தேர்தலில் போட்டியிடும் சக்தியை எதிர்க்கட்சிகள் இழந்துவிட்டதாகவும், இனி வெற்றி பெற வாய்ப்பில்லை எனவும் பிரதமர் நரேந்திர மோடி காங்கிரஸை விமர்சித்துள்ளார். காங்கிரஸ் எதிர்க்கட்சியில் அமர முடிவு செய்துள்ளதாகவும், மக்கள் விருப்பத்தை நிறைவேற்றுவார்கள் என்றும் பிரதமர் மோடி எதிர்க்கட்சிகளை கிண்டல் செய்தார். நீண்ட காலம் எதிர்க்கட்சியாக இருக்க வேண்டும் என்ற எதிர்க்கட்சிகளின் உறுதியை நான் பாராட்டுகிறேன் எனத் தெரிவித்தார்.
நடப்பாண்டின் முதல் கூட்டத்தொடர் என்பதால், குடியரசுத் தலைவர் உரையுடன் பட்ஜெட் கூட்டத்தொடர் கடந்த ஜனவரி மாதம் 31ஆம் தேதி தொடங்கியது. இந்தக் கூட்டத்தொடர் வருகிற 9ஆம் தேதி நிறைவடையவுள்ளது. மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், இடைக்கால பட்ஜெட்டை கடந்த பிப்ரவரி 1-ஆம் தேதி தாக்கல் செய்தார்.
அதன் மீது இரு அவைகளிலும் விவாதம் நடந்த நிலையில், குடியரசுத் தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது பதிலளித்து பிரதமர் மோடி இன்று மாலை பேசினார்.
அப்போது உரையாற்றிய பிரதமர் நரேந்திர மோடி,
மதத்தின் அடிப்படையில் நாட்டை பிளவுபடுத்துவதை எதிர்க்கட்சிகள் நிறுத்த வேண்டும். சிறுபான்மையினர் எனக் கூறியும் எதிர்க்கட்சிகள் நாட்டை பிளவுபடுத்துகின்றன.
நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சி நீண்ட நாள்களாகவே எதிர்க்கட்சி வரிசையிலேயே
உள்ளது.
எதிர்க்கட்சித் தலைவர்கள் எப்போதுமே இனி எதிர்க்கட்சி வரிசையில்தான்
இருப்பார்கள். ஓர் எதிர்க்கட்சியாகவும் நாட்டு மக்களை காங்கிரஸ்
திருப்திப்படுத்தவில்லை.
காங்கிரஸ் எதிர்க்கட்சியில் அமர முடிவு செய்துள்ளதாகவும், மக்கள் விருப்பத்தை நிறைவேற்றுவார்கள் என்றும் எதிர்க்கட்சிகளை அவர் கிண்டல் செய்தார். நீண்ட காலம் எதிர்க்கட்சியாக இருக்க வேண்டும் என்ற எதிர்க்கட்சிகளின் உறுதியை நான் பாராட்டுகிறேன் எனத் தெரிவித்தார்.
தேர்தலில் போட்டியிடும் சக்தியை எதிர்க்கட்சிகள் இழந்துவிட்டதாகவும், இனி வெற்றி பெற வாய்ப்பில்லை.
நாட்டிற்கு எப்போதுமே ஒரு ஆரோக்கியமான எதிர்க்கட்சி அவசியம் என்று எப்போதுமே
நான் சொல்வதுண்டு. பலருக்கு தேர்தலில் போட்டியிடும் தகுதியே இல்லை.
சில தொகுதிகளில் பல அதிரடி மாற்றங்களை எதிர்க்கட்சி செய்தது. இந்த முறையும்
போட்டியிடும் தொகுதிகள் மாறலாம். மக்களவைக்கு வருவதற்கு பதிலாக பலர்
மாநிலங்களவைக்கு செல்லவே விரும்புகின்றனர். காங்கிரஸ் கட்சியின் செயல்பாடுகளால் நாட்டிற்கே பெரும் இழப்பு ஏற்பட்டுள்ளது எனக் குறிப்பிட்டார்.
நாடாளுமன்ற தேர்தலில் பாஜக மட்டும் 370 தொகுதிகளுக்கு மேல் போட்டியிட்டு வெற்றி
பெறும். பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டனி 400 தொகுதிகளுக்கு மேல்
மக்களவைத் தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சி அமைக்கும்.
காங்கிரஸுக்கு இறுதிக்காலம் நெருங்கிவிட்டது. பாஜக மீண்டும் ஆட்சியமைத்து 1000
ஆண்டுகளுக்கான திட்டங்களுக்கு அடித்தளம் அமைக்கும்.
தேவையான வாய்ப்புகள், தொழிலுக்கான வழிவகையை செய்துகொடுத்தாலே நாட்டில் ஏழ்மை ஒழிந்துவிடும். சாலையோர வியாபாரிகள், கைவினை கலைஞர்களுக்கு சிறப்புத் திட்டங்கள் அமல்படுத்தப்பட்டுள்ளன.
காங்கிரஸ் கட்சி ஒரே குடும்பத்தை நம்பியுள்ளது. காங்கிரஸ் கட்சியின் மந்தகரமான
வேகத்துடன் நாங்கள் போட்டியிடுவதில்லை. பாஜக ஆட்சியில் 17 கோடி மக்களுக்கு சமையல் எரிவாயு கொடுக்கப்பட்டுள்ளது. கிராமப்புற மக்களுக்கு 4.8 இணைப்பு கோடி வீடுகள் கட்டிக்கொடுக்கப்பட்டுள்ளன.
நாங்கள் பேசுவது எங்கள் சாதனையைப் பற்றி அல்ல; நாட்டின் வளர்ச்சி மற்றும் சாதனையைப் பற்றி பேசுகிறோம். பாஜக அரசு பெரிய குறிக்கோளுடன் கடுமையாக உழைத்து வருகிறது.
அனைத்து துறைகளிலும் பெண்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டு வருகிறது.
குடும்பங்களிலும் பெண்களுக்கு முக்கியத்துவம் அதிகரித்து வருகிறது. பாஜக அரசு
ஆட்சி அமைத்தபிறகு 3 கோடி பெண்கள் பொருளாதார ரீதியாக உயர்வடைந்துள்ளனர்.
தேசிய ஆலோசனைக் குழுவில் காங்கிரஸ் ஆட்சியில் எத்தனை பேர் ஓபிசி பிரிவில்
இடம்பெற்றிருந்தனர் எனக் கேள்வி எழுப்பினார்.
காங்கிரஸ் இறுதிக்காலம் நெருங்கிவிட்டதாகவும், கூட்டணி கட்சிகளுக்கே காங்கிரஸ் மீது நம்பிக்கையில்லை எனவும் விமர்சித்தார்.
ஒரே குடும்பத்தைச் சேர்ந்தோர் அரசியலுக்கு வரலாம்; ஒரே குடும்பம் ஆட்சி நடத்துவதுதான் குடும்ப அரசியல். ஒருசிலரின் முகத்தை முன்னிலைப்படுத்த மீண்டும் மீண்டும் முயற்சிக்கிறது காங்கிரஸ்.
ஒருசிலரின் முக்கியத்துவம் குறைந்துவிடக்கூடாது என்பதற்காக இளைஞர்களுக்கு அரசியலில் வாய்ப்பு மறுக்கப்படுகிறது.
எதிர்க்கட்சி கூட்டணியில் ஒருவர்மீது ஒருவருக்கே நம்பிக்கையில்லை. கூட்டணி கட்சிகளுக்கே காங்கிரஸ் தலைமையின் மீது நம்பிக்கையில்லை.
மக்களவைத் தேர்தலுக்கான காங்கிரஸ் கட்சியின் வியூகம் சிதறிவிட்டது. காங்கிரஸ் கட்சி தனது இறுதிக்கட்டத்தில் உள்ளது என தெரிவித்தார்.