இலங்கை – ஆப்கானிஸ்தான் அணிகளுக்கு இடையேயான டெஸ்ட் போட்டியின் பொது மைதானத்திற்குள் உடும்பு நுழைந்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் அணி இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது.
இந்த இரு அணிகளுக்கும் இடையே 1 டெஸ்ட் போட்டி, 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் மற்றும் டி20 தொடர்களில் விளையாட உள்ளது.
இதில் முதலில் இரு அணிகளுக்கும் இடையே டெஸ்ட் தொடர் நடைபெற்றுவருகிறது. இந்தப் போட்டி பிப்ரவரி 2 ஆம் தேதி தொடங்கியது.
இப்போட்டியில் டாஸ் வென்ற இலங்கை முதலில் பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது. அதன்படி முதலில் பேட்டிங் செய்த ஆப்கானிஸ்தான் அணி 198 ரன்களில் ஆட்டமிழந்தது.
இதைத் தொடர்ந்து களமிறங்கிய இலங்கை அணி தற்போது 430-க்கு மேல் ரன்களை குவித்து வருகிறது. இந்நிலையில் நேற்று நடைபெற்ற போட்டியில் உடும்பு ஒன்று கிரிக்கெட் மைதானத்திற்குள் நுழைந்தது.
இதனால் ஆட்டம் உடனடியாக நிறுத்தப்பட்டு பரபரப்பு ஏற்பட்டது. நடுவர் ஒருவரின் பெரும் முயற்சிக்கு பிறகு உடும்பு மைதானத்தை விட்டு வெளியேறியது. இதையடுத்து போட்டி மீண்டும் தொடங்கியது. இது தொடர்பான வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.