பாரதப் பிரதமர் மோடி தலைமையில், இந்திய இரயில்வேதுறையில் பயணிகள் நலன் கருதி, நாடு முழுவதும் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.
மேலும், இரயில்வேதுறையை நவீனப்படுத்தப்பட்டு வருகிறது. குறிப்பாக, வந்தே பாரத் உள்ளிட்ட புதிய இரயில்கள் இயக்கப்படுகின்றன. இதற்கு பொது மக்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பு கிடைத்துள்ளது.
இந்த நிலையில், இரயில் பயணிகள் வசதிக்காக, சென்னை சென்ரல், எழும்பூர், தாம்பரம் உள்ளிட்ட இரயில் நிலையங்களைத் தொடர்ந்து, வில்லிவாக்கத்தில் 4-வதி புதிய இரயில் முனையம் அமைய உள்ளது.
இது தொடர்பாக, தெற்கு ரயில்வே பொது மேலாளர் ஆா்.என்.சிங் செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்தார். அப்போது, சென்னையிலிருந்து தினமும் வெளி மாநிலங்கள், வெளி மாவட்டங்களுக்கு அதிக அளவில் இரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன.
இந்த இரயில்கள் சென்னை சென்ட்ரல், எழும்பூர், தாம்பரம் ரயில் நிலையங்களிலிருந்து இயக்கப்பட்டு வருகின்றன. சென்னையிலிருந்து தற்போது அதிக அளவில் இரயில்கள் இயக்கப்படுவதால், சென்னை சென்ட்ரல் இரயில் நிலையத்துக்கு இரயில்கள் வந்து செல்வதில் கூடுதல் நேரம் ஆகிறது.
இந்த பிரச்சனைக்கு தீர்வு காணும் வகையிலும், புதிய இரயில்களை இயக்கும் வகையிலும் வில்லிவாக்கத்தில் புதிய இரயில் முனையம் உருவாக்கப்பட உள்ளது.
இதற்கான திட்ட மதிப்பீடு தயார் செய்யப்பட்டு வருகிறது. இரயில்வே வாரியம் ஒப்புதல் அளித்தவுடன் விரைவில் புதிய முனையம் அமைக்கப்படும் என்றார்.