அடல் சேது பாலத்தில் ஆபத்தை உணராமல் அலட்சியம் செய்யும் பயணிகள்!
Sep 12, 2026, 10:49 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

அடல் சேது பாலத்தில் ஆபத்தை உணராமல் அலட்சியம் செய்யும் பயணிகள்!

Murugesan M by Murugesan M
Jan 28, 2024, 12:36 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

அடல் சேது பாலத்தில் வாகனங்களை ஓரமாக நிறுத்தி விட்டு புகைப்படம் எடுப்பதில் ஆர்வம் காட்டும் பயணிகள், ஆபத்தை உணராமல் அலட்சியம் செய்யும் வீடியோ வெளியாகி உள்ளது.

அடல் சேது பாலம் அல்லது மும்பை டிரான்ஸ் துறைமுக இணைப்புச் சாலை (MTHL) என அழைக்கப்படும் இந்த 21 கி.மீ நீளமுள்ள பாலத்தை கடந்த 12-ம் தேதி பிரதமர் நரேந்திர மோடி, மக்கள் பயன்பாட்டிற்காக திறந்து வைத்தார்.

மொத்தம் 6 வழிச்சாலையாக அமைந்துள்ள 21.8 கிலோமீட்டர் நீள பாலத்தின் மூலம் இரண்டு மணி நேரம் ஆக வேண்டிய பயணம் வெறும் 20 நிமிடமாக சுருங்கியுள்ளது. இது கடல் மீது சுமார் 16.5 கிமீ நீளமும், நிலத்தில் சுமார் 5.5 கிமீ நீளமும் கொண்டது.    இதற்காக 17,840 கோடி ரூபாய் செலவிடப்பட்டுள்ளது. இந்த பாலத்தின் மூலம் தெற்கு மும்பையின் வர்த்தகம் பெரிதும் வளர்ச்சி அடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில் அடல் சேது பாலம் கடலின் மீது அமைந்துள்ளதால் இதில் மேற்கொள்ளப்படும் பயணம் வாகன ஓட்டிகளிடம் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. இதனால் வாகனங்களை ஓரமாக நிறுத்தி விட்டு புகைப்படம் எடுப்பதில் ஆர்வம் காட்டி வருகின்றனர்.

இது குறித்து வெளியான வீடியோவில்,

புதிதாக கட்டப்பட்ட மும்பை டிரான்ஸ் ஹார்பர் இணைப்புப் பாலத்தின் ஓரத்தில் நீண்ட வரிசையில் வாகனங்கள் நிறுத்தப்பட்டு, பயணிகள் கார்களுக்கு வெளியே நின்று காற்றை ரசிக்கிறார்கள்.

இருப்பினும் மக்கள் வருகையை கட்டுப்படுத்த முடியவில்லை. பாதுகாப்பாக பயணம் மேற்கொள்ள வேண்டும் என்று அறிவுறுத்தினால் பாலத்தின் ஓரம் சென்று ஆபத்தான வகையில் எட்டி பார்ப்பது, புகைப்படம் எடுப்பது, செல்பி எடுப்பது, எக்குத்தப்பாக சுற்றி பார்ப்பது போன்ற செயல்களில் ஈடுபடுகின்றனர். இதென்ன பிக்னிக் ஸ்பாட்டா? என்று மும்பை போலீசார் கேள்வி எழுப்பி கடும் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

அடல் சேது பாலத்தில் வாகனங்களை நிறுத்தி விட்டு புகைப்படம் எடுக்கும் செயலில் ஈடுபட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது. இதனால் விபரீதங்கள் ஏதும் நிகழ்ந்துவிடக் கூடாது என மும்பை போலீசார் மிகவும் கவனத்துடன் செயல்பட்டு வருகின்றனர். அதுமட்டுமின்றி அடல் சேது பாலத்தில் குப்பைகளை அப்படியே தூக்கி வீசும் நிகழ்வுகளை பார்க்க முடிகிறது.

இதுதொடர்பான வீடியோக்கள், புகைப்படங்கள் கொண்டு மும்பை போலீசார் விசாரித்தும், இவ்வாறு செய்யக்கூடாது என்று எச்சரித்தும், விழிப்புணர்வு ஏற்படுத்தியும் வருகின்றனர்.

அடல் சேது கடல்வழி பாலம் பார்ப்பதற்கு ரம்மியான பாலம் தான். அதற்காக முறைகேடான வகையில் வாகனங்களை நிறுத்தக் கூடாது. புகைப்படங்கள் எடுக்கக் கூடாது. குப்பைகள் போடக் கூடாது. மீறினால் வழக்குகள் பாயும் என்று எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.

இந்த பாலத்தில் நிர்ணயிக்கப்பட்ட வேகம் 100 kmph ஆகும், இங்கு வாகனங்கள் திடீரென நிறுத்தப்படும்போது விபத்தை உருவாக்குகிறது. இது மோசமானது மற்றும் ஆபத்தானது. இதுபோன்ற அதிவேக மேம்பாலங்களில் வாகனங்களை நிறுத்தாமல் செல்ல வேண்டும் என்று மும்பை போலீசார் தெரிவித்துள்ளனர்.

Tags: Adal Bihari Vajpayee
Share
Tweet
SendShare
Previous Post

இந்தியா – இங்கிலாந்து டெஸ்ட் : இந்தியாவுக்கு 231 ரன்கள் இலக்கு!

Next Post

கூட்டணி முறிந்தது ஏன்? பதவி விலகிய நிதிஷ் குமார் விளக்கம்!

Related News

பயங்கரவாதம், மேற்காசிய போருக்கு எதிராக பிரதமர் நரேந்திர மோடி முன்மொழிந்த பிரகடனம்; ஒருமனதாக ஏற்பு

பிரிக்ஸ் அமைப்பை மேலும் வலுப்படுத்த வேண்டும்; பிரதமர் நரேந்திர மோடி

பெரிம் தீவை கைப்பற்ற முயலும் ஹெளதி தீவிரவாதிகள் : அச்சத்தில் உலக நாடுகள் : பின்னணி என்ன? – சிறப்பு தொகுப்பு!

அனைவருடனும் நட்பு, யாருடனும் கூட்டணி இல்லை : பிரிக்ஸ் மூலம் இந்தியா சொல்லும் செய்தி – சிறப்பு தொகுப்பு!

நாடு முழுவதும் 80 லட்சம் சிறுமியருக்கு கர்ப்பப்பை வாய் புற்றுநோய் தடுப்பூசி!

ராஜதந்திரத்தின் உச்சக்கட்டம் மோடியுடன் ஜி ஜின்பிங் சந்திப்பு : உலக நாடுகள் உன்னிப்பாக கவனிப்பது ஏன்? – சிறப்பு கட்டுரை!

Load More

அண்மைச் செய்திகள்

திருச்சியில் மண்டல அளவிலான டென்னிஸ் போட்டி – தமிழ் ஜனம் தொலைக்காட்சி நிர்வாக இயக்குநர் மது தொடங்கி வைத்தார்!

அமெரிக்காவில் விரைவில் UPI சேவை தொடக்கம்!

திருப்பரங்குன்றம் மலையை அளவீடு செய்யும் விவகாரத்தில் அறநிலையத்துறைக்கு என்ன வேலை? – உயர் நீதிமன்றம் கேள்வி!

ரஷ்ய அதிபருடன் ஒரே காரில் பயணம் செய்த பிரதமர் மோடி : புதினின் ‘ஆரஸ் செனாட்’ கார் : வியக்க வைக்கும் பாதுகாப்பு ரகசியங்கள் – சிறப்பு தொகுப்பு!

உலக மக்களுக்கு புதிய வாய்ப்புகளை உருவாக்கும் பிரிக்ஸ் – பிரதமர் மோடி

ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத் பிறந்த நாள் – அமித் ஷா வாழ்த்து!

ஏ.ஐ. தொழில்நுட்பம் இருமுனை வாள் போன்றது – நிர்மலா சீதாராமன்

ஓட்டுநர் உரிமம் மற்றும் ஆர்சி சான்றிதழ்களை பதிவிறக்கம் செய்யும் வசதி – 15ஆம் தேதி முதல் அமல்!

விநாயகர் சதுர்த்தி விடுமுறை – அரியலூர், பெரம்பலூரில் போதிய பேருந்துகள் இயக்கப்படாததால் பயணிகள் அவதி!

தாம்பரம் GST சாலையில் அணிவகுத்த வாகனங்கள் – 500க்கு மேற்பட்ட போலீசார் குவிப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies