இந்தியாவுக்கு நன்றி: பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரான்!
Oct 28, 2025, 10:23 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

இந்தியாவுக்கு நன்றி: பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரான்!

Web Desk by Web Desk
Jan 26, 2024, 06:13 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

குடியரசு தின விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்துகொள்ள என்னை அழைத்தது, பிரான்ஸ் நாட்டுக்கு அளிக்கப்பட்ட கௌரவம். இதற்காக இந்தியாவிற்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன் என்று பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரான் கூறியிருக்கிறார்.

இந்தியாவின் 75-வது குடியரசு தின விழா நாடு முழுவதும் இன்று கோலாகலமாகக் கொண்டாடப்பட்டது. அந்த வகையில், டெல்லியில் நடைபெற்ற விழாவில் பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரான் சிறப்பு விருந்தினராக அழைக்கப்பட்டிருந்தார். இதற்காக பிரான்ஸில் இருந்து ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூருக்கு வந்தடைந்தார். அங்கு அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

இதனிடையே, உத்தரப் பிரதேச மாநிலம் புலந்த்ஷாஹரில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்துகொண்ட பிரதமர் நரேந்திர மோடி, நேராக ஜெய்ப்பூர் சென்று பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரானை வரவேற்றார். தொடர்ந்து, இருவரும் ஜந்தர் மந்தரில் இருந்து சங்கனேரி கேட் வரை ரோடு ஷோ நடத்தினர். இந்த ரோடு ஷோவில் ஏராளமானோர் கலந்துகொண்டனர்.

இதையடுத்து, இம்மானுவேல் மேக்ரான் தனது எக்ஸ் பக்தத்தில் வெளியிட்டிருக்கும் பதிவில், “2030-ம் ஆண்டுக்குள் பிரான்ஸில் 30,000 இந்திய மாணவர்கள் இருப்பார்கள். இதுவே எனது உயர்ந்த இலக்கு. இதனை நிகழ்த்துவதில் உறுதியாக இருக்கிறேன்” என்று தெரிவித்திருந்தார்.

மேலும், இந்திய மாணவர்களுக்கு பிரான்ஸ் எப்படி உதவும் என்று விளக்கிய மேக்ரான், “பிரெஞ்சு மொழி தெரியாத மாணவர்களை அங்குள்ள பல்கலைக்கழகங்களில் படிக்க அனுமதிக்கும் வகையில், சர்வதேச வகுப்புகள் நடத்தப்படும். மாணவர்கள், பிரெஞ்ச் மொழியைக் கற்க புதிய மையங்களுடன் ‛அலையன்ஸ் பிரான்சைஸ் நெட்வொர்க்கை’ உருவாக்கி வருகிறோம்.

சர்வதேச அளவில் வகுப்புகளை உருவாக்குகிறோம். இது பிரெஞ்சு மொழி கற்க விரும்பும் மாணவர்களை எங்கள் பல்கலைக்கழகங்களில் சேர அனுமதிக்கும். பிரான்ஸில் படித்த முன்னாள் இந்திய மாணவர்களுக்கும் விசா நடைமுறையை எளிமையாக்குவோம். இந்தியாவும், பிரான்ஸும் எதிர்காலத்தில் இணைந்து செய்ய வேண்டியது அதிகம்” என்று தெரிவித்திருந்தார்.

தொடர்ந்து, டெல்லியில் நடைபெற்ற நாட்டின் 75-வது குடியரசு தின விழாவில் பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரான் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டனர். பின்னர், இதுகுறித்து தனது எக்ஸ் பக்கத்தில் அவர் பதிவு ஒன்றையும் வெளியிட்டிருந்தார்.

அப்பதிவில், “குடியரசு தின விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்துகொள்ள என்னை அழைத்தது பிரான்ஸ் நாட்டுக்கு அளிக்கப்பட்ட கௌரவம். இதற்காக இந்தியாவிற்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்” என்று இம்மானுவேல் மேக்ரான் கூறியிருக்கிறார்.

Tags: Emmanuel MacronFrance PresidentThank to India
ShareTweetSendShare
Previous Post

தி.மு.க. எம்.எல்.ஏ. குடும்பத்தினருக்கு பிணை வழங்க எதிர்ப்பு!

Next Post

திமுக ஆட்சியில் தொடர்ந்து மோசமான நிலைக்கு செல்லும் சட்டம் ஒழுங்கு : அண்ணாமலை

Related News

தமிழகம் உள்ளிட்ட 12 மாநிலங்களில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் – தலைமை தேர்தல் ஆணையம்

பள்ளிக்கரணை சதுப்புநில காடுகளை பாதுகாக்க பாஜக எந்த எல்லைக்கும் செல்லும் – நயினார் நாகேந்திரன் எச்சரிக்கை!

தமிழகத்தின் பல்வேறு அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் மத்திய குழு ஆய்வு!

பாஜக மூத்த தலைவர் அத்வானி கொலை முயற்சி வழக்கு – முகமது ஹனீபா விடுதலையை ரத்து செய்தது மதுரை உயர் நீதிமன்ற கிளை!

மீண்டும் சாம்பல் பட்டியலில் : பாக்.,தனிமைப்படுத்தப்படும் – FATF அமைப்பு எச்சரிக்கை!

பதற வைக்கும் பகீர் தகவல்கள் : CIA-வின் கொலை சதி முறியடிப்பு உறுதிப்படுத்திய பிரதமர் மோடி?

Load More

அண்மைச் செய்திகள்

பாகிஸ்தானிற்கு நேரடி மிரட்டல் : இந்திய முப்படைகள் நடத்தும் திரிசூல் போர் ஒத்திகை!

பாரத மாதா உங்களை தேடுகிறாள்! வரவேற்கிறாள்! – வெளிநாடுவாழ் இந்தியர்கள் தாயகம் திரும்ப ஸ்ரீதர் வேம்பு அழைப்பு!

பெஷாவரை நெருங்கும் TTP – தாலிபான்களால் கடும் நெருக்கடியில் பாகிஸ்தான்!

ஜார்கண்டில் மருத்துவ அலட்சியம் : 5 சிறுவர்களுக்கு HIV பாதிப்பு – பெற்றோர்கள் அதிர்ச்சி!

எல்.ஐ.சி மீதான நம்பிக்கையை குலைக்க சதியா? – Deep State-ன் ஊதுகுழலா காங்கிரஸ்?

விருப்பம் போல் செயல்படும் AI – மனித பாதுகாப்புக்கு அச்சுறுத்தலா?

மீண்டும் ராஜதந்திரக் குழப்பத்தைத் தூண்டியுள்ள வங்கதேசத்தின் இடைக்காலத் தலைவர் முகமது யூனுஸ்!

சாலைகளில் குளம் போல் தேங்கிய கழிவுநீர் : அலட்சியமாக செயல்படும் மாநகராட்சி அதிகாரிகள்!

கபடியில் தங்கம் வென்ற கார்த்திகா : கண்ணகி நகர் சிங்கப்பெண்!

தெரு நாய்க்கடி விவகாரம் : தலைமை செயலாளர்கள் ஆஜராக ஆணை – உச்சநீதிமன்றம்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies