அடல் சேது பாலத்தில் ஆபத்தை உணராமல் அலட்சியம் செய்யும் பயணிகள்!
Jul 24, 2025, 07:58 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

அடல் சேது பாலத்தில் ஆபத்தை உணராமல் அலட்சியம் செய்யும் பயணிகள்!

Web Desk by Web Desk
Jan 28, 2024, 12:36 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

அடல் சேது பாலத்தில் வாகனங்களை ஓரமாக நிறுத்தி விட்டு புகைப்படம் எடுப்பதில் ஆர்வம் காட்டும் பயணிகள், ஆபத்தை உணராமல் அலட்சியம் செய்யும் வீடியோ வெளியாகி உள்ளது.

அடல் சேது பாலம் அல்லது மும்பை டிரான்ஸ் துறைமுக இணைப்புச் சாலை (MTHL) என அழைக்கப்படும் இந்த 21 கி.மீ நீளமுள்ள பாலத்தை கடந்த 12-ம் தேதி பிரதமர் நரேந்திர மோடி, மக்கள் பயன்பாட்டிற்காக திறந்து வைத்தார்.

மொத்தம் 6 வழிச்சாலையாக அமைந்துள்ள 21.8 கிலோமீட்டர் நீள பாலத்தின் மூலம் இரண்டு மணி நேரம் ஆக வேண்டிய பயணம் வெறும் 20 நிமிடமாக சுருங்கியுள்ளது. இது கடல் மீது சுமார் 16.5 கிமீ நீளமும், நிலத்தில் சுமார் 5.5 கிமீ நீளமும் கொண்டது.    இதற்காக 17,840 கோடி ரூபாய் செலவிடப்பட்டுள்ளது. இந்த பாலத்தின் மூலம் தெற்கு மும்பையின் வர்த்தகம் பெரிதும் வளர்ச்சி அடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில் அடல் சேது பாலம் கடலின் மீது அமைந்துள்ளதால் இதில் மேற்கொள்ளப்படும் பயணம் வாகன ஓட்டிகளிடம் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. இதனால் வாகனங்களை ஓரமாக நிறுத்தி விட்டு புகைப்படம் எடுப்பதில் ஆர்வம் காட்டி வருகின்றனர்.

இது குறித்து வெளியான வீடியோவில்,

புதிதாக கட்டப்பட்ட மும்பை டிரான்ஸ் ஹார்பர் இணைப்புப் பாலத்தின் ஓரத்தில் நீண்ட வரிசையில் வாகனங்கள் நிறுத்தப்பட்டு, பயணிகள் கார்களுக்கு வெளியே நின்று காற்றை ரசிக்கிறார்கள்.

இருப்பினும் மக்கள் வருகையை கட்டுப்படுத்த முடியவில்லை. பாதுகாப்பாக பயணம் மேற்கொள்ள வேண்டும் என்று அறிவுறுத்தினால் பாலத்தின் ஓரம் சென்று ஆபத்தான வகையில் எட்டி பார்ப்பது, புகைப்படம் எடுப்பது, செல்பி எடுப்பது, எக்குத்தப்பாக சுற்றி பார்ப்பது போன்ற செயல்களில் ஈடுபடுகின்றனர். இதென்ன பிக்னிக் ஸ்பாட்டா? என்று மும்பை போலீசார் கேள்வி எழுப்பி கடும் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

அடல் சேது பாலத்தில் வாகனங்களை நிறுத்தி விட்டு புகைப்படம் எடுக்கும் செயலில் ஈடுபட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது. இதனால் விபரீதங்கள் ஏதும் நிகழ்ந்துவிடக் கூடாது என மும்பை போலீசார் மிகவும் கவனத்துடன் செயல்பட்டு வருகின்றனர். அதுமட்டுமின்றி அடல் சேது பாலத்தில் குப்பைகளை அப்படியே தூக்கி வீசும் நிகழ்வுகளை பார்க்க முடிகிறது.

இதுதொடர்பான வீடியோக்கள், புகைப்படங்கள் கொண்டு மும்பை போலீசார் விசாரித்தும், இவ்வாறு செய்யக்கூடாது என்று எச்சரித்தும், விழிப்புணர்வு ஏற்படுத்தியும் வருகின்றனர்.

அடல் சேது கடல்வழி பாலம் பார்ப்பதற்கு ரம்மியான பாலம் தான். அதற்காக முறைகேடான வகையில் வாகனங்களை நிறுத்தக் கூடாது. புகைப்படங்கள் எடுக்கக் கூடாது. குப்பைகள் போடக் கூடாது. மீறினால் வழக்குகள் பாயும் என்று எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.

இந்த பாலத்தில் நிர்ணயிக்கப்பட்ட வேகம் 100 kmph ஆகும், இங்கு வாகனங்கள் திடீரென நிறுத்தப்படும்போது விபத்தை உருவாக்குகிறது. இது மோசமானது மற்றும் ஆபத்தானது. இதுபோன்ற அதிவேக மேம்பாலங்களில் வாகனங்களை நிறுத்தாமல் செல்ல வேண்டும் என்று மும்பை போலீசார் தெரிவித்துள்ளனர்.

Tags: Adal Bihari Vajpayee
ShareTweetSendShare
Previous Post

இந்தியா – இங்கிலாந்து டெஸ்ட் : இந்தியாவுக்கு 231 ரன்கள் இலக்கு!

Next Post

கூட்டணி முறிந்தது ஏன்? பதவி விலகிய நிதிஷ் குமார் விளக்கம்!

Related News

பட்டீஸ்வரர் கோயிலில் நடை அடைக்கப்பட்ட பின் சாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட்ட விவகாரம் – பணியாளர்கள் இருவர் பணியிடை நீக்கம்!

பிரதமர் வருகையை முன்னிட்டு கங்கை கொண்ட சோழபுரத்தில் ஹெலிபேட் தயார் செய்யும் பணி தீவிரம்!

திமுக அமைச்சர்கள், எம்எல்ஏக்களை விரட்டி அடிக்கும் பொதுமக்கள் – ஹெச்.ராஜா

கோயில் சொத்துக்களை மீட்க வேண்டும் என்பதே பாஜகவின் முதன்மை நோக்கம் – அண்ணாமலை

கிட்னி திருட்டில் தொடர்புடைய தனியார் மருத்துவமனை திமுக எம்.எல்.ஏவுக்கு சொந்தமானது – இபிஎஸ் குற்றச்சாட்டு!

சிறுநீரக அறுவை சிகிச்சை செய்ய இரு மருத்துவமனைகளுக்கு இடைக்கால தடை!

Load More

அண்மைச் செய்திகள்

திருவள்ளூர் சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கு – ஏஐ தொழில்நுட்பத்தை பயன்படுத்தும் காவல்துறை!

அஜித்குமார் கொலை வழக்கு – சிசிடிவி காட்சி தரவுகள் சேகரிப்பு!

இங்கிலாந்தில் பிரதமர் மோடி – உற்சாக வரவேற்பு அளித்த இந்திய வம்சாவளியினர்!

எதிர்கால போர் AI போர் : வெற்றிக்கு அடித்தளம் அமைக்கும் இந்தியா!

ஐ.நா. அவையில் சீண்டிய பாகிஸ்தான் – மூக்கை உடைத்த இந்தியா!

உடல் எடையை குறைக்கும் மருந்து : அதிகரிக்கும் டிமாண்ட் உற்பத்தி தளமாகும் இந்தியா!

ஏவுகணைத் திட்டம் டமால் : மீண்டும் மண்ணை கவ்விய பாகிஸ்தானின் ஷாஹீன்-3!

வலிமையான பாஸ்போர்ட் பட்டியல் : உலகளவில் 77வது இடத்திற்கு இந்தியா முன்னேற்றம்!

இந்திய ராணுவத்திற்கு புது வரவு : அடித்து நொறுக்கும் அப்பாச்சி ஹெலிகாப்டர்!

கொரோனா பணியில் உயிரிழப்பு : மருத்துவர் குடும்பத்தை கைவிட்ட தமிழக அரசு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies