மத்திய ஆயுதப் படைகள் மற்றும் அசாம் ரைபிள்ஸ் ஆகியவற்றில், 41 ஆயிரத்து 606 பெண்கள் பணியாற்றி வருவதாக மத்திய உள்துறை இணையமைச்சர் நித்யானந்த் ராய் தெரிவித்துள்ளார்.
மத்திய ஆயுத காவல் படை மற்றும் ஆயுதப்படை ஆகியவற்றில் பெண் பணியாளர்களை பணியமர்த்துவதை ஊக்குவிக்க மத்திய அரசு எடுத்த நடவடிக்கைகள் குறித்து பார்ப்போம்.
பத்திரிக்கை மற்றும் மின்னணு ஊடகங்கள் மூலம் விளம்பரம் செய்யப்பட்டு, ஆட்சேர்ப்பு நடத்தப்படுகிறது. அனைத்து பெண் விண்ணப்பதாரர்களுக்கும் விண்ணப்பக் கட்டணம் செலுத்துவதில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.
மத்திய ஆயுத காவல்படைகளில் ஆட்சேர்ப்பின் போது பெண் விண்ணப்பதாரர்களுக்கு, உடற்தகுதித் தேர்வு மற்றும் உடல் திறன் தேர்வு ஆகியவற்றில் ஆண்களுடன் ஒப்பிடும்போது, சில தளர்வுகள் உள்ளன.
மத்திய அரசின் கீழ், ஏற்கனவே உள்ள மகப்பேறு விடுப்பு, குழந்தை பராமரிப்பு விடுப்பு போன்ற வசதிகள், மத்திய ஆயுத காவல் படையின் பெண் பணியாளர்களுக்கும் பொருந்தும்.
மத்திய ஆயுதக் காவல் படையில் பணிபுரியும் மகளிர் பணியாளர்களுக்கு குழந்தைகள் காப்பகங்கள் மற்றும் பகல் நேரப் பராமரிப்பு மைய வசதிகள் செயல்படுத்தப்படுகின்றன.
பெண் பணியாளர்கள் மீதான பாலியல் துன்புறுத்தல்களைத் தடுக்கவும், புகார்களை விரைந்து விசாரிக்கவும் அனைத்து மட்டங்களிலும் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன.
ஆண் பணியாளர்களுக்கு இணையாக பெண் பணியாளர்களுக்கு அவர்களின் முன்னேற்றத்தில் சம வாய்ப்பு வழங்கப்படுகிறது.
மக்களவையில் கேள்வி ஒன்றுக்கு எழுத்து மூலம் அளித்த பதிலில், உள்துறை இணையமைச்சர் நித்யானந்த் ராய் இதனைத் தெரிவித்தார்.