பசுமை ஹைட்ரஜன் திட்டம்! - ஐந்து ஆண்டுகளில் ரூ.80,000 கோடி முதலீடு!
Aug 15, 2025, 06:14 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

பசுமை ஹைட்ரஜன் திட்டம்! – ஐந்து ஆண்டுகளில் ரூ.80,000 கோடி முதலீடு!

Web Desk by Web Desk
Jan 30, 2024, 06:21 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

பசுமை ஹைட்ரஜன் திட்டங்களை மேம்படுத்துவதற்காக மகாராஷ்டிர அரசுடன், பசுமை எரிசக்தி நிறுவனம் (என்ஜிஇஎல்) புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது. ஐந்து ஆண்டுகளில் ரூ.80,000 கோடி முதலீடு எதிர்பார்க்கப்படுகிறது.

தேசிய அனல்மின் கழகத்தின் பசுமை எரிசக்தி நிறுவனம் (என்ஜிஇஎல்) ஆண்டுக்கு 1 மில்லியன் டன் திறன் கொண்ட பசுமை ஹைட்ரஜன் மற்றும் அதன் துணைப் பொருட்கள் (பசுமை அம்மோனியா, கிரீன் மெத்தனால்) மேம்பாட்டிற்காக மகாராஷ்டிர அரசுடன் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது.

இதில் 2 ஜிகாவாட் பம்ப் செய்யப்பட்ட, சேமித்து வைக்கும் வசதி கொண்ட திட்டங்கள் மற்றும் மாநிலத்தில் 5 ஜிகாவாட் வரை சேமிப்பு வசதி கொண்ட அல்லது சேமிப்பு வசதி இல்லாத புதுப்பிக்கத்தக்க எரிசக்தித் திட்டங்களை உருவாக்குதல் ஆகியவை அடங்கும்.

அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கான மகாராஷ்டிர அரசின் பசுமை முதலீட்டு திட்டத்தின் ஒரு பகுதியாக இந்தப் புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டுள்ளது. இந்த ஒப்பந்தம் சுமார் ரூ.80,000 கோடி முதலீட்டை எதிர்பார்க்கிறது.

2024 ஜனவரி 29 அன்று மகாராஷ்டிர முதலமைச்சர் ஏக்நாத் ஷிண்டே, மகாராஷ்டிரா துணை முதலமைச்சர் தேவேந்திர ஃபட்னாவிஸ் மற்றும் பிற மூத்த அதிகாரிகள் முன்னிலையில் என்ஜிஇஎல் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி மோஹித் பார்கவா மற்றும் மகாராஷ்டிர அரசின் எரிசக்தித் துறை துணைச் செயலாளர்  நாராயண் காரத் இடையே இந்தப் புரிந்துணர்வு ஒப்பந்தம் பரிமாறிக் கொள்ளப்பட்டது.

2032-ம் ஆண்டுக்குள் 60 ஜிகாவாட் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி திறனை உருவாக்க என்டிபிசி திட்டமிட்டுள்ளது.

என்ஜிஇஎல் என்பது என்டிபிசியின் துணை நிறுவனமாகும். மேலும் 3.4 ஜிகாவாட் மற்றும் 26 ஜிகாவாட் செயல்பாட்டு திறன் கொண்ட என்டிபிசியின் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி தயாரிப்பில் ஈடுபடுவதை நோக்கமாகக் கொண்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Tags: Green Hydrogen Project!
ShareTweetSendShare
Previous Post

பி.சி.ஜார்ஜ் தலைமையிலான கேரள ஜனபக்சம் கட்சி பா.ஜ.கவுடன் இணைப்பா?

Next Post

சத்னம் சிங் சாந்துவை மாநிலங்களவை உறுப்பினராகக் குடியரசுத்தலைவர் நியமித்துள்ளார்!

Related News

இந்தியா Vs பாகிஸ்தான் : வீறுநடை போடும் இந்தியா – வீழ்ந்து கிடக்கும் பாகிஸ்தான்!

புதிய பாரதம், வெற்றி பாரதம் – விஸ்வாமித்திரர் பிரதமர் மோடி – விஸ்வகுரு இந்தியா!

கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகள் – டாப் 5 நாடுகள் என்னென்ன?

இந்தியாவின் முதல் ராணி வேலு நாச்சியார்!

இந்திய பத்திரிகைத் துறையின் தந்தை!

புரட்சி மாவீரன் வாஞ்சிநாதன்!

Load More

அண்மைச் செய்திகள்

முல்லைப் பெரியாறு அணைக்கு அடித்தளமிட்டவர் முத்து இருளப்ப பிள்ளை!

எதிரிகளின் சிம்ம சொப்பனம் ஒண்டிவீரன்!

விடுதலை வேள்வியை ஏற்றி வைத்த முதல் வீரர் பூலித்தேவர்!

இஸ்லாமிய படையெடுப்பை தடுத்த வீரத்தளவாய் வெள்ளையன் சேர்வை!

விடுதலை போரின் விடிவெள்ளி தீரன் சின்னமலை!

பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர்!

சுதந்திரத்தின் அடையாளம் மாவீரன் அழகுமுத்துக்கோன்!

உறுதியின் வடிவம் கிருஷ்ணம்மாள் ஜெகந்நாதன்!

ஜம்மு-காஷ்மீர் : மேகவெடிப்பு காரணமாக பெருவெள்ளம், நிலச்சரிவு!

பாகிஸ்தானின் தவறான குறிப்புகளை இந்தியா திட்டவட்டமாக நிராகரிக்கிறது : ரந்தீர் ஜெய்ஸ்வால்

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies