"சச்சினை முந்திய ஜெய்ஸ்வால்" : முன்னாள் இந்திய வீரர் பாராட்டு!
Oct 23, 2025, 08:28 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

“சச்சினை முந்திய ஜெய்ஸ்வால்” : முன்னாள் இந்திய வீரர் பாராட்டு!

Web Desk by Web Desk
Feb 4, 2024, 03:27 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

இங்கிலாந்துக்கு அணிக்கு எதிராக இரட்டை சதம் அடித்த ஜெய்ஸ்வால் சச்சின் சாதனையை முறியடித்துள்ளதாக முன்னாள் இந்திய வீரர் பார்த்தீவ் படேல் கூறியுள்ளார்.

இங்கிலாந்து கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் கிரிக்கெட் தொடரில் விளையாடி வருகிறது.

இதில் முதல் டெஸ்ட் போட்டி ஐதராபாத்தில் உள்ள ராஜிவ் காந்தி சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்றது.

இதில் இங்கிலாந்து அணி வெற்றி பெற்று 1-0 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது. இதனைத் தொடர்ந்து இரு அணிகளுக்கும் இடையேயான இரண்டாவது போட்டி விசாகப்பட்டினத்தில் நடைபெற்று வருகிறது.

இந்தப் போட்டியின் முதல் இன்னிங்ஸில் இந்திய அணியின் வீரர் ஜெய்ஸ்வால் 209 ரன்களை எடுத்திருந்தார்.
இந்நிலையில் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர் கூட டெஸ்ட் கிரிக்கெட்டில் முதல் இரட்டை சதமடிக்க 10 வருடங்கள் எடுத்துக்கொண்டதாக முன்னாள் இந்திய வீரர் பார்த்தீவ் படேல் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து பேசிய அவர், “ஜெய்ஸ்வால் வான்கடே மைதானத்தில் ஜாம்பவான் வீரர்களுக்கு ரசிகர்கள் கொடுத்த கைதட்டல்களை பார்த்தவர். அதை அவரும் கேட்க விரும்பினார்.

நாளடைவில் அதே மைதானத்தில் ஐ.பி.எல். தொடரில் சதமடித்த அவர் அந்த கைதட்டல்களை பெற்றதை நாம் பார்த்தோம்.ஆனால் டெஸ்ட் கிரிக்கெட் என்பது வித்தியாசமான விளையாட்டு.

ஏற்கனவே டெஸ்ட் கிரிக்கெட்டில் சதமடித்துள்ள அவர் தற்போது இரட்டை சதமும் அடித்துள்ளார். பொதுவாக அனைவராலும் இரட்டை சதத்தை அடிக்கடி அடிக்க முடியாது.

சச்சின் பாஜி கூட டெஸ்ட் கிரிக்கெட்டில் சதமடிக்க 10 வருட காலம் எடுத்துக்கொண்டார். ஆனால் ஜெய்ஸ்வால் டெஸ்ட் கிரிக்கெட்டில் அறிமுகம் ஆன 1 வருடத்திலேயே இரட்டை சதம் அடித்துள்ளார்” என்று கூறினார்.

Tags: sachin tendulkarindian cricket team
ShareTweetSendShare
Previous Post

ஹவுதி கிளர்ச்சியாளர்கள் மீது அமெரிக்கா தாக்குதல்!

Next Post

லடாக்கில் திடீர் நிலநடுக்கம் – ரிக்டர் அளவில் 3.8 ஆக பதிவு!

Related News

இணையத்தில் தீயாய் பரவும் வீடியோ : டெஸ்லா சென்சாரில் பதிவானது பேய்களா?

ஐரோப்பாவில் இப்படி ஒரு நாடா?

நீரில் மூழ்கிய நெற்பயிர்களுக்கு உடனடி நிவாரணம் வேண்டும் – நயினார் நாகேந்திரன் வலியுறுத்தல்!

78,000 கோடி நிதி எங்கு சென்றது : முதலமைச்சர் ஸ்டாலின் வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும் – அண்ணாமலை

திமுக அரசின் அலட்சியத்தால் டெல்டா மாவட்டங்களில் 20 லட்சம் டன் நெல் வீண் – எல். முருகன்

ராஜஸ்தான் : பெட்ரோல் பங்க் ஊழியரை தாக்கிய மாவட்ட நீதிபதி!

Load More

அண்மைச் செய்திகள்

ஸ்ரீபெரும்புதூர் பகுதிகளில் சாலைகள் சேதம் : வாகன ஓட்டிகள் கடும் அவதி!

மாங்காடு அருகே மழைநீரில் மூழ்கி பெண் குழந்தை உயிரிழப்பு!

குண்டும், குழியுமாக காட்சியளிக்கும் சென்னை சாலைகள்!

புதிய வகை சைபர் குற்றத்தை வெளிச்சமிட்டு காட்டிய சமூக ஊடகங்கள்!

ரஷ்யாவின் எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தை தகர்த்த உக்ரைன்!

விருத்தாசலத்தில் அதிகாரிகளின் அலட்சியத்தால் முளைத்து சேதமடைந்த நெற்பயிர்கள்!

கோயில் நிதியில் வணிக வளாகங்கள் கட்டக் கூடாது – இந்து சமய அறநிலையத் துறைக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு!

நெல் ஈரப்பதம் : ஆய்வு நடத்த குழு அமைப்பு – மத்திய அரசு

திருச்சி : அறுவடைக்கு தயாராக இருந்த நெற்பயிர்கள் மழைநீரில் மூழ்கிச் சேதம் – விவசாயிகள் வேதனை!

கட்டுக்குள் முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டம்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies