ரஷ்யாவுக்கு எதிராக உருவாக்கப்பட்டதுதான் நோட்டோ அமைப்பு. இதில் ரஷ்யாவுக்கு மிகவும் நெருங்கிய நாடான உக்ரைன் இணைவது, தங்களது பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் என்று ரஷ்யா கருதுகிறது. இதனால், நோட்டோ அமைப்பில் உக்ரைன் இணைவதை ரஷ்யா விரும்பவில்லை.
ஆனால், நேட்டோவில் இணைவதற்கு வொலோதிமீா் ஸெலென்ஸ்கி தலைமையிலான உக்ரைன் அரசு ஆதரவு தெரிவித்தது.
இதனையடுத்து, இந்த நாட்டின் மீது ரஷ்யா படையெடுத்தது. கிழக்கு மற்றும் தெற்கு உக்ரைனின் லுஹான்ஸ்க், டொனட்ஸ்க், கோசான், ஸபோரிஷியா உள்ளிட்ட பகுதிகளை அதிரடியாகக் கைப்பற்றியது. இதனைத்தொடர்ந்து, அந்த பகுதிகளை தங்கள் நாட்டுடன் இணைத்துக் கொள்வதாக ரஷியா அதிகாரப்பூர்வமாக அறிவித்தது.
இந்த நிலையில், ரஷ்யா ஆக்கிரமிப்பு நகரமான லிசிசான்ஸ்க்கில் தாக்குதல் நடத்தப்பட்டது. இந்த தாக்குதலில் அந்த பகுதியே சின்னாபின்னமானது. 28 பேர் உடல் சிதறி பலியானார்கள். 10 பேர் இடிபாடுகளுக்குள் சிக்கிக் கொண்டனர். அவர்களை மீட்புக்குழுவினர் மீட்டனர்.
இந்த தாக்குதலை உக்ரைன் ராணுவம் நடத்தியதாக ரஷ்யா குற்றம் சாட்டியுள்ளது. ஆனால், இந்த சம்பவம் குறித்து உக்ரைன் அரசு மவுனம் காத்து வருகிறது.