குடும்பம், சொத்துக்களை பாதுகாக்கவே "இண்டி" கூட்டணி: ஜெ.பி.நட்டா!
Oct 7, 2025, 01:16 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

குடும்பம், சொத்துக்களை பாதுகாக்கவே “இண்டி” கூட்டணி: ஜெ.பி.நட்டா!

Web Desk by Web Desk
Jan 29, 2024, 01:38 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

குடும்பம் மற்றும் சொத்துக்களைப் பாதுகாக்க உருவாக்கப்பட்டதுதான் “இண்டி” கூட்டணி. அக்கூட்டணியின் எண்ணம் பலிக்காது என்று பா.ஜ.க. தேசியத் தலைவர் ஜெ.பி.நட்டா கூறியிருக்கிறார்.

பீகாரில் 2020-ம் ஆண்டு நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தலில் பா.ஜ.க. தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் ஐக்கிய ஜனதா தளம் கட்சியின் தலைவர் நிதீஷ்குமார் அங்கம் வகித்தார். இத்தேர்தலில் பா.ஜ.க. அதிக இடங்களில் வெற்றிபெற்ற போதிலும், நிதீஷ்குமாரையே முதல்வராக்கியது.

ஆனால், 2022-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் நிதீஷ்குமார் திடீரென கூட்டணியை முறித்துக் கொண்டார். பின்னர், காங்கிரஸ், லாலு பிரசாத் யாதவின் ராஷ்ட்ரீய ஜனதா தளம் ஆகிய கட்சிகளுடன் கூட்டணி அமைத்து ஆட்சியைத் தக்க வைத்துக் கொண்டதோடு, முதல்வராகவும் தொடர்ந்து வந்தார்.

மேலும், பா.ஜ.க.வுக்கு எதிராக அனைத்து மாநிலங்களிலும் உள்ள முக்கியக் கட்சிகளை திரட்டி “இண்டி” என்கிற பெயரில் மெகா கூட்டணியையும் அமைத்தார். எனினும், இக்கூட்டணிக்குள் ஒற்றுமை இல்லாமல் ஆரம்பம் முதலே குழப்பம் நிலவி வந்தது.

இந்த சூழலில், மீண்டும் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் அங்கம் வகிக்க கடந்த சில தினங்களாகவே பா.ஜ.க.வுடன் பேச்சுவார்த்தை நடத்தி வந்தார். இப்பேச்சுவார்த்தையில் சுமுகத் தீர்வு காணப்படவே, கூட்டணியை முறித்துக் கொண்ட நிதீஷ்குமார், முதல்வர் பதவியை ராஜினாமா செய்தார். பின்னர், அன்று மாலையே பா.ஜ.க. ஆதரவுடன் முதல்வராகப் பதவியேற்றார்.

இந்த நிலையில், இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய பா.ஜ.க. தேசியத் தலைவர் ஜெ.பி.நட்டா, “நிதீஷ்குமார் தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு திரும்பியது பா.ஜ.க.வுக்கு மகிழ்ச்சியான விஷயம். பீகார் மக்கள் தேசிய ஜனநாயக கூட்டணிக்கு அங்கீகாரம் வழங்கியுள்ளனர். ஐக்கிய ஜனதா தளம் மற்றும் நிதீஷ்குமாரின் உண்மையான கூட்டணி என்.டி.ஏ. மட்டுமே.

“இண்டி” கூட்டணி புனிதமற்ற, அறிவியலற்ற கூட்டணி. அவர்களின் எண்ணம் பலிக்காது. குடும்பம் மற்றும் சொத்துக்களைப் பாதுகாப்பதற்காக உருவாக்கப்பட்டதுதான் “இண்டி” கூட்டணி. பீகாரில் என்.டி.ஏ. ஆட்சி அமைக்கும் போதெல்லாம் மாநிலத்தின் வளர்ச்சி சாதனை படைக்கும்.

நாடாளுமன்றத் தேர்தலில் பிரதமர் மோடி தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி மீண்டும் வெற்றிபெற்று ஆட்சியைக் கைப்பற்றும். அதேபோல, 2025 பீகார் சட்டப்பேரவைத் தேர்தலிலும் தேசிய ஜனநாயகக் கூட்டணி மீண்டும் ஆட்சி அமைக்கும்” என்றார்.

Tags: J.P.NaddaBiharbjp presidentNitis Kumar
ShareTweetSendShare
Previous Post

வடகொரியா மீண்டும் ஏவுகணை சோதனை: அதிகரிக்கும் போர் பதற்றம்!

Next Post

சூரிய நமஸ்காரம் மூலம் உலக சாதனை படைக்கப்போகும் ராஜஸ்தான்!

Related News

பாகிஸ்தானுக்கு BYE : வெளியேறும் பன்னாட்டு நிறுவனங்கள் – அமெரிக்காவிடம் அடகு போகும் பாகிஸ்தான்!

பயங்கரவாதத்திற்கு கனடாவில் இருந்து நிதியுதவி – பின்னணியில் பாக். உளவு அமைப்பு!

உப்பு ஏரியை உரிமம் கொண்டாடும் இந்தியா – பாகிஸ்தான் : மீண்டும் பூதாகரமாக உருவெடுத்த சர் கிரீக் பிரச்னை!

அமெரிக்க அரசு முடக்கம் : இழுத்து மூடப்பட்ட NASA – நாசாவிலும் ஆட்குறைப்பு நடவடிக்கைகள்!

நஞ்சாக மாறிய இருமல் சிரப் : குழந்தைகள் பலி – விதிகளை கடுமையாக்க மத்திய அரசு உத்தரவு!

காசாவில் போர் நிறுத்தம் : வெற்றி பெற்ற ட்ரம்ப் அமைதி திட்டம் – பிரதமர் மோடி பாராட்டு!

Load More

அண்மைச் செய்திகள்

பாரா ஒலிம்பிக் “ஹீரோ” ஹெயின்ரிச் பாபோவ் – இரும்புமனிதன் தங்கமகனாக மாறிய கதை!

பிஞ்சு குழந்தைகளின் உயிரை குடித்த “கோல்ட்ரிப்” – தரமற்ற மருந்துக்கு தடை விதித்த தமிழகம், கேரளா!

அவமதிப்பா? நாடகமா? : குகேஷின் “கிங்”ஐ தூக்கி வீசிய அமெரிக்க வீரர்!

எவரெஸ்ட்டில் கடும் பனிப்புயல் : 1000 பேரின் கதி என்ன? – சவாலானது மீட்புப் பணி!

கேன்சர் அறிகுறிகளை முன்பே கண்டறியலாம் : அறிமுகமாகும் புதிய ரத்த பரிசோதனை!

கரூர் துயர சம்பவத்திற்கு நிர்வாகத் தோல்வி, தவறான மேலாண்மையே காரணம் – பாஜக எம்பிக்கள் குழு!

2 கட்டங்களாக நடைபெறும் பீகார் சட்டமன்றத் தேர்தல் : நவ.6, 11-ல் வாக்குப் பதிவு – நவ.14-ல் வாக்கு எண்ணிக்கை!

பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்தாதற்கு கண்டனம் : கருப்பு பேட்ஜ் அணிந்து பணிக்கு சென்ற தலைமைச் செயலக ஊழியர்கள்!

21 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தொடக்க கூட்டுறவு பணியாளர் சங்கம் போராட்டம்!

நேபாளத்தில் நிலச்சரிவு – உயிரிழந்தோர் எண்ணிக்கை 52-ஆக உயர்வு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies