ஐரோப்பிய உச்சி மாநாட்டின் போது அந்நாட்டு விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர்!
Mar 15, 2026, 03:45 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

ஐரோப்பிய உச்சி மாநாட்டின் போது அந்நாட்டு விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர்!

Murugesan M by Murugesan M
Feb 2, 2024, 04:54 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

உக்ரைனுக்கு புதிய நிதியை வழங்குவதற்காக ஐரோப்பிய ஒன்றிய தலைவர்கள் நேற்று ஒரு கூட்டத்தை நடத்திய நிலையில், நூற்றுக்கணக்கான விவசாயிகள் பிரஸ்ஸல்ஸில் உள்ள பாராளுமன்ற வளாகத்திற்கு வெளியே கூடியுள்ளனர்.

போராட்டத்தில் ஈடுபட்டோர் உச்சிமாநாடு நடைபெற்றுக் கொண்டிருந்த ஐரோப்பிய பாராளுமன்றத்திற்கு முன் அதிகாலையிலே தங்கள் டிராக்டர்களில் பிரஸ்ஸல்ஸ் நகருக்குச் சென்றனர்.

நேற்று காலை போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள் தங்கள் கான்வாய்கள் மூலம் அந்த இடத்திற்கு வருவதற்கு முன்பே ஒரு சில டிராக்டர்கள் ஐரோப்பிய பாராளுமன்றத்திற்கு அருகே ஒரு வாரம் முழுவதும் நிறுத்தப்பட்டிருந்தன.

போராட்டத்தில் ஈடுபட்ட ஒரு சிலர் பாராளுமன்ற கட்டிடத்திற்கு முன்பு இருந்த பொருட்களை தீ வைத்து எரித்தனர், மற்றவர்கள் “நீங்கள் பூமியை நேசித்தால், அதை நிர்வகிப்பவர்களை ஆதரிக்கவும் “என்றும் “விவசாயிகள் இல்லை, உணவு இல்லை” என்ற வாசகங்கள் அடங்கிய பலகைகளை வைத்திருந்தனர்.

பெல்ஜியம் பிரஸ்ஸல்ஸில் ஐரோப்பிய ஒன்றிய உச்சிமாநாட்டிற்கு செல்லும் சாலைகளை விவசாயிகள் 1,000 ஊழவூர்திகளைப் பயன்படுத்தி வழி மறித்துள்ளனர் என்று பெல்ஜிய காவல்துறை தெரிவித்துள்ளது.

கோபமடைந்த விவசாயிகள் வரிகள், விலைவாசி உயர்வு, மலிவான இறக்குமதிகள், விதிகள் மற்றும் அதிகாரத்துவம் பற்றி முறைப்பாடுகளை முன்வைத்து இப்போராட்டத்தை நடத்தினர். அத்துடன் ஐரோப்பிய உச்சி மாநாட்டில் விவசாயிகளின் குரல் எழுப்பப்படும் என்று அவர்கள் நம்பினர்.

ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள் சிலர் நாடாளுமன்ற கட்டிடத்தின் மீது முட்டைகளை வீசினர். மற்றவர்கள் பட்டாசுகளை வெடித்தும், தீ வைத்தும் கொளுத்தினர். சதுக்கத்தில் ஒரு சிலை சேதப்படுத்தப்பட்டது.

இதற்கு கண்ணீர் புகை மற்றும் தண்ணீர் பீரங்கிகளை பயன்படுத்தி காவல்துறையினர் பதிலடி கொடுத்தனர்.

Tags: During the European summitthe farmers of the country were involved in the protest!
ShareTweetSendShare
Previous Post

அந்த்யோதயா அன்ன யோஜனா குடும்ப அட்டைதாரர்களுக்கு சர்க்கரை மானியத்தை நீட்டிக்க அமைச்சரவை ஒப்புதல்!

Next Post

“கேந்திரிய க்ரிஹ்மந்த்ரி தக்ஷதா பதக்” என்ற புதிய பதக்கம் அறிமுகம்!

Related News

அரசு மருத்துவமனையில் கஞ்சா போதையில் கொலை முயற்சி! – பொதுமக்கள் அச்சம்!

சென்னையிலிருந்து லடாக் செல்லும் கார் பயணத்தில் பெண் ஒருவர் தனியாக கார் ஓட்டி செல்வது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

மாமுல் கேட்டு மளிகை கடையை அடித்து நொறுக்கும் பிரபல ரவுடி – வெளியான பகீர் சிசிடிவி

மாலி நாட்டில் தென்காசியை சேர்ந்த நபரை கடத்திய தீவிரவாதிகள்..பல்வேறு முயற்சியால் மீட்ட மத்திய அரசு – நேரில் போய் சந்தித்த அதிமுக எம்.எல்.ஏ

திமுக ஆட்சியில், யாருக்குமே சட்டத்தின் மீது பயமில்லை – அண்ணாமலை குற்றச்சாட்டு!

புதுச்சேரியில் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தையில் காங்கிரஸ் கட்சியனரை 1 மணி நேரமாக காக்க வைத்த திமுகவினர்!

Load More

அண்மைச் செய்திகள்

பெண் காவலருக்கு பாலியல் தொல்லை – காவல் அதிகாரி கைது!

குளறுபடி காரணமாக ஒத்திவைக்கப்பட்ட குரூப் 2, 2ஏ தேர்வுகள் தமிழகம் முழுவதும் இன்று நடைபெற்று வருகிறது.

ரேபிஸ் நோயால் நாயை போன்றே குரைத்த சிறுவன் – காண்போரை கலங்கச் செய்த சம்பவம்!

மாணவி படுகொலை – நீதிகேட்டு இரவிலும் மக்கள் சாலை மறியல்!

ஆப்கானிஸ்தானில் வான்வழித் தாக்குதல் நடத்திய பாகிஸ்தான் – இந்தியா கடும் கண்டனம்!

தொகுதி மக்களுக்கு நேரில் சென்று நன்றி தெரிவித்த அதிமுக எம்.பி தம்பிதுரை!

தேர்தல் நெருங்கும் நேரத்தில் மாற்றுக் கட்சியில் இருந்து அதிமுக-வில் இணைந்த 1000 பேர்!

குரு சாமி பள்ளம் விவகாரம்… அதிகாரிகளுடன் பொதுமக்கள் கடும் வாக்குவாதம்!

சபரிமலை ஐய்யப்பன் கோயிலில் பூஜை காலத்தின்போது விற்பனை செய்யப்பட்ட நெய்யில் லட்சக்கணக்கில் முறைகேடு!

தமிழகத்தில் நேற்று நடைபெற்ற தேசிய லோக் அதாலத்தில் ஒரு லட்சத்து 3 ஆயிரத்து 366 வழக்குகளுக்கு தீா்வு

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies