ஹைதராபாத்தில் இன்று காலை முதல் பல்வேறு இடங்களில் தேசிய புலனாய்வு அமைப்பினர் சோதனை நடத்தி வருகின்றனர். மாவோயிஸ்ட்டுடன் தொடர்பு இருப்பதாக கிடைக்கப் பெற்ற தகவலை அடுத்து இந்த சோதனை நடத்தப்படுகிறது.
தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் பல்வேறு முக்கிய இடங்களில் தேசிய புலனாய்வு அமைப்பினர் காலை முதல் சோதனை நடத்தி வருகின்றனர். மாவோயிஸ்ட்டுடன் தொடர்பு இருப்பதாக கிடைக்கப் பெற்ற தகவலையடுத்து, இந்த சோதனை நடத்தப்படுகிறது. வேணுகோபால் என்பவரின் வீட்டில் சோதனை நடந்து வருகிறது.
ஹைதராபாத்தில் உள்ள ஹிமாயத்நகர் மற்றும் எல்பி நகர் ஆகிய இடங்களில் சோதனை நடத்தப்பட்டு வருகிறது. சோதனை குறித்து முழுமையான தகவல் வெளியாகவில்லை.