ரெப்போ விகிதத்தில் மாற்றமில்லை! - ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்திகாந்த தாஸ் அறிவிப்பு
Jun 4, 2025, 06:01 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

ரெப்போ விகிதத்தில் மாற்றமில்லை! – ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்திகாந்த தாஸ் அறிவிப்பு

Web Desk by Web Desk
Feb 8, 2024, 03:43 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

 வங்கிகளின் குறுகிய கால கடனுக்கான ரெப்போ வட்டி விகிதத்தில் மாற்றமில்லை எனவும் முந்தைய அளவான 6.5 சதவீதத்திலேயே தொடரும் என ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்திகாந்த தாஸ் அறிவித்துள்ளார்.

ரெப்போ விகிதம் என்பது வங்கிகளுக்கு ரிசர்வ் வங்கி வழங்கும் கடனுக்கு விதிக்கப்படும் வட்டி விகிதமாகும். ரெப்போ விகிதம் உயரும்போது வீடு மற்றும் வாகனக் கடன்களுக்கான வட்டி விகிதம் அதிகரிக்கும்.

இருமாதங்களுக்கு ஒரு முறை ரிசர்வ் வங்கியின் நிதிக் கொள்கைக் குழு கூடி, ரெப்போ விகிதம் தொடர்பாக முடிவுகள் எடுப்பது வழக்கம். இந்நிலையில், ரிசர்வ் வங்கியின் நிதிக் கொள்கைக் குழு ஆலோசனைக் கூட்டம் இன்று நடைபெற்றது.

இக்கூட்டத்தில், ரெப்போ விகிதத்தில் மாற்றம் எதுவும் மேற்கொள்ளப்படவில்லை. இந்த முடிவுக்கு ஆர்பிஐ நிதிக் கொள்கைக் குழுவின் 6 உறுப்பினர்களில் 5 பேர் சாதமாக ஒப்புதல் அளித்தனர்.

முன்னதாக, கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் முதல் டிசம்பர் வரை 5 முறை ரிசர்வ் வங்கி ரெப்போ விகிதத்தில் மாற்றம் செய்யாமல் அதற்கும் முந்தைய அளவான 6.5 சதவீதத்திலேயே தொடரச் செய்தது.

இந்நிலையில் நடப்பாண்டில் முதல் கூட்டத்திலும் முந்தைய வட்டி விகிதமே நீடிக்கும் எனத் தெரிவித்துள்ளது. பணவீக்கம் 4 சதவீத என்ற இலக்கை ஒட்டியே நிலவுவதாலும், பொருளாதாரம் மீண்டெழுவதாலும் ரெப்போ வட்டி விகிதம் 6.5 சதவீதத்திலேயே தொடரும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

கூட்டத்தில் பேசிய  ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்திகாந்த தாஸ்,

2025 ஆம் நிதியாண்டில் இந்தியாவின் ரியல் ஜிடிபி அளவு 7 சதவீதமாக இருக்கும் என ஆர்பிஐ கணித்துள்ளது. இதில் முதல் காலாண்டில் 7.2 சதவீதமாகவும், 2வது காலாண்டில் 6.8 சதவீதமாகவும், 3வது காலாண்டில் 7 சதவீதமாகவும், 4வது காலாண்டில் 6.9 சதவீதமாகவும் இருக்கும் எனத் தெரிவித்தார்.

ஆர்பிஐ இந்தியாவின் உள்நாட்டு வர்த்தகம் மிகவும் வலிமையாக இருப்பதாகத் தெரிவித்தார். 2024 ஆம் ஆண்டில் இருந்த வர்த்தக நகர்வு மற்றும் டிமாண்ட் 2025 ஆம் ஆண்டிலும் தொடரும் எனத் தெரிவித்தார்.

உலகில் பல நாடுகளில் கடன் அளவு அதிகரித்துள்ளது கவலை அளிக்கும் விஷயமாக உள்ளது, இது சர்வதேச நிதியியல் தளத்தைக் கட்டாயம் பாதிக்கும் எனத் தெரிவித்தார். ரிசர்வ் வங்கி வெள்ளிக்கிழமை வெளியிட்ட அறிக்கையின் படி இந்தியாவின் அந்நியச் செலாவணி கையிருப்பில் குறிப்பிடத்தக்க உயர்வு ஏற்பட்டுள்ளது எனத் தெரிவித்துள்ளது.

