந்திய அணியினர் புகழ்பெற்ற சித்திவிநாயகர் கோயிலில் வழிபாடு!

கேரள மாநிலம் கருநாகப்பள்ளியில் பிரபல ரவுடி கும்பல் தலைவன் பட்டப்பகலில் வெட்டிக்கொலை!

சமையல் எரிவாயு குறித்த அச்சம் வேண்டாம் – மத்திய அரசு

திமுக மாணவரணி செயலாளர் பொறுப்பில் இருந்து ராஜீவ்காந்தி திடீர் விடுவிப்பு!

தூத்துக்குடி கொடூரம்.. அமைச்சர் கீதா ஜீவன், கனிமொழி எம்பி ராஜினாமா செய்ய வேண்டும் – பாஜக மாநில துணை தலைவர் வலியுறுத்தல்

Load More

அண்மைச் செய்திகள்

தூத்துக்குடியில் மாணவிக்கு நேர்ந்த கொடூரம் – 4 நாட்களாகியும் குற்றவாளிகளை கைது செய்ய முடியாமல் திணறும் போலீசார்..பொதுமக்கள் சாலைமறியல்!

மதுரை விமான நிலையத்தில் புதிய வான் கட்டுப்பாட்டு கட்டிடத்தை திறந்து வைத்த மத்திய அமைச்சர் ராம் மோகன் நாயுடு!

AI தொழில்நுட்பத்தை பயன்படுத்தி எதிர்க்கட்சிகள் பொய் பிரச்சாரம் செய்கிறது – மத்திய அமைச்சர் அர்ஜூன் ராம் மேக்வால் குற்றச்சாட்டு

ஷில்லாங் – சில்சார் இடையே அதிவேக 4 வழித்திட்டத்திற்கு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார்!

சண்முக நதி கரையோரம் மலைபோல் தேங்கும் குப்பைகளால் சுகாதார சீர்கேடு!

மலைக்கோயிலில் இந்து முன்னணி சார்பில் தூய்மை பணிகள்!

தூத்துக்குடி கொடூரம் -அதிமுக சார்பில் நீதி வேண்டி வாயில் கருப்பு துணி கட்டி ஆர்ப்பாட்டம்

காதணி விழாவுக்கு ரூ.15 லட்சம் மதிப்பில் அத்தை சீர்வரிசை!

ஆண்டிபட்டி அருகே முற்றிலும் இல்லாமல் போன வைகை அணையின் நீர்வரத்து!

மத்திய விமான போக்குவரத்து அமைச்சருக்கு பாரம்பரிய வரவேற்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies