நாடாளுமன்றத்தில் அனைத்து பிரச்சனைகள் குறித்தும் விவாதிக்கத் தயார்: மத்திய அரசு!
Jun 15, 2026, 03:46 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

நாடாளுமன்றத்தில் அனைத்து பிரச்சனைகள் குறித்தும் விவாதிக்கத் தயார்: மத்திய அரசு!

Abinaya Ganesan by Abinaya Ganesan
Jan 26, 2024, 02:43 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

நாடாளுமன்றத்தின் இடைக்கால பட்ஜெட் கூட்டத்தொடர் வரும் 31-ம் தேதி தொடங்கவிருக்கும் நிலையில், அனைத்துப் பிரச்சனைகள் குறித்தும் விவாதிக்க மத்திய அரசு தயாராக இருப்பதாக மத்திய அமைச்சர் அர்ஜூன் ராம் மேக்வால் தெரிவித்திருக்கிறார்.

ஒவ்வொரு முறையும் நாடாளுமன்றத் தேர்தலுக்கு முன்பாக பிப்ரவரி 1-ம் தேதி இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்வது வழக்கம். அந்த வகையில், பா.ஜ.க. தலைமையிலான மத்திய அரசின் பதவிக்காலம் வரும் ஜூன் மாதத்தோடு நிறைவடைகிறது. ஆகவே, ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் நாடாளுமன்றத் தேர்தல் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதையடுத்து, நாடாளுமன்ற இடைக்கால பட்ஜெட் கூட்டத்தொடர் வரும் 31-ம் தேதி தொடங்கி பிப்ரவரி 9-ம் தேதி வரை நடைபெறவிருக்கிறது. இதையொட்டி, மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பிப்ரவரி 1-ம் தேதி இடைக்கால பட்ஜெட்டை தாக்கல் செய்கிறார்.

இந்தக் கூட்டத் தொடரில்தான் அவை விதிமுறைகளின் கீழ் அனைத்து பிரச்சனைகள் குறித்தும் விவாதிக்க மத்திய அரசு தயாராக இருப்பதாக நாடாளுமன்ற விவகாரங்கள் துறை இணை அமைச்சரும், சட்டத்துறை அமைச்சருமான அர்ஜூன் ராம் மேக்வால் தெரிவித்திருக்கிறார்.

இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் அர்ஜூன் ராம் மேக்வால், “எதிர்கட்சிகள் தாங்கள் விவாதிக்க விரும்பும் பிரச்சனைகள் குறித்து நாடாளுமன்ற சபாநாயகர்களிடம் நோட்டீஸ் அளிக்கலாம். அந்த நோட்டீஸ்கள் ஏற்கப்படும் பட்சத்தில், அது குறித்த விவாதத்துக்கு மத்திய அரசு தயாராக இருக்கிறது.

இந்த நடைமுறையை அரசு எப்போதுமே கடைப்பிடித்து வருகிறது. அதேபோல, கூட்டத் தொடரின் முதல் நாளில் இரு அவைகளின் கூட்டுக் கூட்டம் நடைபெறும். இதில், குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு உரையாற்றுகிறார்” என்று தெரிவித்திருக்கிறார்.

இந்த இடைக்கால பட்ஜெட்டைத் தொடர்ந்து, நாடாளுமன்றத் தேர்தலுக்குப் பிறகு அமையும் புதிய அரசு முழு பட்ஜெட்டை தாக்கல் செய்யும். பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு தனது 2-வது ஆட்சிக் காலத்தில் தாக்கல் செய்யும் கடைசி பட்ஜெட் இது என்பதால் மக்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு நிலவுகிறது.

இது ஒருபுறம் இருக்க, பட்ஜெட் தயாரிப்பு டிஜிட்டல் முறைக்கு மாறினாலும், பழங்கால வழக்கப்படி பட்ஜெட் தயாரிக்கும் அரசு அதிகாரிகளுக்கு அல்வா கிண்டி வழங்கும் சம்பிரதாயம் இன்றுவரை கடைப்பிடிக்கப்படு வருகிறது.