ஜனவரி 26 ஆம் தேதியுடன் முடிவடைந்த வாரத்தில் இந்தியாவின் மொத்த அந்நியச் செலாவணி கையிருப்பு 616.73 பில்லியன் டாலர்களை எட்டியுள்ளது. கடந்த இரு வாரத்தில் அந்நியச் செலாவணி கையிருப்பு 591 மில்லியன் டாலர் உயர்ந்துள்ளது.

இந்த வாரம் 616.73 பில்லியன் டாலர் அளவீட்டை பதிவு செய்துள்ளது. இது கடந்த வாரத்திற்கு முன்பு கையிருப்பில் 2.79 பில்லியன் டாலர் குறைந்தது. இதன் விளைவாக ஜனவரி 19, 2024 இல் முடிவடைந்த வாரத்தில் மொத்தம் $618.94 பில்லியன் டாலராக குறைந்தது எனத் தெரிவித்தார்.

Tags: rbigovernerReserve Bank of India
ShareTweetSendShare
Previous Post

தேர்தலை முன்னிட்டு பாகிஸ்தான் எல்லைகள் மூடல்!

Next Post

ஸ்ரீல பிரபுபாதர் வைஷ்ணவத்தையும், பகவான் கிருஷ்ணர் மீதான அன்பையும் உலகம் முழுவதற்கும் எடுத்துச் செல்வதில் முக்கிய பங்காற்றினார்! – பிரதமர் மோடி

Related News

உக்ரைனின் சிலந்தி வலை தாக்குதல் : சிதைக்கப்பட்ட ரஷ்ய போர் விமானங்கள்!

இந்தியா கற்க வேண்டிய பாடம் : போரில் GAME CHANGER- ஆக மாறிய SWARM DRONES!

ஆபரேஷன் சிந்தூர் வெற்றி : சட்டவிரோத குடியேறிய 2000 வங்கதேசத்தினர் வெளியேற்றம்!

ராஜாவாக இருப்பது லாபம் : சொத்துக்களை வாங்கி குவிக்கும் ட்ரம்ப் குடும்பம்!

ஆபரேஷன் சிந்தூர் : கூடுதலாக 8 இடங்களில் தாக்குதல் நடத்தியதாக பாகிஸ்தான் ஆவணத்தில் தகவல்!

சீன போர் விமானங்களுக்கு சவால் : சொந்த தொழில்நுட்பத்தில் சூர்யா ரேடாரை களமிறக்கிய இந்தியா!

Load More

அண்மைச் செய்திகள்

கச்சா எண்ணெய் மீதான வரியைக் குறைத்த மத்திய அரசுக்கு வியாபாரிகள், பொதுமக்கள் நன்றி!

கமல்ஹாசன் பேச்சுக்கு கர்நாடக நீதிமன்றம் அதிருப்தி!

ஆன்லைன் விளையாட்டு : தமிழக அரசின் விதிகள் செல்லும் – சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு!

ஞானசேகரனின் CDR ஆதாரத்தை வெளியிட்ட அண்ணாமலை!

அண்ணா பல்கலைக்கழக பாலியல் வன்கொடுமை : யார் அந்த சார்? – நயினார் நாகேந்திரன் கேள்வி!

திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு பாஜகவினர் போராட்டம்!

தமிழகத்தில் சட்டம், ஒழுங்கு சீர்கேடு : அன்புமணி ராமதாஸ் குற்றச்சாட்டு!

அண்ணா பல்கலை வழக்கை சிபிஐ விசாரித்தால் மட்டுமே உண்மை வெளிவரும் : நயினார் நாகேந்திரன்

நீட் மறுதேர்வு நடத்த முடியாது : மத்திய அரசு

பேராசிரியர்களுக்கு சம்பளம் வழங்காத அலங்கோல ஆட்சி : எடப்பாடி பழனிசாமி

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies