இந்தியாவில் நடைபெற்று வரும் புரோ கபடி தொடரில் நேற்றையப் போட்டியில் புனேரி பல்டன் – தபாங் டெல்லி 30-30 என்ற புள்ளிகளை பெற்றதால் போட்டி சமனில் முடிந்தது.
இந்தியாவில் உள்ள மாநிலங்களுக்கிடையே நடைபெறும் கபடி லீக் தொடரில் மொத்தம் 12 அணிகள் பங்குபெற்று விளையாடி வருகின்றன.
இதில் பெங்கால் வாரியர்ஸ், பெங்களூரு புல்ஸ், தபாங் டெல்லி கே.சி, குஜராத் ஜெயண்ட்ஸ், ஹரியானா ஸ்டீலர்ஸ், ஜெய்ப்பூர் பிங்க் பாந்தர்ஸ், பாட்னா பைரேட்ஸ், புனேரி பல்டன், தமிழ் தலைவாஸ், தெலுங்கு டைட்டன்ஸ், யு மும்பா மற்றும் உ.பி. யோதாஸ் ஆகிய அணிகள் பங்குபெற்றுள்ளன.
இந்நிலையில் நேற்று இரண்டு போட்டிகள் நடைபெற்றது . முதல் போட்டி டெல்லியில் இரவு 8 மணிக்கு நடைபெற்றது. இந்தப் போட்டியில் ஜெய்ப்பூர் பிங்க் பாந்தர்ஸ் – பாட்னா பைரேட்ஸ் அணிகள் விளையாடின.
விறுவிறுப்பாக நடைபெற்ற இந்தப் போட்டியில் பாட்னா பைரேட்ஸ் அணி 36-33 என்ற கணக்கில் ஜெய்ப்பூர் பிங்க் பாந்தர்ஸ் அணியை வீழ்த்தி வெற்றி பெற்றது.
இதைத் தொடர்ந்து நேற்று நடைபெற்ற மற்றொருப் போட்டியில் புனேரி பல்டன் – தபாங் டெல்லி அணிகள் பங்குபெற்றன.
விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த ஆட்டத்தில் இரு அணிகளும் மாறி மாறி புள்ளிகளை குவித்தன. இறுதியில் இந்த ஆட்டம் 30-30 என்ற புள்ளிக்கணக்கில் சமனில் முடிந்தது.