குடும்பம், சொத்துக்களை பாதுகாக்கவே "இண்டி" கூட்டணி: ஜெ.பி.நட்டா!
Mar 15, 2026, 03:32 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

குடும்பம், சொத்துக்களை பாதுகாக்கவே “இண்டி” கூட்டணி: ஜெ.பி.நட்டா!

Abinaya Ganesan by Abinaya Ganesan
Jan 29, 2024, 01:38 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

குடும்பம் மற்றும் சொத்துக்களைப் பாதுகாக்க உருவாக்கப்பட்டதுதான் “இண்டி” கூட்டணி. அக்கூட்டணியின் எண்ணம் பலிக்காது என்று பா.ஜ.க. தேசியத் தலைவர் ஜெ.பி.நட்டா கூறியிருக்கிறார்.

பீகாரில் 2020-ம் ஆண்டு நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தலில் பா.ஜ.க. தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் ஐக்கிய ஜனதா தளம் கட்சியின் தலைவர் நிதீஷ்குமார் அங்கம் வகித்தார். இத்தேர்தலில் பா.ஜ.க. அதிக இடங்களில் வெற்றிபெற்ற போதிலும், நிதீஷ்குமாரையே முதல்வராக்கியது.

ஆனால், 2022-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் நிதீஷ்குமார் திடீரென கூட்டணியை முறித்துக் கொண்டார். பின்னர், காங்கிரஸ், லாலு பிரசாத் யாதவின் ராஷ்ட்ரீய ஜனதா தளம் ஆகிய கட்சிகளுடன் கூட்டணி அமைத்து ஆட்சியைத் தக்க வைத்துக் கொண்டதோடு, முதல்வராகவும் தொடர்ந்து வந்தார்.

மேலும், பா.ஜ.க.வுக்கு எதிராக அனைத்து மாநிலங்களிலும் உள்ள முக்கியக் கட்சிகளை திரட்டி “இண்டி” என்கிற பெயரில் மெகா கூட்டணியையும் அமைத்தார். எனினும், இக்கூட்டணிக்குள் ஒற்றுமை இல்லாமல் ஆரம்பம் முதலே குழப்பம் நிலவி வந்தது.

இந்த சூழலில், மீண்டும் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் அங்கம் வகிக்க கடந்த சில தினங்களாகவே பா.ஜ.க.வுடன் பேச்சுவார்த்தை நடத்தி வந்தார். இப்பேச்சுவார்த்தையில் சுமுகத் தீர்வு காணப்படவே, கூட்டணியை முறித்துக் கொண்ட நிதீஷ்குமார், முதல்வர் பதவியை ராஜினாமா செய்தார். பின்னர், அன்று மாலையே பா.ஜ.க. ஆதரவுடன் முதல்வராகப் பதவியேற்றார்.

இந்த நிலையில், இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய பா.ஜ.க. தேசியத் தலைவர் ஜெ.பி.நட்டா, “நிதீஷ்குமார் தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு திரும்பியது பா.ஜ.க.வுக்கு மகிழ்ச்சியான விஷயம். பீகார் மக்கள் தேசிய ஜனநாயக கூட்டணிக்கு அங்கீகாரம் வழங்கியுள்ளனர். ஐக்கிய ஜனதா தளம் மற்றும் நிதீஷ்குமாரின் உண்மையான கூட்டணி என்.டி.ஏ. மட்டுமே.

“இண்டி” கூட்டணி புனிதமற்ற, அறிவியலற்ற கூட்டணி. அவர்களின் எண்ணம் பலிக்காது. குடும்பம் மற்றும் சொத்துக்களைப் பாதுகாப்பதற்காக உருவாக்கப்பட்டதுதான் “இண்டி” கூட்டணி. பீகாரில் என்.டி.ஏ. ஆட்சி அமைக்கும் போதெல்லாம் மாநிலத்தின் வளர்ச்சி சாதனை படைக்கும்.

நாடாளுமன்றத் தேர்தலில் பிரதமர் மோடி தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி மீண்டும் வெற்றிபெற்று ஆட்சியைக் கைப்பற்றும். அதேபோல, 2025 பீகார் சட்டப்பேரவைத் தேர்தலிலும் தேசிய ஜனநாயகக் கூட்டணி மீண்டும் ஆட்சி அமைக்கும்” என்றார்.

Tags: J.P.NaddaBiharbjp presidentNitis Kumar
ShareTweetSendShare
Previous Post

வடகொரியா மீண்டும் ஏவுகணை சோதனை: அதிகரிக்கும் போர் பதற்றம்!

Next Post

சூரிய நமஸ்காரம் மூலம் உலக சாதனை படைக்கப்போகும் ராஜஸ்தான்!

Related News

அரசு மருத்துவமனையில் கஞ்சா போதையில் கொலை முயற்சி! – பொதுமக்கள் அச்சம்!

சென்னையிலிருந்து லடாக் செல்லும் கார் பயணத்தில் பெண் ஒருவர் தனியாக கார் ஓட்டி செல்வது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

மாமுல் கேட்டு மளிகை கடையை அடித்து நொறுக்கும் பிரபல ரவுடி – வெளியான பகீர் சிசிடிவி

மாலி நாட்டில் தென்காசியை சேர்ந்த நபரை கடத்திய தீவிரவாதிகள்..பல்வேறு முயற்சியால் மீட்ட மத்திய அரசு – நேரில் போய் சந்தித்த அதிமுக எம்.எல்.ஏ

திமுக ஆட்சியில், யாருக்குமே சட்டத்தின் மீது பயமில்லை – அண்ணாமலை குற்றச்சாட்டு!

புதுச்சேரியில் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தையில் காங்கிரஸ் கட்சியனரை 1 மணி நேரமாக காக்க வைத்த திமுகவினர்!

Load More

அண்மைச் செய்திகள்

பெண் காவலருக்கு பாலியல் தொல்லை – காவல் அதிகாரி கைது!

குளறுபடி காரணமாக ஒத்திவைக்கப்பட்ட குரூப் 2, 2ஏ தேர்வுகள் தமிழகம் முழுவதும் இன்று நடைபெற்று வருகிறது.

ரேபிஸ் நோயால் நாயை போன்றே குரைத்த சிறுவன் – காண்போரை கலங்கச் செய்த சம்பவம்!

மாணவி படுகொலை – நீதிகேட்டு இரவிலும் மக்கள் சாலை மறியல்!

ஆப்கானிஸ்தானில் வான்வழித் தாக்குதல் நடத்திய பாகிஸ்தான் – இந்தியா கடும் கண்டனம்!

தொகுதி மக்களுக்கு நேரில் சென்று நன்றி தெரிவித்த அதிமுக எம்.பி தம்பிதுரை!

தேர்தல் நெருங்கும் நேரத்தில் மாற்றுக் கட்சியில் இருந்து அதிமுக-வில் இணைந்த 1000 பேர்!

குரு சாமி பள்ளம் விவகாரம்… அதிகாரிகளுடன் பொதுமக்கள் கடும் வாக்குவாதம்!

சபரிமலை ஐய்யப்பன் கோயிலில் பூஜை காலத்தின்போது விற்பனை செய்யப்பட்ட நெய்யில் லட்சக்கணக்கில் முறைகேடு!

தமிழகத்தில் நேற்று நடைபெற்ற தேசிய லோக் அதாலத்தில் ஒரு லட்சத்து 3 ஆயிரத்து 366 வழக்குகளுக்கு தீா்வு

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies