சனாதன தர்மத்தை இழிப்படுத்தும் தி.மு.க.வுக்கு நாடாளுமன்ற தேர்தலில் மக்கள் பதிலடி கொடுப்பார்கள்! - அண்ணாமலை
Jul 29, 2025, 07:35 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

சனாதன தர்மத்தை இழிப்படுத்தும் தி.மு.க.வுக்கு நாடாளுமன்ற தேர்தலில் மக்கள் பதிலடி கொடுப்பார்கள்! – அண்ணாமலை

Web Desk by Web Desk
Feb 5, 2024, 03:42 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

தமிழகத்தின் நிலைமை ஊழல் ஆட்சி, சாதி ஆட்சி குடும்ப ஆட்சி, அடாவடிதனம் திராவிட அரசியல் இது போன்று தமிழக மக்கள் மீது திமுக சுமையாக பாரமாக ஏற்றி வைத்து இருக்கின்றனர் தமிழக மக்கள் விரத்தியின் விழும்பில் இருக்கின்றார்கள்  எனத் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

சென்னை, அமைந்தகரையில் உள்ள தனியார் மண்டபத்தில் அமைக்கப்பட்டுள்ள நாடாளுமன்றத் தேர்தலுக்கான பாஜக தலைமைத் தேர்தல் அலுவலகத்தை பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை திறந்து வைத்தார்.

தமிழக பாஜக தேர்தல் பொறுப்பாளர்கள் அரவிந்த் மேனன், சுதாகர் ரெட்டி, தேசிய மகளிர் அணி தலைவி வானதி சீனிவாசன்,பாஜக சட்டமன்றக் குழுத் தலைவர் நயினார் நாகேந்திரன், முன்னாள் தேசிய செயலாளர் எச்.ராஜா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

தொடர்ந்து பா.ஜ.க. தேர்தல் ஆலோசனை கூட்டத்தில் மாநில தேர்தல் இணை பொறுப்பாளர் சுதாகர் ரெட்டி மேடையில் பேசுகையில்,

இம்முறை‌ பா.ஜ.க. நிச்சயமாக 400-க்கும் அதிகமான தொகுதிகளில் வெற்றி‌ பெறும்.

தமிழகத்தில் ஊழல் மிகுந்த தி.மு.க.‌ நிச்சயமாக அகற்றப்படும்.  காங்கிரஸ் மற்றும் தி.மு.க.‌ நிர்வாகிகள் பலரும் சிறையில் உள்ளனர்.‌ பா.ஜ.க. 400-க்கும் அதிகமாக தொகுதியில் வெற்றி பெறும் என சொன்ன காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன‌ கார்கேவுக்கு நன்றி. அண்ணாமலை வந்த பிறகு தமிழகம் முழுவதும் வாங்க மோடி, வணக்கம் மோடி என்ற‌ கோஷம் அதிகரித்துள்ளது.

தமிழகம் முழுவதும் தாமரை மலரும் சனாதன தர்மத்தை இழிப்படுத்தும் தி.மு.க.வுக்கு இம்முறை‌ நாடாளுமன்ற தேர்தலில் மக்கள் பதிலடி கொடுப்பார்கள் எனத் தெரிவித்தார்.

மேடையில் பேசிய தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை,

பாராளுமன்ற தேர்தலுக்கு ஆவலோடு காத்திருக்கிறோம். மாற்றம் வரவேண்டும் என மக்கள் மற்றும் தொண்டர்கள் அனைவரும் காத்து கொண்டிருப்பது தெரிகிறது. ஏப்ரல் மாதத்தில் தேர்தல் வரலாம் எனவே நமக்கு காலம் குறைவாக உள்ளது. மிக கடுமையான உழைப்பை இந்த பாராளுமன்ற தேர்தலுக்கு போட்டு தயாராக இருக்கிறோம்.

மக்கள் பிரச்சினைகளுக்காக மாநில அரசை எதிர்த்து நாம் நடத்திய பல போராட்டத்திற்காக நம் தொண்டர்கள் பலர் கைது செய்யப்பட்டு இருக்கிறார்கள். தொடர்ந்து பல்வேறு நிகழ்ச்சிகளை நாம் நடத்திக் கொண்டே இருக்கிறோம். சேவை செய்வது தான் நமது கட்சியின் அடித்தளம் என்பதால் தொடர்ந்து சேவை செய்து கொண்டே இருக்கிறோம்.

2024 பாராளுமன்றத் தேர்தலை பொருத்தவரை நாமும் தயாராக இருக்கிறோம், மக்களும் தயாராக இருக்கிறார்கள். தமிழக அரசியல் வரலாற்றில் இன்று பாஜக 183 தொகுதிகளுக்கு சென்று மக்களை நேரடியாக பார்த்து உள்ளது. எந்த கட்சியும் இதுபோன்று செய்தது இல்லை. என் மண் என் மக்கள் யாத்திரையில் பலதரப்பு மக்களை சந்தித்துள்ளோம்.  200வது தொகுதி சென்னையில் 11 ஆம் தேதி நடைபெறும்.

யாத்திரையில் காலையிலிருந்து இரவு வரை பலதரப்பபட்ட மக்களை சந்தித்து கொண்டு இருக்கிறோம். 2024 -இல் தமிழ்நாட்டில் ஒரு அரசியல் புரட்சி ஏற்படப்போகிறது.

ஒட்டகத்தின் முதுகில் சுமை ஏற ஏற ஓரளவு தாங்கும், ஒரு கட்டத்திற்கு பிறகு தாங்காது. தமிழகத்தின் நிலைமை ஊழல் ஆட்சி, சாதி ஆட்சி குடும்ப ஆட்சி, அடாவடிதனம் திராவிட அரசியல் இது போன்று தமிழக மக்கள் மீது சுமையாக பாரமாக ஏற்றி வைத்து இருக்கின்றனர்.

தமிழக மக்கள் விரத்தியின் விழும்பில் இருக்கின்றார்கள். எங்கே பார்த்தாலும் லஞ்சம் ஊழல் இருக்கும் பொழுது தங்களுடைய குறைகளை மக்கள் யாரிடம் கொண்டு செல்வார்கள்.

பத்து ஆண்டுக்கு பிறகு மூன்றாவது முறையாக ஆட்சிக்கட்டலில் அமரக்கூடிய தகுதி உடையவர் பிரதமர் மோடி என மக்களுக்கு நன்றாக தெரியும் எனத் தெரிவித்தார்.

Tags: bjp k annamalai
ShareTweetSendShare
Previous Post

நம்பிக்கை வாக்கெடுப்பில் வெற்றி : தப்பியது சம்பாய் சோரன் அரசு!

Next Post

2026 பிஃபா உலகக்கோப்பை: இறுதிப்போட்டி எங்கு தெரியுமா?

Related News

காடுகளின் காவலன் – சர்வதேச புலிகள் தினம்!

வரும் 1ம் தேதி முதல் மாநிலம் தழுவிய வேலை நிறுத்தம் : சிலிண்டர் லாரி உரிமையாளர் சங்கத்தினர் அறிவிப்பு!

சிவ பக்தராக மாறிய ஜப்பான் தொழிலதிபர் : உத்தரகாண்டில் ஆசிரமம், கோயில் கட்ட திட்டம்!

ஆர்வம் காட்டும் இளைஞர்கள் : தேசிய கொடி பொறித்த பொருட்கள் விற்பனை “ஜோர்”!

இண்டி கூட்டணியினர் மலினமான செயலில் ஈடுபடுவதை கைவிட வேண்டும் : நயினார் நாகேந்திரன்

ஆப்ரேஷன் சிந்தூரை போன்று ஆப்ரேஷன் மகாதேவும் முழு வெற்றி : அமித்ஷா பெருமிதம்!

Load More

அண்மைச் செய்திகள்

முன்பதிவு செய்யப்படாத ரயில் பெட்டிகளில் 2,187 கோடி முறை பயணம் : அஷ்வினி வைஷ்ணவ்

அஜித் குமார் வழக்கு – நீதிமன்றத்தில் சிபிஐ மனு!

திமுக ஆட்சியில் பெண்கள் வெளியில் நடமாடுவதற்கே அஞ்சுகிறார்கள் : நயினார் நாகேந்திரன்

கிங்டம் திரைப்படம் ரஜினியின் படங்கள் போல இருக்கும் : விஜய் தேவரகொண்டா

பயோமெட்ரிக் மூலம் பணப்பரிவர்த்தனை – விரைவில் அமல்!

மதுரை மாநகராட்சியின் 41-ஆவது மாமன்ற கூட்டம் : எம்.பி சு.வெங்கடேசனின் கருத்துக்கு திமுகவினர் எதிர்ப்பு!

பிரளய் ரக ஏவுகணையை வெற்றிகரமாக பரிசோதித்தது இந்தியா!

செந்தில் பாலாஜியை தவிர லஞ்சம் பெற்ற இடைத்தரகர்கள், அதிகாரிகள் யார் யார்? – உச்சநீதிமன்றம் சரமாரியாக கேள்வி!

சென்னை : வாகன சோதனையின் போது அரிவாளுடன் சிக்கிய இளைஞர்!

பொள்ளாச்சியில் 9ஆம் வகுப்பு மாணவிக்கு பாலியல் துன்புறுத்தல் : பேக்கரி கடை உரிமையாளரை கட்டி வைத்து தாக்கிய உறவினர்கள்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies