சென்னை, கோவை, திருநெல்வேலி உள்பட பல்வேறு மாவட்டங்களில் தேசிய புலனாய்வு அமைப்பினர் அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர்.
தமிழகத்தில் தடை செய்யப்பட்ட இயக்கங்களுடன் தொடர்புகள் அதிக அளவில் உள்ளதாக, மத்திய உளவுத்துறை அளித்த அறிக்கையின் பேரில், என்.ஐ.ஏ. அதிகாரிகள் தொடர் சோதனை நடத்தி வருகின்றனர்.
கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் மதுரையில் உள்ள முகமது தாஜுதீன் என்பவர் வீட்டில், டெல்லி என்ஐஏ அதிகாரிகள் சோதனை நடத்தினர். இதன் தொடர்ச்சியாக தொடர்ந்து சோதனை நடத்தப்பட்டு வருகிறது.
இந்நிலையில் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இன்று காலை முதல் தேசிய புலனாய்வு அமைப்பினர் சோதனை நடத்தி வருகின்றனர். சென்னை, கோவை, திருநெல்வேலி, மதுரை, சிவகங்கை உள்ளிட்ட மாவட்டங்களில் சோதனை நடைபெற்று வருகிறது. கோவை ஆலாந்துறை ஆர்.ஜி.நகரில் ரஞ்சித், காளப்பட்டியில் உள்ள முருகன் ஆகியோர் வீடுகளில் சோதனை நடைபெற்று வருகிறது.
திருச்சி வயலூரில் சாட்டை முருகன், தென்காசி சிவகிரி இசைமதிவாணன், சிவகங்கை மாவட்டம் இளையான்குடியின் முருகன் விஷ்ணு, உள்ளிட்டோர் வீடுகளில் ரெய்டு நடைபெற்று வருகிறது.