இந்தியாவுக்கு நன்றி: பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரான்!
Jan 14, 2026, 05:36 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

இந்தியாவுக்கு நன்றி: பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரான்!

Abinaya Ganesan by Abinaya Ganesan
Jan 26, 2024, 06:13 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

குடியரசு தின விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்துகொள்ள என்னை அழைத்தது, பிரான்ஸ் நாட்டுக்கு அளிக்கப்பட்ட கௌரவம். இதற்காக இந்தியாவிற்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன் என்று பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரான் கூறியிருக்கிறார்.

இந்தியாவின் 75-வது குடியரசு தின விழா நாடு முழுவதும் இன்று கோலாகலமாகக் கொண்டாடப்பட்டது. அந்த வகையில், டெல்லியில் நடைபெற்ற விழாவில் பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரான் சிறப்பு விருந்தினராக அழைக்கப்பட்டிருந்தார். இதற்காக பிரான்ஸில் இருந்து ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூருக்கு வந்தடைந்தார். அங்கு அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

இதனிடையே, உத்தரப் பிரதேச மாநிலம் புலந்த்ஷாஹரில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்துகொண்ட பிரதமர் நரேந்திர மோடி, நேராக ஜெய்ப்பூர் சென்று பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரானை வரவேற்றார். தொடர்ந்து, இருவரும் ஜந்தர் மந்தரில் இருந்து சங்கனேரி கேட் வரை ரோடு ஷோ நடத்தினர். இந்த ரோடு ஷோவில் ஏராளமானோர் கலந்துகொண்டனர்.

இதையடுத்து, இம்மானுவேல் மேக்ரான் தனது எக்ஸ் பக்தத்தில் வெளியிட்டிருக்கும் பதிவில், “2030-ம் ஆண்டுக்குள் பிரான்ஸில் 30,000 இந்திய மாணவர்கள் இருப்பார்கள். இதுவே எனது உயர்ந்த இலக்கு. இதனை நிகழ்த்துவதில் உறுதியாக இருக்கிறேன்” என்று தெரிவித்திருந்தார்.

மேலும், இந்திய மாணவர்களுக்கு பிரான்ஸ் எப்படி உதவும் என்று விளக்கிய மேக்ரான், “பிரெஞ்சு மொழி தெரியாத மாணவர்களை அங்குள்ள பல்கலைக்கழகங்களில் படிக்க அனுமதிக்கும் வகையில், சர்வதேச வகுப்புகள் நடத்தப்படும். மாணவர்கள், பிரெஞ்ச் மொழியைக் கற்க புதிய மையங்களுடன் ‛அலையன்ஸ் பிரான்சைஸ் நெட்வொர்க்கை’ உருவாக்கி வருகிறோம்.

சர்வதேச அளவில் வகுப்புகளை உருவாக்குகிறோம். இது பிரெஞ்சு மொழி கற்க விரும்பும் மாணவர்களை எங்கள் பல்கலைக்கழகங்களில் சேர அனுமதிக்கும். பிரான்ஸில் படித்த முன்னாள் இந்திய மாணவர்களுக்கும் விசா நடைமுறையை எளிமையாக்குவோம். இந்தியாவும், பிரான்ஸும் எதிர்காலத்தில் இணைந்து செய்ய வேண்டியது அதிகம்” என்று தெரிவித்திருந்தார்.

தொடர்ந்து, டெல்லியில் நடைபெற்ற நாட்டின் 75-வது குடியரசு தின விழாவில் பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரான் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டனர். பின்னர், இதுகுறித்து தனது எக்ஸ் பக்கத்தில் அவர் பதிவு ஒன்றையும் வெளியிட்டிருந்தார்.

அப்பதிவில், “குடியரசு தின விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்துகொள்ள என்னை அழைத்தது பிரான்ஸ் நாட்டுக்கு அளிக்கப்பட்ட கௌரவம். இதற்காக இந்தியாவிற்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்” என்று இம்மானுவேல் மேக்ரான் கூறியிருக்கிறார்.

Tags: Emmanuel MacronFrance PresidentThank to India
ShareTweetSendShare
Previous Post

தி.மு.க. எம்.எல்.ஏ. குடும்பத்தினருக்கு பிணை வழங்க எதிர்ப்பு!

Next Post

திமுக ஆட்சியில் தொடர்ந்து மோசமான நிலைக்கு செல்லும் சட்டம் ஒழுங்கு : அண்ணாமலை

Related News

ஸ்டார்லிங் சேவையை துண்டித்த அதிநவீன ஜாமிங் தொழில்நுட்பம் – எலான் மஸ்கை அலறவிட்ட ஈரான் சீனா, ரஷ்யா உதவியதா?

வனத்தை ஆக்கிரமிக்கும் பார்த்தீனிய செடிகள் – வனவிலங்குகளை காக்க கோரிக்கை!

ஈரானில் கொடூரமாக கொல்லப்பட்ட மாணவி – இளைஞர்கள் போராட்டத்தின் அடையாளம்!

வெனிசுலா அதிபர் நான் தான் -அதிகார துஷ்பிரயோகம் அதிரடியில் டிரம்ப்!

பிரதமர் மோடியின் வருகை தமிழகத்தில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தும் – தமிழிசை சௌந்தரராஜன்

அரசியல் நன்றாக இருந்தால் தமிழர் பொங்கல்,அரசியல் நன்றாக இல்லை என்றால் திமுக பொங்கல்- அண்ணாமலை

Load More

அண்மைச் செய்திகள்

போராட்டத்தில் ஈடுபட்டு வரும் பகுதி நேர ஆசிரியர் தற்கொலை முயற்சி!

12 நாட்களில் பத்தரை லட்சம் பக்தர்கள் சபரிமலையில் சாமி தரிசனம்!

மழையால் நெற்பயிர்கள் சாய்ந்து சேதம் – விவசாயிகள் கவலை!

சென்னை தாம்பரம் அருகே தனியார் கல்லூரியில் நடைபெற்ற பொங்கல் விழா – மாணவ, மாணவிகள் பொங்கல் வைத்து வழிபாடு

சட்டமன்ற தேர்தல் கூட்டணி குறித்து ஜனவரி மாதத்திற்குள் முடிவெடுக்கப்படும் – பிரேமலதா விஜயகாந்த்!

“பெண்ணை பொய் புகார் கூற வைத்து வழக்கு” – எஸ்.ஜி.சூர்யா குற்றச்சாட்டு

சாத்தான் வேதம் ஓதுகிறது.. – ராகுலுக்கு தமிழிசை கடும் கண்டனம்

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திருச்செந்தூர் முருகன் கோயிலில் குவியும் பக்தர்கள்!

சென்னையில் பிரதமர் மாநாடு – இடம் தேர்வு பணியில் பாஜக மாநிலத்தலைவர்

தொடரும் ஆபரேஷன் சிந்தூர் – பாகிஸ்தானுக்கு ராணுவ தளபதி எச்சரிக்கை!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies