ஞானிவாபி மசூதி விவகாரம் : விஷ்வ ஹிந்து பரிஷத் வலியுறுத்தல்!
Jan 14, 2026, 08:13 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

ஞானிவாபி மசூதி விவகாரம் : விஷ்வ ஹிந்து பரிஷத் வலியுறுத்தல்!

Murugesan M by Murugesan M
Jan 28, 2024, 11:35 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

ஞானவாபி மசூதி தொடர்பான வரைபடத்தை இந்துக்களிடம் ஒப்படைக்க வேண்டும் என்று விஎச்பி வலியுறுத்தியுள்ளது.

உத்தரப் பிரதேச மாநிலம் வாரணாசியில் புகழ்பெற்ற காசி விஸ்வநாதர் கோவில் அமைந்திருக்கிறது. இதனை ஒட்டி ஞானவாபி மசூதி உள்ளது. இந்த  மசூதி, முகலாய அரசர் ஒளரங்கசீப் காலத்தில் காசி விஸ்வநாதர் கோவிலின் ஒரு பகுதியை இடித்து விட்டு கட்டப்பட்டது என்று இந்துக்கள் கூறிவருகின்றனர்.

இது தொடர்பாக, இந்துக்கள் தரப்பில் தொடரப்பட்ட வழக்கில்,  மசூதிக்குள் தொல்லியல் துறை ஆய்வு செய்து அறிக்கை தாக்கல் செய்யும்படி வாரணாசி நீதிமன்றம்  உத்தரவிட்டது. அதன்படி, தொல்லியல் துறை அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டபோது, மசூதி வளாகத்தில் சிவலிங்கம் கண்டுபிடிக்கப்பட்டது.

இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், தொல்லியல் துறையின்  ஆய்வும் நீண்டு கொண்டே சென்றது. நிறைவாக, தொல்லியல் துறை ஆய்வறிக்கையை டிசம்பர் 18-ம் தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும் என்று வாரணாசி நீதிமன்றம்  உத்தரவிட்டிருந்தது.

அதன்படி, கடந்த மாதம் 18-ம் தேதி ஞானவாபி மசூதி தொடர்பான ஆய்வறிக்கையை தொல்லியல் துறை அதிகாரிகள் தாக்கல் செய்தனர்.  இந்நிலையில் விஷ்வ ஹிந்து பரிஷத் செயல் தலைவர் அலோக் குமார் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் மசூதி ஒரு அற்புதமான கோவிலை இடித்துவிட்டு கட்டப்பட்டது என்பதை மீண்டும் உறுதிப்படுத்துகிறது. கோவில் கட்டமைப்பின் ஒரு பகுதி, குறிப்பாக மேற்கு சுவர் இந்து கோவிலின் மீதமுள்ள பகுதியாகும் என அவர்  தெரிவித்துள்ளார்.

அப்பகுதியில் கண்டுபிடிக்கப்பட்ட சிவலிங்கத்திற்கு இந்துக்கள் சேவை பூஜை செய்ய அனுமதிக்க வேண்டும் என்றும் அவர் கூறினார். எனவே, வழிபாட்டுத் தலங்கள் சட்டம், 1991 இன் பிரிவு 4 இன் படி இந்த அமைப்பை இந்து கோவிலாக அறிவிக்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.

மற்றொரு பொருத்தமான இடத்திற்கு மசூதிக்கு மாற்றவும் மற்றும் காசி  விஸ்வநாதரின் அசல் இடத்தை இந்து சமுதாயத்திடம் ஒப்படைக்கவும் இன்டெஜாமியா கமிட்டிக்கு அவர் அழைப்பு விடுத்தார்.

இந்த நீதியான நடவடிக்கை பாரதத்தின் இரண்டு முக்கிய சமூகங்களுக்கிடையில் இணக்கமான உறவுகளை உருவாக்குவதற்கான ஒரு முக்கியமான படியாக இருக்கும் என  விஷ்வ ஹிந்து பரிஷத் நம்புவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

Tags: mosque premises.VHPGnanavabi MasjidKashi Vishwanath TempleVaranasi court
ShareTweetSendShare
Previous Post

ஞானவாபி மசூதியை இந்துக்களிடம் ஒப்படைக்க வேண்டும் : விஸ்வ ஹிந்து பரிஷத் தலைவர்!

Next Post

நாடார் மகாஜன சங்கத்திற்கு அண்ணாமலை வாழ்த்து!

Related News

500 சதவீதி வரிவிதிப்பு அச்சம் – பின்னலாடை துறைக்கு சலுகை வழங்க கோரிக்கை!

முக்கிய சக்தியாக உருவெடுக்கும் ஜமாத்-இ-இஸ்லாமி – வங்கதேசத்தில் ஆட்சியை பிடிக்கத் துடிக்கும் இஸ்லாமிய குழுக்கள்

ஸ்டார்லிங் சேவையை துண்டித்த அதிநவீன ஜாமிங் தொழில்நுட்பம் – எலான் மஸ்கை அலறவிட்ட ஈரான் சீனா, ரஷ்யா உதவியதா?

வனத்தை ஆக்கிரமிக்கும் பார்த்தீனிய செடிகள் – வனவிலங்குகளை காக்க கோரிக்கை!

ஈரானில் கொடூரமாக கொல்லப்பட்ட மாணவி – இளைஞர்கள் போராட்டத்தின் அடையாளம்!

வெனிசுலா அதிபர் நான் தான் -அதிகார துஷ்பிரயோகம் அதிரடியில் டிரம்ப்!

Load More

அண்மைச் செய்திகள்

பிரதமர் மோடியின் வருகை தமிழகத்தில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தும் – தமிழிசை சௌந்தரராஜன்

அரசியல் நன்றாக இருந்தால் தமிழர் பொங்கல்,அரசியல் நன்றாக இல்லை என்றால் திமுக பொங்கல்- அண்ணாமலை

போராட்டத்தில் ஈடுபட்டு வரும் பகுதி நேர ஆசிரியர் தற்கொலை முயற்சி!

12 நாட்களில் பத்தரை லட்சம் பக்தர்கள் சபரிமலையில் சாமி தரிசனம்!

மழையால் நெற்பயிர்கள் சாய்ந்து சேதம் – விவசாயிகள் கவலை!

சென்னை தாம்பரம் அருகே தனியார் கல்லூரியில் நடைபெற்ற பொங்கல் விழா – மாணவ, மாணவிகள் பொங்கல் வைத்து வழிபாடு

சட்டமன்ற தேர்தல் கூட்டணி குறித்து ஜனவரி மாதத்திற்குள் முடிவெடுக்கப்படும் – பிரேமலதா விஜயகாந்த்!

“பெண்ணை பொய் புகார் கூற வைத்து வழக்கு” – எஸ்.ஜி.சூர்யா குற்றச்சாட்டு

சாத்தான் வேதம் ஓதுகிறது.. – ராகுலுக்கு தமிழிசை கடும் கண்டனம்

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திருச்செந்தூர் முருகன் கோயிலில் குவியும் பக்தர்கள்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies