தேர்வில் மோசடி செய்வோருக்கு 10 ஆண்டுகள் வரை சிறை, ரூ.1 கோடி அபராதம்!
Sep 1, 2025, 02:59 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

தேர்வில் மோசடி செய்வோருக்கு 10 ஆண்டுகள் வரை சிறை, ரூ.1 கோடி அபராதம்!

Web Desk by Web Desk
Feb 6, 2024, 05:56 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

யுபிஎஸ்சி, எஸ்எஸ்சி, ரயில்வே உள்ளிட்ட அரசு பொதுத் தேர்வுகளின் வினாத் தாள்களை கசிய விடுவோருக்கும் ஆள் மாறாட்டம் உள்ளிட்ட மோசடிகளில் ஈடுபடுவோருக்கும் 10 ஆண்டுகள் வரை சிறை, ரூ.1 கோடி அபராதம் விதிக்க மத்திய அரசு திட்டமிட்டு வருகிறது.

பாராளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் கடந்த 31 ஆம் தேதி தொடங்கியது. கடந்த 1 ஆம் தேதி இடைக்கால பட்ஜெட்டை மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்தார்.

அதன் பிறகு பட்ஜெட் கூட்டத் தொடர் நடைபெற்றது. நேற்று காலை பாராளுமன்றம் கூடியது. கூட்டம் தொடங்கியதும் பல்வேறு மசோதாக்கள் தாக்கல் செய்யப்பட்டன.

இதில் பொதுத்தேர்வு மற்றும் நுழைவு தேர்வுகளில் முறைகேடு செய்வோருக்கு ஜெயில் தண்டனை மற்றும் அபராதம் விதிக்கும் புதிய மசோதா தாக்கல் செய்யப்பட்டது. இந்த மசோதாவை மத்திய மந்திரி ஜிதேந்திர சிங் தாக்கல் செய்தார்.

யுபிஎஸ்சி, எஸ்எஸ்சி, ரயில்வே உள்ளிட்ட அரசு பொதுத் தேர்வுகளின் வினாத் தாள்களை கசிய விடுவோருக்கும் ஆள் மாறாட்டம் உள்ளிட்ட மோசடிகளில் ஈடுபடுவோருக்கும் 10 ஆண்டுகள் வரை சிறை, ரூ.1 கோடி அபராதம் விதிக்க மத்திய அரசு திட்டமிட்டு வருகிறது.

இதற்கு பொதுத் தேர்வுகள் (நியாயமற்ற வழிமுறைகளைத் தடுத்தல்) மசோதா -The Public Examinations (Prevention of Unfair Means) Bill, 2024 என்று பெயரிடப்பட்டுள்ளது.

ஆண்டுதோறும் மத்திய அரசு சார்பில், மருத்துவ நுழைவுத் தேர்வான நீட், பொறியியல் நுழைவுத் தேர்வான ஜேஇஇ, கலை, அறிவியல் கல்லூரிகளுக்கு நடத்தப்படும் க்யூட் தேர்வு, ஐஏஎஸ், ஐபிஎஸ் உள்ளிட்ட தேர்வுகளுக்கான மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் (யுபிஎஸ்சி) தேர்வுகள், எஸ்எஸ்சி, ரயில்வே பணிகள் உள்ளிட்டவற்றுக்காக பல்வேறு நுழைவுத் தேர்வுகள் நடைபெற்று வருகின்றன.

இதற்கிடையில், இந்தப் படிப்புகளுக்கான நுழைவுத் தேர்வுகளின் வினாத்தாள்கள் கசிந்து பிரச்சினைகளை ஏற்படுத்துகின்றன. வட மாநிலங்களில் இந்த சம்பவங்கள் அதிகமாக நடைபெறுகின்றன. இதனால் தகுதியான மாணவர்களின் எதிர்காலம் பாதிக்கப்படுவதாகக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

இதனால் தேர்வு வினாத் தாள்களை வேண்டுமென்றே கசிய விடும் நபருக்கு 10 ஆண்டுகள் வரை சிறை மற்றும் ரூ.1 கோடி வரை அபராதம் விதிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. நீட், ஜேஇஇ, க்யூட், யுபிஎஸ்சி, எஸ்எஸ்சி, ரயில்வே தேர்வுகள், தேர்வுகள் என அனைத்துத் தேர்வுகளுக்கும் இது அமல்படுத்தப்படும் என்று கூறப்படுகிறது.

இதன்படி தேர்வு வினாத்தாளை கசியவிடும் குற்றத்தைச் செய்யும் நபர்களுக்கு 3 ஆண்டு முதல் 5 ஆண்டு வரை சிறைத் தண்டனை விதிக்கப்படும். மேலும், திட்டமிட்ட குற்றங்களுக்கு 5 முதல் 10 ஆண்டு வரையும், ரூ.1 கோடி வரை அபராதமும் விதிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த மசோதா அமல்படுத்தப்பட்டு சட்டமானால், முறைகேடுகள் பெருமளவில் குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Tags: examupsc examrailway exam
ShareTweetSendShare
Previous Post

கர்நாடகாவில் 61 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி: ஒருவர் உயிரிழப்பு!

Next Post

மர்ம நபரால் கடத்தப்பட்ட கிரிக்கெட் வீரர்!

Related News

மீண்டும் கைகோர்த்த இந்தியா – சீனா : அமெரிக்காவுக்கு சொல்லும் சேதி என்ன?

கோவை : தமிழ் ஜனம் செய்தி எதிரொலி – ஆழியார் அணை காட்சி முனையம்!

கரூர் : மூளைச்சாவு அடைந்த சிறுமியின் உடல் உறுப்புகள் தானம்!

டெல்லி : வீட்டு வாசலில் அமர்ந்திருந்த இளைஞர் மீது போலீசார் தாக்குதல்!

கிட்னி மோசடி வழக்கு : சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு விளக்கம்!

உத்தரப் பிரதேசம் : அதிவேகமாக சென்று அடுத்தடுத்து விபத்தை ஏற்படுத்திய லாரி!

Load More

அண்மைச் செய்திகள்

திருப்பத்தூர் : மதுபோதையில் தனியார் பேருந்து ஓட்டுநரை தாக்கிய 6 இளைஞர்கள் கைது!

தமிழக இளைஞர்களின் அரசுப் பணி கனவை திமுக சிதைந்து கொண்டிருக்கிறது : அண்ணாமலை

சோதனை என்ற பெயரிடில தமிழக அரசு (GST) அதிகாரிகள் தொழிலை நசுக்குகின்றனர் – ஈரோடு வணிகர் சங்க கூட்டமைப்பு குற்றச்சாட்டு!

உத்தர பிரதேசம் : அதிவேகமாக சென்ற கார் சைக்கிள் மீது மோதி விபத்து!

வேலூர் : பேருந்தில் பயணித்த இளைஞர் நெஞ்சுவலி ஏற்பட்டு உயிரிழப்பு!

தமிழகத்தில் 1.30 கோடி இளைஞர்கள் வேலை வாய்ப்பின்றி உள்ளனர் – அன்புமணி

ஷாங்காய் உச்சி மாநாட்டில் தனித்து விடப்பட்ட பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப்!

சேலம் : இடைவிடாது 2 மணி நேரம் சிலம்பம் சுற்றிய 250 பள்ளி மாணவர்கள்!

கன்னியாகுமரி : மதுபோதையில் ரகளையில் ஈடுபட்ட இளைஞரால் போக்குவரத்து பாதிப்பு!

மத்திய பிரதேசம் : குடியிருப்பு பகுதிக்குள் புகுந்த முதலை – மக்கள் அச்சம்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies