ஆஈஎஸ்எஸ் அமைப்பின் அடுத்த இலக்கு என்ன? மோகன் பகவத் விளக்கம்!
Jul 25, 2025, 08:53 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

ஆஈஎஸ்எஸ் அமைப்பின் அடுத்த இலக்கு என்ன? மோகன் பகவத் விளக்கம்!

Web Desk by Web Desk
Feb 5, 2024, 11:06 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

பெரும்பாலான இந்துக்கள் ஆர்எஸ்எஸ் அமைப்பில் சேர்ந்திருக்க மாட்டார்கள், சங்கத்தின் சித்தாந்தத்தை விரும்பும், ஆனால் இன்னும் சேராத பலரை கொண்டு வருவதே அடுத்த சவால் என ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத் தெரிவித்துள்ளார்.

பெங்களூரில் உள்ள சன்ஸ்கார் பாரதியின் கர்நாடக பிரிவின் கீழ் ஏற்பாடு  செய்யப்பட்ட அகில பாரதிய கலாசதக் சங்கத்தில் நடைபெற்ற பாராட்டு விழாவில் ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத் பங்கேற்று உரையாற்றினார்.

அப்போது, 1925ல் ஆர்எஸ்எஸ் உருவானபோது, உண்மையான நிகழ்ச்சி நிரல் என்னவென்று யாருக்கும் தெரியாது. ஆர்எஸ்எஸ் இந்துக்களை ஒரே கூரையின் கீழ் இணைக்கும் நோக்கத்துடன் உருவாக்கப்பட்டது என்று அனைவருக்கும் கூறப்பட்டது. நாங்கள் போதுமான பலம் பெற்ற பிறகுதான் ராமஜென்மபூமி போன்ற பிரச்சினைகள் வெளிப்பட்டன என அவர் தெரிவித்தார்.

ஆர்எஸ்எஸ் இந்த விவகாரங்களை ஆரம்பத்தில் வெளிப்படுத்தியிருந்தால், வலதுசாரி அமைப்பு இதுவரை செய்ததை சாதித்திருக்க முடியாது என்றார் பகவத். ஜெய் ஸ்ரீ ராம், வந்தே மாதரம் மற்றும் பாரத் மாதா கி ஜெய் என்று உரத்த கோஷங்களை எழுப்பிய அவர், பெரும்பாலான இந்துக்கள் ஆர்எஸ்எஸ்ஸில் சேர்ந்திருக்க மாட்டார்கள். ங்கத்தின் சித்தாந்தத்தை விரும்பும், ஆனால் இன்னும் சேராத பலரை கொண்டு வருவதே அடுத்த சவால் என்றும் அவர் கூறினார்.

தற்போது கலை விமர்சனம் என்பது சமூகங்களைப் பிளவுபடுத்துவதிலும் பாதுகாப்பற்ற சமூகங்களை உருவாக்குவதிலும் நம்பிக்கை கொண்ட ஒரு சிலரின் வலுவான செல்வாக்கின் கீழ் உள்ளது, இது உலகளவில் நாடுகள் பிளவுபடுவதற்கு உதவுகிறது. இது உலகளாவிய நிகழ்வு. இதனை உடைத்து, கலையின் உண்மை மற்றும் ‘தெய்வீகத்தை ஒன்றிணைப்பதன் மூலம் சமூகங்கள் ஒன்றிணைவதை உறுதி செய்ய முடியும் என்றும் அவர் விளக்கினார்.

நாட்டில் பசுவதைக்கு முழுமையான தடையை ஆர்எஸ்எஸ்ஸால் நிறைவேற்ற முடியவில்லை என்றும் மோகன் பகவத் வேதனை தெரிவித்தார். சன்ஸ்கர் பாரதி என்பது ஆர்எஸ்எஸ்ஸின் கலாச்சாரப் பிரிவாகும், மேலும் இந்திய கலை, நுண்கலைகள் போன்றவற்றை மேம்படுத்துவதற்காக செயல்படுகிறது.

Tags: RSSbangaloreMohan bagawatSangh ideologySangh Parivar
ShareTweetSendShare
Previous Post

அந்தமானில் நிலநடுக்கம்: ரிக்டர் அளவுகோலில் 4.4 ஆக பதிவு!

Next Post

”உலகளாவிய பயங்கரவாதத்தை பிராந்திய மற்றும் சர்வதேச அளவில் எதிர்த்தல்” – நாடாளுமன்றக் குழு ராஜ்யசபாவில் அறிக்கை

Related News

பிரதமர் மோடியின் புதிய பாணி : எதிரி நாடுகளை அடிபணிய வைக்கும் அதிசயம்!

நாடாளுமன்றம் முடக்கம் – 2 நாளில் ரூ.25 கோடி வீண் – மக்கள் பணத்தை வீணடிக்கும் எதிர்க்கட்சிகள்!

ஏழ்மையை பயன்படுத்தி சிறுநீரகங்கள் திருட்டு: திமுக எம்எல்ஏ.,விற்கு தொடர்பா?

50 பேருடன் மாயமான ரஷ்ய விமானம் : உடைந்த பாகங்கள் மீட்பு – பயணிகள் நிலை என்ன?

மோசடியில் புது ரூட் : போலி தூதரகம் தொடங்கி பணம் சுருட்டிய கில்லாடி!

கங்கை கொண்ட சோழபுரம் கோயில் : சோழர்கள் கட்டடக்கலைக்கு வரலாற்று சான்று!

Load More

அண்மைச் செய்திகள்

ரூ.96 கோடி அம்போ… : ரவுடிகளின் ராஜ்ஜியமான ஈரடுக்கு பேருந்து நிலையம்!

வலிமையான பாஸ்போர்ட் பட்டியல் : உலகளவில் 77வது இடத்திற்கு இந்தியா முன்னேற்றம்!

ஏவுகணைத் திட்டம் டமால் : மீண்டும் மண்ணை கவ்விய பாகிஸ்தானின் ஷாஹீன்-3!

தமிழக பெண்கள் திமுக அரசின் மீது கடும் அதிருப்தியில் இருக்கிறார்கள் : அண்ணாமலை

கழிவறையில் ரேஷன் கடையின் அரிசி மூட்டைகள் : திமுக அரசுக்கு நயினார் நாகேந்திரன் கண்டனம்!

எடப்பாடி பழனிசாமிக்கு இந்து முன்னணி கண்டனம்!

முதலமைச்சர் ஸ்டாலின் நலமுடன் உள்ளார் – மருத்துவமனை நிர்வாகம் அறிக்கை!

இரண்டு குழந்தைகளை கொன்ற அபிராமிக்கு சாகும் வரை ஆயுள் தண்டனை!

திமுக  ஆட்சியில் உடனடி சிகிச்சை என்பது ஏழை எளியோருக்கு எட்டாக்கனியாகவே இருக்கிறது : அண்ணாமலை குற்றச்சாட்டு!

மீன்பிடி தடை கால நிவாரணம் உயர்த்தி வழங்கப்படும் – எடப்பாடி பழனிசாமி

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies