இந்தியக் கடலோரக் காவல்படையின் 48-வது அமைப்பு தினம் கொண்டாடப்பட்டது!
Jul 30, 2026, 09:37 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

இந்தியக் கடலோரக் காவல்படையின் 48-வது அமைப்பு தினம் கொண்டாடப்பட்டது!

Murugesan M by Murugesan M
Feb 2, 2024, 11:12 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

 புது தில்லியில் இந்தியக் கடலோரக் காவல்படை  தனது 48-வது அமைப்பு தினத்தை நேற்று  பிப்ரவரி 1-ம் தேதியன்று கொண்டாடியது.

கடந்த 1977-ஆம் ஆண்டு பிப்ரவரி 1-ஆம் தேதி, இந்திய கடலோர பாதுகாப்பை உறுதி செய்வதில், கப்பற்படைக்கு உதவும் விதமாக, கடலோரக் காவல்படை உருவாக்கப்பட்டது. கடலோர காவல் படையினரின் அர்ப்பணிப்பைப் பாராட்டும் விதமாக, ஒவ்வொரு ஆண்டும் பிப்ரவரி 1-ஆம் தேதி கடலோர காவல்படை தினம் கொண்டாடப்படுகிறது.

இது 1977-ம் ஆண்டில் ஒரு சாதாரண தொடக்கத்திலிருந்து கடல்சார் பாதுகாப்பில் ஒரு வலிமையான சக்தியாக மாறிய அதன் குறிப்பிடத்தக்க பயணத்தை நினைவுகூர்கிறது. கடலோரக் காவல் படையில் 152 கப்பல்கள் மற்றும் 78 விமானங்கள் உள்ளன. 2030-க்குள் 200 படைத்தளங்கள் மற்றும் 100 விமானங்கள் என்ற இலக்கை அடையும் நிலையில் உள்ளது.

நாங்கள் பாதுகாக்கிறோம் என்ற குறிக்கோளின் கீழ், இந்திய கடலோரக் காவல் படை தொடங்கப்பட்டதிலிருந்து 2023-ம் ஆண்டில் மட்டும் 200 பேர் உட்பட 11,554 பேர் காப்பாற்றப்பட்டுள்ளனர்.

பாதுகாப்புக்கான இந்த அர்ப்பணிப்பு இந்தியக் கடலோரக் காவல் படையை உலக அளவில் புகழ்பெற்றக் கடலோரக் காவல்படைகளில் ஒன்றாக நிலைநிறுத்தியுள்ளது.

இந்தியாவின் கடல்சார் மண்டலங்களில் இந்தியக் கடலோரக் காவல்படை தினமும் 50 முதல் 60 கப்பல்கள் மற்றும் 10 முதல் 12 விமானங்கள்  மூலம் 24 மணி நேரமும் கண்காணிப்பை மேற்கொண்டு வருகிறது.

நீலப் பொருளாதாரம் மற்றும் பாதுகாப்பான கடல்சார் போக்குவரத்தில் நிலையான முன்னேற்றத்திற்காக சுதந்திரமான, பாதுகாப்பான கடல் பகுதியை உறுதி செய்ய நாட்டின் இலக்கிற்குப் பங்களிப்பு செய்கிறது.

கடல்சார் பாதுகாப்பில் வளர்ந்து வரும் சவால்களுக்கு பதிலளிக்கும் விதமாக, இந்தியக் கடலோரக் காவல்படை, கடல்சார் சட்ட அமலாக்கத்தைக் கணிசமாக வலுப்படுத்தியுள்ளது.

இதன் விளைவாக ரூ.15,343 கோடி மதிப்புள்ள ஆயுதங்கள், தடைசெய்யப்பட்ட பொருட்கள் மற்றும் போதைப்பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. 2023-ல் மட்டும் ரூ.478 கோடி பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. கடத்தல்காரர்களுக்கு எதிராகக் கூட்டு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது. ஊடுருவலைத் தடுத்துள்ளது.

இந்தியக் கடலோரக் காவல்படையின் குறிப்பிடத்தக்கப் பங்களிப்பை அங்கீகரித்து, குடியரசுத்தலைவர், குடியரசு துணைத்தலைவர், பிரதமர், பாதுகாப்புத் துறை அமைச்சர் ஆகியோர் வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ளனர்.

Tags: indian coast guard raising day
ShareTweetSendShare
Previous Post

அவிநாசி கருணாம்பிகை உடனமர் லிங்கேஸ்வரர் கோவில் கும்பாபிஷேகப் பெருவிழா! – அண்ணாமலை மகிழ்ச்சி

Next Post

5 மாவட்டங்களில் அடுத்த 3 மணிநேரத்திற்கு மழை!-  சென்னை வானிலை மையம் தகவல்.!

Related News

தமிழகத்துக்கு தண்ணீர் திறக்க காவிரி மேலாண்மை வாரியம் உத்தரவு

மாணவிக்கு பாலியல் தொல்லை; தனியார் கல்லூரி தாளாளர் கைது

மேகதாது அணை தீர்மானத்தை எதித்த வழக்கு; தலைமைச் செயலாளர் பதிலளிக்க உத்தரவு

பொதுத்தேர்வு முறைகேட்டில் ஈடுபடுபவர்களுக்கு 10 ஆண்டுகள் வரை சிறை; மசோதா நிறைவேறியது

திமுகவை தேர்தல் அரசியலில் இருந்து அப்புறப்படுத்த முடியாது;மேயர் பிரியா

இந்தியா அதிரடியால் அலறும் பாகிஸ்தான் : உலக நாடுகளிடம் உதவி கேட்டு கதறல் – சிறப்பு தொகுப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

வரவேற்பு பெறும் கையடக்க விசிறிகள் : காத்திருக்கும் பேராபத்து – எச்சரிக்கும் விஞ்ஞானிகள் – சிறப்பு கட்டுரை!

முன்னாள் மத்திய அமைச்சர் மு.க.அழகிரி மகளை கைது செய்ய வலியுறுத்தல் – எஸ்பிஐ வங்கி ஊழியர்கள் போராட்டம்!

தடபுடல் விருந்துடன் பிறந்த நாள் கொண்டாட்டம் : அரசியலுக்கு வர ஆழம் பார்க்கிறாரா அசுரன்? சிறப்பு தொகுப்பு!

ஈரான் மீதான தாக்குதல் நிறுத்தப்பட்டதற்கு ஏவுகணை பற்றாக்குறை காரணமா? : ட்ரம்ப் முடிவின் பின்னணி – சிறப்பு தொகுப்பு!

டாஸ்மாக் நிதி முறைகேடு – தமிழகத்தில் 41 இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை!

டாஸ்மாக் கடைகள் தனியார் மயம்? : தமிழக அரசு திட்டம் என தகவல்!

கரூரில் செந்தில் பாலாஜிக்கு நெருக்கமானவர்களின் வீடுகளில் லஞ்ச ஒழிப்பு துறையினர் சோதனை!

இன்றைய தங்கம் விலை!

நீட் சட்டத்திருத்த மசோதா விவாதம் – எதிர்கட்சிகள் மீது மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜு குற்றச்சாட்டு!

கொல்கத்தா போராட்டத்தில் வன்முறையை தூண்டும் விதமாக செயல்பட்ட சமூக விரோதிகள் மீது குண்டாஸ் – அமைச்சர் அக்னிமித்ரா பால் திட்டவட்டம்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies