கடல் கொள்ளை மற்றும் கடத்தலை எந்த சூழ்நிலையிலும் பொறுத்துக் கொள்ள முடியாது என பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார்.
விசாகப்பட்டினத்தில் உள்ள கடற்படை தளத்தில் ஐஎன்எஸ் சந்தாயக், முதல் சர்வே கப்பல் கடற்படையில் இணைக்கும் விழா நடைபெற்றது.இதில் பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், கடற்படைத் தளபதி ஆர் ஹரி குமார் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
விழாவில் பேசிய அமைச்சர் ராஜ்நாத்சிங், உலகளாவிய வர்த்தகத்தைப் பொறுத்தவரை, இந்தியப் பெருங்கடல் பகுதி ஒரு ஹாட்ஸ்பாட்டாக உள்ளது. இங்கு பெரிய அளவிலான சர்வதேச வர்த்தகம் நடைபெறுகிறது.
இந்த பகுதிகள் பல அச்சுறுத்தல்களை எதிர்கொள்கின்றன. முக்கியமாக கடற்கொள்ளையர்களால் அதிக அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது. கடல் கொள்ளை மற்றும் கடத்தலை எந்த சூழ்நிலையிலும் புதிய இந்தியா பொறுத்துக்கொள்ளாது என கூறினார்.
இந்தியப் பெருங்கடல் மற்றும் இந்தோ-பசிபிக் பிராந்தியத்தின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் போது கடற்படையின் வலிமையும் உறுதி ஆகும் என அவர் தெரிவித்தார். பல்வேறு நாடுகளை உள்ளடக்கிய தடையற்ற வர்த்தகம் இருக்க வேண்டும் என ராஜ்நாத்சிங் தெரிவித்தார்.