பாரத பிரதமர் மோடியிடம் மாலத்தீவு அதிபர் மன்னிப்பு கேட்க வேண்டும் : எதிர்க்கட்சி வலியுறுத்தல்!
Jul 25, 2025, 08:24 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

பாரத பிரதமர் மோடியிடம் மாலத்தீவு அதிபர் மன்னிப்பு கேட்க வேண்டும் : எதிர்க்கட்சி வலியுறுத்தல்!

Web Desk by Web Desk
Jan 31, 2024, 11:31 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

இந்தியா மாலத்தீவு இடையே மோதல் தொடரும் நிலையில், மாலத்தீவு அதிபர் பாரத பிரதமர் மோடியிடம் மன்னிப்பு கேட்க வேண்டும் என்ற கோரிக்கை அந்த நாட்டிலேயே எழுந்துள்ளது.

இந்தியாவுக்கும் மாலத்தீவுக்கும் இடையே கடந்த சில காலமாகவே மோதல் நிலவி வருகிறது. மாலத்தீவில், அதிபர் முகமது முய்சு தலைமையில், மக்கள் தேசிய காங்கிரஸ் ஆட்சி நடைபெறுகிறது. இவர் ஒரு சீன ஆதரவாளர்.

நம் நாட்டுக்கு எதிரான நிலைப்பாட்டை கொண்டுள்ள முகமது முய்சு மீது முக்கிய எதிர்க்கட்சிகள் கடும் அதிருப்தி தெரிவித்துள்ளன.

இதன் எதிரொலியாக கடந்த சில தினங்களுக்கு முன் பார்லி., சிறப்பு கூட்டத்தில் ஆளும் கூட்டணி கட்சி எம்.பி.,க்களுக்கும் எதிர்க்கட்சியான மாலத்தீவு ஜனநாயக கட்சி எம்.பி.,க்களுக்கும் இடையே நடந்த அடிதடி வீடியோ சமூக வலைதளத்தில் வேகமாக பரவியது.

இதன் எதிரொலியாக அதிபர் முகமது முய்சுக்கு எதிராக பாராளுமன்றத்தில் கண்டன தீர்மானம் கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி மற்றும் இந்திய மக்களிடம் மாலத்தீவு அதிபர் முகமது முய்ஸூ முறையாக மன்னிப்பு கேட்க வேண்டும் என்று ஜும்ஹூரி கட்சித் தலைவர் காசிம் இப்ராஹிம் வலியுறுத்தியுள்ளார்.

இந்தியா மற்றும் மோடி குறித்து மூன்று மாலத்தீவு அமைச்சர் சர்ச்சை கருத்துகளைக் கூறியிருந்த நிலையில், இப்ராஹிம் இப்படியொரு அறிக்கையை வெளியிட்டுள்ளார்.

இது தொடர்பாக அவர் கூறுகையில், “சீனா பயணத்திற்குப் பிறகு அவர் தெரிவித்த கருத்துகளுக்கு இந்திய அரசு மற்றும் பிரதமர் மோடியிடம் முறைப்படி மன்னிப்பு கேட்குமாறு மாலத்தீவு அதிபர் முய்ஸுவை நான் கேட்டுக்கொள்கிறேன்.

இந்தியா மற்றும் மாலதீவுகளுக்கு இடையேயான உறவு மோசமடைந்து வருவது கவலையை ஏற்படுத்துகிறது. எந்தவொரு நாட்டைப் பற்றியும், குறிப்பாக அண்டை நாடு குறித்து, அந்த நாடு உடனான உறவைப் பாதிக்கும் வகையில் நாம் பேசக்கூடாது. நமது நாட்டிற்கு என்று ஒரு கடமை உள்ளது, அதைக் கருத்தில் கொள்ள வேண்டும்.

