இந்தியாவுக்கு நன்றி: பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரான்!
Mar 15, 2026, 03:32 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

இந்தியாவுக்கு நன்றி: பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரான்!

Abinaya Ganesan by Abinaya Ganesan
Jan 26, 2024, 06:13 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

குடியரசு தின விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்துகொள்ள என்னை அழைத்தது, பிரான்ஸ் நாட்டுக்கு அளிக்கப்பட்ட கௌரவம். இதற்காக இந்தியாவிற்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன் என்று பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரான் கூறியிருக்கிறார்.

இந்தியாவின் 75-வது குடியரசு தின விழா நாடு முழுவதும் இன்று கோலாகலமாகக் கொண்டாடப்பட்டது. அந்த வகையில், டெல்லியில் நடைபெற்ற விழாவில் பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரான் சிறப்பு விருந்தினராக அழைக்கப்பட்டிருந்தார். இதற்காக பிரான்ஸில் இருந்து ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூருக்கு வந்தடைந்தார். அங்கு அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

இதனிடையே, உத்தரப் பிரதேச மாநிலம் புலந்த்ஷாஹரில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்துகொண்ட பிரதமர் நரேந்திர மோடி, நேராக ஜெய்ப்பூர் சென்று பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரானை வரவேற்றார். தொடர்ந்து, இருவரும் ஜந்தர் மந்தரில் இருந்து சங்கனேரி கேட் வரை ரோடு ஷோ நடத்தினர். இந்த ரோடு ஷோவில் ஏராளமானோர் கலந்துகொண்டனர்.

இதையடுத்து, இம்மானுவேல் மேக்ரான் தனது எக்ஸ் பக்தத்தில் வெளியிட்டிருக்கும் பதிவில், “2030-ம் ஆண்டுக்குள் பிரான்ஸில் 30,000 இந்திய மாணவர்கள் இருப்பார்கள். இதுவே எனது உயர்ந்த இலக்கு. இதனை நிகழ்த்துவதில் உறுதியாக இருக்கிறேன்” என்று தெரிவித்திருந்தார்.

மேலும், இந்திய மாணவர்களுக்கு பிரான்ஸ் எப்படி உதவும் என்று விளக்கிய மேக்ரான், “பிரெஞ்சு மொழி தெரியாத மாணவர்களை அங்குள்ள பல்கலைக்கழகங்களில் படிக்க அனுமதிக்கும் வகையில், சர்வதேச வகுப்புகள் நடத்தப்படும். மாணவர்கள், பிரெஞ்ச் மொழியைக் கற்க புதிய மையங்களுடன் ‛அலையன்ஸ் பிரான்சைஸ் நெட்வொர்க்கை’ உருவாக்கி வருகிறோம்.

சர்வதேச அளவில் வகுப்புகளை உருவாக்குகிறோம். இது பிரெஞ்சு மொழி கற்க விரும்பும் மாணவர்களை எங்கள் பல்கலைக்கழகங்களில் சேர அனுமதிக்கும். பிரான்ஸில் படித்த முன்னாள் இந்திய மாணவர்களுக்கும் விசா நடைமுறையை எளிமையாக்குவோம். இந்தியாவும், பிரான்ஸும் எதிர்காலத்தில் இணைந்து செய்ய வேண்டியது அதிகம்” என்று தெரிவித்திருந்தார்.

தொடர்ந்து, டெல்லியில் நடைபெற்ற நாட்டின் 75-வது குடியரசு தின விழாவில் பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரான் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டனர். பின்னர், இதுகுறித்து தனது எக்ஸ் பக்கத்தில் அவர் பதிவு ஒன்றையும் வெளியிட்டிருந்தார்.

அப்பதிவில், “குடியரசு தின விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்துகொள்ள என்னை அழைத்தது பிரான்ஸ் நாட்டுக்கு அளிக்கப்பட்ட கௌரவம். இதற்காக இந்தியாவிற்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்” என்று இம்மானுவேல் மேக்ரான் கூறியிருக்கிறார்.

Tags: Emmanuel MacronFrance PresidentThank to India
ShareTweetSendShare
Previous Post

தி.மு.க. எம்.எல்.ஏ. குடும்பத்தினருக்கு பிணை வழங்க எதிர்ப்பு!

Next Post

திமுக ஆட்சியில் தொடர்ந்து மோசமான நிலைக்கு செல்லும் சட்டம் ஒழுங்கு : அண்ணாமலை

Related News

அரசு மருத்துவமனையில் கஞ்சா போதையில் கொலை முயற்சி! – பொதுமக்கள் அச்சம்!

சென்னையிலிருந்து லடாக் செல்லும் கார் பயணத்தில் பெண் ஒருவர் தனியாக கார் ஓட்டி செல்வது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

மாமுல் கேட்டு மளிகை கடையை அடித்து நொறுக்கும் பிரபல ரவுடி – வெளியான பகீர் சிசிடிவி

மாலி நாட்டில் தென்காசியை சேர்ந்த நபரை கடத்திய தீவிரவாதிகள்..பல்வேறு முயற்சியால் மீட்ட மத்திய அரசு – நேரில் போய் சந்தித்த அதிமுக எம்.எல்.ஏ

திமுக ஆட்சியில், யாருக்குமே சட்டத்தின் மீது பயமில்லை – அண்ணாமலை குற்றச்சாட்டு!

புதுச்சேரியில் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தையில் காங்கிரஸ் கட்சியனரை 1 மணி நேரமாக காக்க வைத்த திமுகவினர்!

Load More

அண்மைச் செய்திகள்

பெண் காவலருக்கு பாலியல் தொல்லை – காவல் அதிகாரி கைது!

குளறுபடி காரணமாக ஒத்திவைக்கப்பட்ட குரூப் 2, 2ஏ தேர்வுகள் தமிழகம் முழுவதும் இன்று நடைபெற்று வருகிறது.

ரேபிஸ் நோயால் நாயை போன்றே குரைத்த சிறுவன் – காண்போரை கலங்கச் செய்த சம்பவம்!

மாணவி படுகொலை – நீதிகேட்டு இரவிலும் மக்கள் சாலை மறியல்!

ஆப்கானிஸ்தானில் வான்வழித் தாக்குதல் நடத்திய பாகிஸ்தான் – இந்தியா கடும் கண்டனம்!

தொகுதி மக்களுக்கு நேரில் சென்று நன்றி தெரிவித்த அதிமுக எம்.பி தம்பிதுரை!

தேர்தல் நெருங்கும் நேரத்தில் மாற்றுக் கட்சியில் இருந்து அதிமுக-வில் இணைந்த 1000 பேர்!

குரு சாமி பள்ளம் விவகாரம்… அதிகாரிகளுடன் பொதுமக்கள் கடும் வாக்குவாதம்!

சபரிமலை ஐய்யப்பன் கோயிலில் பூஜை காலத்தின்போது விற்பனை செய்யப்பட்ட நெய்யில் லட்சக்கணக்கில் முறைகேடு!

தமிழகத்தில் நேற்று நடைபெற்ற தேசிய லோக் அதாலத்தில் ஒரு லட்சத்து 3 ஆயிரத்து 366 வழக்குகளுக்கு தீா்வு

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies