மகளிர் பிரீமியர் லீக் தொடரில் குஜராத் அணியின் தலைமை பயிற்சியாளராக மைக்கேல் கிளிங்கர் நியமிக்கப்பட்டுள்ளார்.
ஐபிஎல் போன்று பெண்களுக்காக மகளிர் பிரீமியர் லீக் ( WPL ) கடந்த ஆண்டு தொடங்கப்பட்டது. இதில் 5 அணிகள் விளையாடின.
இதில் மும்பை இந்தியன்ஸ், டெல்லி கேப்பிடல்ஸ், உ.பி. வாரியர்ஸ், குஜராத் ஜெயன்ட்ஸ், பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் ஆகிய 5 அணிகள் பங்கேற்றன.
முதலாவது டபிள்யூ.பி.எல். கிரிக்கெட் போட்டியில் ஹர்மன்பிரீத் கவுர் தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணி சாம்பியன் கோப்பையை வென்றது.
இந்நிலையில் இந்த ஆண்டுக்கான டபிள்யூ.பி.எல். கிரிக்கெட் தொடர் வரும் 23 ஆம் தேதி தொடங்க உள்ளதாகவும், இந்த முறை தொடர் பெங்களூரு மற்றும் டெல்லியில் நடைபெற உள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.
போட்டி அட்டவணைப்படி இந்த தொடர் பிப்ரவரி 23 ஆம் தேதி முதல் மார்ச் 17 ஆம் தேதி வரை தொடர் நடைபெறவுள்ளது.
மார்ச் 15 ஆம் தேதி எலிமினேட்டர் போட்டியும், மார்ச் 17 ஆம் தேதி இறுதிப்போட்டியும் நடைபெறவுள்ளது. எலிமினேட்டர் மற்றும் இறுதிப்போட்டிகள் டெல்லியில் நடைபெறும் என தகவல் வெளியாகி உள்ளது.
இந்நிலையில் இந்த சீனில் குஜராத் அணியின் தலைமை பயிற்சியாளராக மைக்கேல் கிளிங்கர் நியமிக்கப்பட்டுள்ளதாக அந்த அணி நிர்வாகம் அறிவித்துள்ளது.