‘இந்தியா அவுட்’ என்ற ஆபத்தான பிரச்சாரத்தை முய்ஸு கையில் எடுத்துள்ளார். இதனால் தேவையில்லாத பிரச்சினைகள் உருவாகும். தற்போதைய அதிபருக்கு முன்பு ஆதரவாக இருந்தவர்களே கூட முய்ஸு நடவடிக்கைகளைக் கேள்வி எழுப்புகின்றனர்.

இந்தியர்களை வெளியேறச் சொல்வது நமது நாட்டிற்கு நஷ்டத்தை மட்டுமே விளைவிக்கும். இந்த நடவடிக்கை தேவையில்லாதது. அதைச் செய்யக் கூடாது என்றே நான் முய்ஸுவிடம் கூறுவேன்” என்று அவர் கூறியுள்ளார்.

Tags: PM ModiMaldivian President should apologize to Indian Prime Minister Modi: Opposition insists!
ShareTweetSendShare
Previous Post

புரோ கபடி : புனேரி பல்டன் இமாலய வெற்றி!

Next Post

25 கோடி பேர் வறுமையின் பிடியில் இருந்து மீட்பு! – இந்தியாவில் விரைவில் 5ஜி தொழில்நுட்பம் அறிமுகம்! – குடியரசுத் தலைவர் பெருமிதம்

Related News

ஏழ்மையை பயன்படுத்தி சிறுநீரகங்கள் திருட்டு: திமுக எம்எல்ஏ.,விற்கு தொடர்பா?

கங்கை கொண்ட சோழபுரம் கோயில் : சோழர்கள் கட்டடக்கலைக்கு வரலாற்று சான்று!

இங்கிலாந்துடன் கைகோர்த்த இந்தியா : தடையற்ற வர்த்தகம் – என்னென்ன இலாபம்?

எதிர்கால போர் AI போர் : வெற்றிக்கு அடித்தளம் அமைக்கும் இந்தியா!

பிரதமர் மோடியின் புதிய பாணி : எதிரி நாடுகளை அடிபணிய வைக்கும் அதிசயம்!

நாடாளுமன்றம் முடக்கம் – 2 நாளில் ரூ.25 கோடி வீண் – மக்கள் பணத்தை வீணடிக்கும் எதிர்க்கட்சிகள்!

Load More

அண்மைச் செய்திகள்

ராஜேந்திர சோழன் நினைவு நாணயத்தை வெளியிடுகிறார் பிரதமர் மோடி!

கிட்னி திருட்டு இல்லை – முறைகேடு, மா சுப்ரமணியன் : இப்படி சொல்வதற்கு உங்களுக்கு வெட்கமாக இல்லையா? – அண்ணாமலை கேள்வி!

தொழிலாளர்கள் தங்கும் விடுதி : திறந்து 3 மாதங்களாகியும் செயல்படாத அவலம்!

மத்திய அரசின் நிதி எங்கு தான் செல்கிறது? : அண்ணாமலை கேள்வி!

கோவை குண்டுவெடிப்பில் கைதான டெய்லர் ராஜா மீது மேலும் 2 வழக்குகள்!

சிறுவன் கடத்தப்பட்ட வழக்கு : நாடு போலீஸ் ராஜ்ஜியத்திற்கு செல்கிறதோ?- சென்னை உயர்நீதிமன்றம் காட்டம்!

கங்கை கொண்ட சோழபுரம் பிரதமர் மோடி வருகை : ஹெலிகாப்டரை தரையிறக்கி பாதுகாப்புத்துறை அதிகாரிகள் சோதனை!

டிரான்ஸ்பார்மர்களை கொள்முதல் டெண்டர் ஒதுக்கீட்டில் முறைகேடு : செந்தில் பாலாஜிக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு!

நவீன ட்ரோன்களை உருவாக்க வேண்டியது அவசியம் : முப்படைகளின் தலைமைத் தளபதி அனில் சவுஹான்

திருப்பூர் : கர்ப்பிணி பெண்ணுக்கு காலாவதியான ஓ.ஆர்.எஸ் பவுடர் வழங்கியதால் அதிர்ச்சி!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies