இந்தியக் கடலோரக் காவல்படையின் 48-வது அமைப்பு தினம் கொண்டாடப்பட்டது!
Jul 25, 2025, 09:02 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

இந்தியக் கடலோரக் காவல்படையின் 48-வது அமைப்பு தினம் கொண்டாடப்பட்டது!

Web Desk by Web Desk
Feb 2, 2024, 11:12 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

 புது தில்லியில் இந்தியக் கடலோரக் காவல்படை  தனது 48-வது அமைப்பு தினத்தை நேற்று  பிப்ரவரி 1-ம் தேதியன்று கொண்டாடியது.

கடந்த 1977-ஆம் ஆண்டு பிப்ரவரி 1-ஆம் தேதி, இந்திய கடலோர பாதுகாப்பை உறுதி செய்வதில், கப்பற்படைக்கு உதவும் விதமாக, கடலோரக் காவல்படை உருவாக்கப்பட்டது. கடலோர காவல் படையினரின் அர்ப்பணிப்பைப் பாராட்டும் விதமாக, ஒவ்வொரு ஆண்டும் பிப்ரவரி 1-ஆம் தேதி கடலோர காவல்படை தினம் கொண்டாடப்படுகிறது.

இது 1977-ம் ஆண்டில் ஒரு சாதாரண தொடக்கத்திலிருந்து கடல்சார் பாதுகாப்பில் ஒரு வலிமையான சக்தியாக மாறிய அதன் குறிப்பிடத்தக்க பயணத்தை நினைவுகூர்கிறது. கடலோரக் காவல் படையில் 152 கப்பல்கள் மற்றும் 78 விமானங்கள் உள்ளன. 2030-க்குள் 200 படைத்தளங்கள் மற்றும் 100 விமானங்கள் என்ற இலக்கை அடையும் நிலையில் உள்ளது.

நாங்கள் பாதுகாக்கிறோம் என்ற குறிக்கோளின் கீழ், இந்திய கடலோரக் காவல் படை தொடங்கப்பட்டதிலிருந்து 2023-ம் ஆண்டில் மட்டும் 200 பேர் உட்பட 11,554 பேர் காப்பாற்றப்பட்டுள்ளனர்.

பாதுகாப்புக்கான இந்த அர்ப்பணிப்பு இந்தியக் கடலோரக் காவல் படையை உலக அளவில் புகழ்பெற்றக் கடலோரக் காவல்படைகளில் ஒன்றாக நிலைநிறுத்தியுள்ளது.

இந்தியாவின் கடல்சார் மண்டலங்களில் இந்தியக் கடலோரக் காவல்படை தினமும் 50 முதல் 60 கப்பல்கள் மற்றும் 10 முதல் 12 விமானங்கள்  மூலம் 24 மணி நேரமும் கண்காணிப்பை மேற்கொண்டு வருகிறது.

நீலப் பொருளாதாரம் மற்றும் பாதுகாப்பான கடல்சார் போக்குவரத்தில் நிலையான முன்னேற்றத்திற்காக சுதந்திரமான, பாதுகாப்பான கடல் பகுதியை உறுதி செய்ய நாட்டின் இலக்கிற்குப் பங்களிப்பு செய்கிறது.

கடல்சார் பாதுகாப்பில் வளர்ந்து வரும் சவால்களுக்கு பதிலளிக்கும் விதமாக, இந்தியக் கடலோரக் காவல்படை, கடல்சார் சட்ட அமலாக்கத்தைக் கணிசமாக வலுப்படுத்தியுள்ளது.

இதன் விளைவாக ரூ.15,343 கோடி மதிப்புள்ள ஆயுதங்கள், தடைசெய்யப்பட்ட பொருட்கள் மற்றும் போதைப்பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. 2023-ல் மட்டும் ரூ.478 கோடி பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. கடத்தல்காரர்களுக்கு எதிராகக் கூட்டு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது. ஊடுருவலைத் தடுத்துள்ளது.

இந்தியக் கடலோரக் காவல்படையின் குறிப்பிடத்தக்கப் பங்களிப்பை அங்கீகரித்து, குடியரசுத்தலைவர், குடியரசு துணைத்தலைவர், பிரதமர், பாதுகாப்புத் துறை அமைச்சர் ஆகியோர் வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ளனர்.

Tags: indian coast guard raising day
ShareTweetSendShare
Previous Post

அவிநாசி கருணாம்பிகை உடனமர் லிங்கேஸ்வரர் கோவில் கும்பாபிஷேகப் பெருவிழா! – அண்ணாமலை மகிழ்ச்சி

Next Post

5 மாவட்டங்களில் அடுத்த 3 மணிநேரத்திற்கு மழை!-  சென்னை வானிலை மையம் தகவல்.!

Related News

பிரதமர் மோடியின் புதிய பாணி : எதிரி நாடுகளை அடிபணிய வைக்கும் அதிசயம்!

நாடாளுமன்றம் முடக்கம் – 2 நாளில் ரூ.25 கோடி வீண் – மக்கள் பணத்தை வீணடிக்கும் எதிர்க்கட்சிகள்!

ஏழ்மையை பயன்படுத்தி சிறுநீரகங்கள் திருட்டு: திமுக எம்எல்ஏ.,விற்கு தொடர்பா?

50 பேருடன் மாயமான ரஷ்ய விமானம் : உடைந்த பாகங்கள் மீட்பு – பயணிகள் நிலை என்ன?

மோசடியில் புது ரூட் : போலி தூதரகம் தொடங்கி பணம் சுருட்டிய கில்லாடி!

கங்கை கொண்ட சோழபுரம் கோயில் : சோழர்கள் கட்டடக்கலைக்கு வரலாற்று சான்று!

Load More

அண்மைச் செய்திகள்

ரூ.96 கோடி அம்போ… : ரவுடிகளின் ராஜ்ஜியமான ஈரடுக்கு பேருந்து நிலையம்!

வலிமையான பாஸ்போர்ட் பட்டியல் : உலகளவில் 77வது இடத்திற்கு இந்தியா முன்னேற்றம்!

ஏவுகணைத் திட்டம் டமால் : மீண்டும் மண்ணை கவ்விய பாகிஸ்தானின் ஷாஹீன்-3!

தமிழக பெண்கள் திமுக அரசின் மீது கடும் அதிருப்தியில் இருக்கிறார்கள் : அண்ணாமலை

கழிவறையில் ரேஷன் கடையின் அரிசி மூட்டைகள் : திமுக அரசுக்கு நயினார் நாகேந்திரன் கண்டனம்!

எடப்பாடி பழனிசாமிக்கு இந்து முன்னணி கண்டனம்!

முதலமைச்சர் ஸ்டாலின் நலமுடன் உள்ளார் – மருத்துவமனை நிர்வாகம் அறிக்கை!

இரண்டு குழந்தைகளை கொன்ற அபிராமிக்கு சாகும் வரை ஆயுள் தண்டனை!

திமுக  ஆட்சியில் உடனடி சிகிச்சை என்பது ஏழை எளியோருக்கு எட்டாக்கனியாகவே இருக்கிறது : அண்ணாமலை குற்றச்சாட்டு!

மீன்பிடி தடை கால நிவாரணம் உயர்த்தி வழங்கப்படும் – எடப்பாடி பழனிசாமி

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies