அடல் சேது பாலத்தில் ஆபத்தை உணராமல் அலட்சியம் செய்யும் பயணிகள்!
Jan 14, 2026, 11:00 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

அடல் சேது பாலத்தில் ஆபத்தை உணராமல் அலட்சியம் செய்யும் பயணிகள்!

Murugesan M by Murugesan M
Jan 28, 2024, 12:36 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

அடல் சேது பாலத்தில் வாகனங்களை ஓரமாக நிறுத்தி விட்டு புகைப்படம் எடுப்பதில் ஆர்வம் காட்டும் பயணிகள், ஆபத்தை உணராமல் அலட்சியம் செய்யும் வீடியோ வெளியாகி உள்ளது.

அடல் சேது பாலம் அல்லது மும்பை டிரான்ஸ் துறைமுக இணைப்புச் சாலை (MTHL) என அழைக்கப்படும் இந்த 21 கி.மீ நீளமுள்ள பாலத்தை கடந்த 12-ம் தேதி பிரதமர் நரேந்திர மோடி, மக்கள் பயன்பாட்டிற்காக திறந்து வைத்தார்.

மொத்தம் 6 வழிச்சாலையாக அமைந்துள்ள 21.8 கிலோமீட்டர் நீள பாலத்தின் மூலம் இரண்டு மணி நேரம் ஆக வேண்டிய பயணம் வெறும் 20 நிமிடமாக சுருங்கியுள்ளது. இது கடல் மீது சுமார் 16.5 கிமீ நீளமும், நிலத்தில் சுமார் 5.5 கிமீ நீளமும் கொண்டது.    இதற்காக 17,840 கோடி ரூபாய் செலவிடப்பட்டுள்ளது. இந்த பாலத்தின் மூலம் தெற்கு மும்பையின் வர்த்தகம் பெரிதும் வளர்ச்சி அடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில் அடல் சேது பாலம் கடலின் மீது அமைந்துள்ளதால் இதில் மேற்கொள்ளப்படும் பயணம் வாகன ஓட்டிகளிடம் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. இதனால் வாகனங்களை ஓரமாக நிறுத்தி விட்டு புகைப்படம் எடுப்பதில் ஆர்வம் காட்டி வருகின்றனர்.

இது குறித்து வெளியான வீடியோவில்,

புதிதாக கட்டப்பட்ட மும்பை டிரான்ஸ் ஹார்பர் இணைப்புப் பாலத்தின் ஓரத்தில் நீண்ட வரிசையில் வாகனங்கள் நிறுத்தப்பட்டு, பயணிகள் கார்களுக்கு வெளியே நின்று காற்றை ரசிக்கிறார்கள்.

இருப்பினும் மக்கள் வருகையை கட்டுப்படுத்த முடியவில்லை. பாதுகாப்பாக பயணம் மேற்கொள்ள வேண்டும் என்று அறிவுறுத்தினால் பாலத்தின் ஓரம் சென்று ஆபத்தான வகையில் எட்டி பார்ப்பது, புகைப்படம் எடுப்பது, செல்பி எடுப்பது, எக்குத்தப்பாக சுற்றி பார்ப்பது போன்ற செயல்களில் ஈடுபடுகின்றனர். இதென்ன பிக்னிக் ஸ்பாட்டா? என்று மும்பை போலீசார் கேள்வி எழுப்பி கடும் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

அடல் சேது பாலத்தில் வாகனங்களை நிறுத்தி விட்டு புகைப்படம் எடுக்கும் செயலில் ஈடுபட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது. இதனால் விபரீதங்கள் ஏதும் நிகழ்ந்துவிடக் கூடாது என மும்பை போலீசார் மிகவும் கவனத்துடன் செயல்பட்டு வருகின்றனர். அதுமட்டுமின்றி அடல் சேது பாலத்தில் குப்பைகளை அப்படியே தூக்கி வீசும் நிகழ்வுகளை பார்க்க முடிகிறது.

இதுதொடர்பான வீடியோக்கள், புகைப்படங்கள் கொண்டு மும்பை போலீசார் விசாரித்தும், இவ்வாறு செய்யக்கூடாது என்று எச்சரித்தும், விழிப்புணர்வு ஏற்படுத்தியும் வருகின்றனர்.

அடல் சேது கடல்வழி பாலம் பார்ப்பதற்கு ரம்மியான பாலம் தான். அதற்காக முறைகேடான வகையில் வாகனங்களை நிறுத்தக் கூடாது. புகைப்படங்கள் எடுக்கக் கூடாது. குப்பைகள் போடக் கூடாது. மீறினால் வழக்குகள் பாயும் என்று எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.

இந்த பாலத்தில் நிர்ணயிக்கப்பட்ட வேகம் 100 kmph ஆகும், இங்கு வாகனங்கள் திடீரென நிறுத்தப்படும்போது விபத்தை உருவாக்குகிறது. இது மோசமானது மற்றும் ஆபத்தானது. இதுபோன்ற அதிவேக மேம்பாலங்களில் வாகனங்களை நிறுத்தாமல் செல்ல வேண்டும் என்று மும்பை போலீசார் தெரிவித்துள்ளனர்.

Tags: Adal Bihari Vajpayee
ShareTweetSendShare
Previous Post

இந்தியா – இங்கிலாந்து டெஸ்ட் : இந்தியாவுக்கு 231 ரன்கள் இலக்கு!

Next Post

கூட்டணி முறிந்தது ஏன்? பதவி விலகிய நிதிஷ் குமார் விளக்கம்!

Related News

தங்கம் விலை புதிய உச்சம்: சவரனுக்கு ரூ.880 உயர்வு

500 சதவீதி வரிவிதிப்பு அச்சம் – பின்னலாடை துறைக்கு சலுகை வழங்க கோரிக்கை!

முக்கிய சக்தியாக உருவெடுக்கும் ஜமாத்-இ-இஸ்லாமி – வங்கதேசத்தில் ஆட்சியை பிடிக்கத் துடிக்கும் இஸ்லாமிய குழுக்கள்

ஸ்டார்லிங் சேவையை துண்டித்த அதிநவீன ஜாமிங் தொழில்நுட்பம் – எலான் மஸ்கை அலறவிட்ட ஈரான் சீனா, ரஷ்யா உதவியதா?

வனத்தை ஆக்கிரமிக்கும் பார்த்தீனிய செடிகள் – வனவிலங்குகளை காக்க கோரிக்கை!

ஈரானில் கொடூரமாக கொல்லப்பட்ட மாணவி – இளைஞர்கள் போராட்டத்தின் அடையாளம்!

Load More

அண்மைச் செய்திகள்

வெனிசுலா அதிபர் நான் தான் -அதிகார துஷ்பிரயோகம் அதிரடியில் டிரம்ப்!

பிரதமர் மோடியின் வருகை தமிழகத்தில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தும் – தமிழிசை சௌந்தரராஜன்

அரசியல் நன்றாக இருந்தால் தமிழர் பொங்கல்,அரசியல் நன்றாக இல்லை என்றால் திமுக பொங்கல்- அண்ணாமலை

போராட்டத்தில் ஈடுபட்டு வரும் பகுதி நேர ஆசிரியர் தற்கொலை முயற்சி!

12 நாட்களில் பத்தரை லட்சம் பக்தர்கள் சபரிமலையில் சாமி தரிசனம்!

மழையால் நெற்பயிர்கள் சாய்ந்து சேதம் – விவசாயிகள் கவலை!

சென்னை தாம்பரம் அருகே தனியார் கல்லூரியில் நடைபெற்ற பொங்கல் விழா – மாணவ, மாணவிகள் பொங்கல் வைத்து வழிபாடு

சட்டமன்ற தேர்தல் கூட்டணி குறித்து ஜனவரி மாதத்திற்குள் முடிவெடுக்கப்படும் – பிரேமலதா விஜயகாந்த்!

“பெண்ணை பொய் புகார் கூற வைத்து வழக்கு” – எஸ்.ஜி.சூர்யா குற்றச்சாட்டு

சாத்தான் வேதம் ஓதுகிறது.. – ராகுலுக்கு தமிழிசை கடும் கண்டனம்

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies