குடும்பம், சொத்துக்களை பாதுகாக்கவே "இண்டி" கூட்டணி: ஜெ.பி.நட்டா!
Aug 21, 2025, 09:21 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

குடும்பம், சொத்துக்களை பாதுகாக்கவே “இண்டி” கூட்டணி: ஜெ.பி.நட்டா!

Web Desk by Web Desk
Jan 29, 2024, 01:38 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

குடும்பம் மற்றும் சொத்துக்களைப் பாதுகாக்க உருவாக்கப்பட்டதுதான் “இண்டி” கூட்டணி. அக்கூட்டணியின் எண்ணம் பலிக்காது என்று பா.ஜ.க. தேசியத் தலைவர் ஜெ.பி.நட்டா கூறியிருக்கிறார்.

பீகாரில் 2020-ம் ஆண்டு நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தலில் பா.ஜ.க. தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் ஐக்கிய ஜனதா தளம் கட்சியின் தலைவர் நிதீஷ்குமார் அங்கம் வகித்தார். இத்தேர்தலில் பா.ஜ.க. அதிக இடங்களில் வெற்றிபெற்ற போதிலும், நிதீஷ்குமாரையே முதல்வராக்கியது.

ஆனால், 2022-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் நிதீஷ்குமார் திடீரென கூட்டணியை முறித்துக் கொண்டார். பின்னர், காங்கிரஸ், லாலு பிரசாத் யாதவின் ராஷ்ட்ரீய ஜனதா தளம் ஆகிய கட்சிகளுடன் கூட்டணி அமைத்து ஆட்சியைத் தக்க வைத்துக் கொண்டதோடு, முதல்வராகவும் தொடர்ந்து வந்தார்.

மேலும், பா.ஜ.க.வுக்கு எதிராக அனைத்து மாநிலங்களிலும் உள்ள முக்கியக் கட்சிகளை திரட்டி “இண்டி” என்கிற பெயரில் மெகா கூட்டணியையும் அமைத்தார். எனினும், இக்கூட்டணிக்குள் ஒற்றுமை இல்லாமல் ஆரம்பம் முதலே குழப்பம் நிலவி வந்தது.

இந்த சூழலில், மீண்டும் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் அங்கம் வகிக்க கடந்த சில தினங்களாகவே பா.ஜ.க.வுடன் பேச்சுவார்த்தை நடத்தி வந்தார். இப்பேச்சுவார்த்தையில் சுமுகத் தீர்வு காணப்படவே, கூட்டணியை முறித்துக் கொண்ட நிதீஷ்குமார், முதல்வர் பதவியை ராஜினாமா செய்தார். பின்னர், அன்று மாலையே பா.ஜ.க. ஆதரவுடன் முதல்வராகப் பதவியேற்றார்.

இந்த நிலையில், இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய பா.ஜ.க. தேசியத் தலைவர் ஜெ.பி.நட்டா, “நிதீஷ்குமார் தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு திரும்பியது பா.ஜ.க.வுக்கு மகிழ்ச்சியான விஷயம். பீகார் மக்கள் தேசிய ஜனநாயக கூட்டணிக்கு அங்கீகாரம் வழங்கியுள்ளனர். ஐக்கிய ஜனதா தளம் மற்றும் நிதீஷ்குமாரின் உண்மையான கூட்டணி என்.டி.ஏ. மட்டுமே.

“இண்டி” கூட்டணி புனிதமற்ற, அறிவியலற்ற கூட்டணி. அவர்களின் எண்ணம் பலிக்காது. குடும்பம் மற்றும் சொத்துக்களைப் பாதுகாப்பதற்காக உருவாக்கப்பட்டதுதான் “இண்டி” கூட்டணி. பீகாரில் என்.டி.ஏ. ஆட்சி அமைக்கும் போதெல்லாம் மாநிலத்தின் வளர்ச்சி சாதனை படைக்கும்.

நாடாளுமன்றத் தேர்தலில் பிரதமர் மோடி தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி மீண்டும் வெற்றிபெற்று ஆட்சியைக் கைப்பற்றும். அதேபோல, 2025 பீகார் சட்டப்பேரவைத் தேர்தலிலும் தேசிய ஜனநாயகக் கூட்டணி மீண்டும் ஆட்சி அமைக்கும்” என்றார்.

Tags: J.P.NaddaBiharbjp presidentNitis Kumar
ShareTweetSendShare
Previous Post

வடகொரியா மீண்டும் ஏவுகணை சோதனை: அதிகரிக்கும் போர் பதற்றம்!

Next Post

சூரிய நமஸ்காரம் மூலம் உலக சாதனை படைக்கப்போகும் ராஜஸ்தான்!

Related News

சீனாவுக்கு ஒரு நியாயம், இந்தியாவுக்கு ஒரு நியாயம் : அமெரிக்காவின் இரட்டை நிலைப்பாடு!

விரைவில் குறைந்த எடை கொண்ட உதகை மலை ரயில் – அதிகாரிகள் தகவல்!

தர்மஸ்தலா வழக்கில் புதிய திருப்பம் : சதித்திட்டம் தீட்டிய தமிழக காங்கிரஸ் எம்.பி?

உள்நாட்டு விமானப் போக்குவரத்து இலவசம் – சுற்றுலா பயணிகளை ஈர்க்க தாய்லாந்து நடவடிக்கை!

நாடாளுமன்றத்தில் தொடர் அமளியில் ஈடுபட்ட எதிர்க்கட்சியினர் – அமைச்சர் கிரண் ரிஜிஜு

களியக்காவிளை புதிய பேருந்து நிலைய பணிகளை விரைவுப்படுத்த வேண்டும் – பொதுமக்கள் வலியுறுத்தல்!

Load More

அண்மைச் செய்திகள்

இந்திய பொருட்களை வாங்க தயார் : நேசக்கரம் நீட்டிய ரஷ்யா – சிறப்பு கட்டுரை!

கச்சா எண்ணெய் இறக்குமதி தொடர்பான அமெரிக்காவின் குற்றச்சாட்டு – வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் மறுப்பு!

உள்துறை அமைச்சர் அமித் ஷாவின் வருகை தமிழகத்தில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் – தமிழிசை சௌந்தரராஜன்

விழுப்புரம் அருகே நீட் தேர்வில் வென்று மருத்துவ கனவை நனவாக்கிய மாணவி!

தமிழகம் பயங்கரவாதிகளின் புகலிடமாக மாறுவதைத் தடுக்க தொடர் நடவடிக்கை எடுக்க வேண்டும் – இந்து முன்னணி வலியுறுத்தல்!

ஆன்லைன் சூதாட்ட தடை சட்ட மசோதா மாநிலங்களவையில் நிறைவேற்றம்!

திருநெல்வேலியில் திரளும் தாமரைச் சொந்தங்களை சந்திக்க பேராவல் கொண்டுள்ளேன் – நயினார் நாகேந்திரன் அழைப்பு!

மணல் கடத்தலை தடுத்த பெண் விஏஓ மீது வீடு புகுந்து தாக்குதல் – நயினார் நாகேந்திரன் கண்டனம்!

தமிழ் ஜனம் செய்தி எதிரொலி – வெளிமாநில தமிழ் பள்ளிகளுக்கு மீண்டும் பாட நூல்களை வழங்க நடவடிக்கை!

அம்பலமான ராகுலின் போலி முகம் : சொல்வதெல்லாம் பொய் தொட்டதெல்லாம் தோல்வி!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies