ஆட்சியை கவிழ்க்க சதி செய்துவது தொடர்பான குற்றச்சாட்டு தொடர்பாக அரவிந்த் கெஜ்ரிவாலை தொடர்ந்து கல்வி அமைச்சர் அதிஷிக்கு டெல்லி போலீசார் சம்மன் அளித்துள்ளனர்.
ஆட்சியை கவிழ்க்க பாஜக சதி செய்வதாகவும், கட்சி மாறும் எம்எல்ஏக்களுக்கு ரூ. 25 கோடி பேரம் பேசப்படுவதாக டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் பாஜக மீது குற்றம்சாட்டி இருந்தார். இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்த பாஜகவினர், காவல்துறையில் புகார் அளித்தனர்.
இதுதொடர்பான விசாரணைக்கு ஆஜராகுமாறு சம்மன் அளிப்பதற்காக முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு டெல்லி குற்றப்பிரிவு போலீசார் நேற்று சென்றனர். சுமார் 5 மணிநேர காத்திருப்புக்கு பினனர் அவருக்கு சம்மன் அளிக்கப்பட்டது. 3 நாட்களுக்கு சம்மனுக்கு பதில் அளிக்குமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனைத்தொடர்ந்து ஆம் ஆத்மி சட்டமன்ற உறுப்பினரும், கல்வி அமைச்சருமான அதிஷியின் வீட்டுக்கு இன்று சென்ற குற்றப்பிரிவு துறை போலீசார் சம்மன் வழங்கியுள்ளனர்.