அதன்படி, தலைநகர் டெல்லியில் உள்ள நிதித்துறை அமைச்சகத்தின் தலைமை அலுவலகத்தில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் முன்னிலையில் நேற்று அல்வா தயாரிக்கப்பட்டு அதிகாரிகளுக்கு வழங்கப்பட்டது.

Tags: finance ministerInterim BudgetNirmala Sitharaman
ShareTweetSendShare
Previous Post

பாஜக தலைமையகத்தில் தேசிய கொடி ஏற்றினார் ஜே.பி. நட்டா!

Next Post

நாரி சக்தி வந்தான் ஆதினியம் பெண்களுக்கு அதிகாரமளிக்கும் ஒரு புரட்சிக் கருவி: திரௌபதி முர்மு!

Related News

முதலமைச்சர் விஜய் சங்கீதா விவாகரத்து வழக்கு; திங்களன்று விசாரணை

ஏ.ஐ தொழில்நுட்பத்துறைக்கு வளமான எதிர்காலம்; பிரான்சில் பிரதமர் மோடி பேச்சு

பாலிஸ்டிக் ஏவுகணைகளை இடைமறித்து அழிக்கும் சோதனை வெற்றி : DRDO அசத்தல் சாதனை – சிறப்பு தொகுப்பு!

பனிக்கட்டி சூழ்ந்த ஏரியில் மூழ்கிய சிறுமியை காப்பாற்றிய இந்திய தொழிலாளி : கெளரவ குடிமகன் அந்தஸ்து வழங்கி கவுரவித்த ருமேனியா – சிறப்பு தொகுப்பு!

கீர்த்தி சக்ரா விருது பெற்ற ராணுவ வீரருக்கு பாராட்டு – காலில் விழுந்து ஆசி பெற்ற தவெக எம்எல்ஏ!

பஞ்சாப் எல்லையில் தீவிர கண்காணிப்பு : ட்ரோன்கள் மூலம் போதைபொருள், ஆயுத கடத்தலை தடுக்க தீவிர நடவடிக்கை – சிறப்பு தொகுப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

அமெரிக்கா உடனான அமைதி ஒப்பந்தம் இன்று கையெழுத்தாக வாய்ப்பில்லை – ஈரான்

இந்தியா, நேபாளம் இடையே பயணிகள் ரயில் போக்குவரத்து – இருநாட்டு அதிகாரிகள் ஆலோசனை!

கோவை மாநகராட்சியில் கமிஷன் எதுவும் இன்றி டெண்டர் – ஒப்பந்ததாரர்கள் மகிழ்ச்சி!

இந்திய ராணுவத்தின் தலைமை தளபதியாக லெப்டினன்ட் ஜெனரல் தீரஜ்சேத் நியமனம்!

தவெக ஆட்சியில் பெண் காவலர்களுக்கே பாதுகாப்பில்லை – நயினார் நாகேந்திரன்

சிவகங்கை அருகே பெண் காவலருக்கு பாலியல் சீண்டல் – 3 பேர் கைது!

கன்னியாகுமரி அருகே கட்டுப்பாட்டை இழந்த கார் அடுத்தடுத்து வாகனங்களின் மீது மோதி விபத்து – 10 பேர் காயம்!

தவெக ஆட்சியில் கேலிக்கூத்து ஆன ஜனநாயகம் – மு.க.ஸ்டாலின் விமர்சனம்!

தவெகவில் இணைந்த மாற்று கட்சியினர் – அனைவருக்கும் உரிய மரியாதை அளிக்கப்படும் என அமைச்சர் ஆனந்த் பேச்சு!

FIFA உலகக்கோப்பை கால்பந்து தொடர் – கத்தார், சுவிட்சர்லாந்துக்கு இடையேயான ஆட்டம் டிரா!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies