முந்தைய அரசின் பொருளாதார சீர்கேடுகளை சீர்படுத்திய பாஜக : நிர்மலா சீதாராமன்!
Sep 9, 2025, 08:56 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

முந்தைய அரசின் பொருளாதார சீர்கேடுகளை சீர்படுத்திய பாஜக : நிர்மலா சீதாராமன்!

மக்களவையில் வெள்ளை அறிக்கை தாக்கல் செய்தார் மத்திய நிதியமைச்சர்!

Web Desk by Web Desk
Feb 8, 2024, 07:40 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசின் பொருளாதார சீர்கேடுகளை அடுத்து ஆட்சிக்கு வந்த பாஜக கூட்டணி வெற்றிகரமாக முறியடித்ததாக மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றத்தில் பிப்ரவரி 1-ம் தேதி தாக்கல் செய்யப்பட்ட மத்திய  இடைக்கால பட்ஜெட்டில், காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசின் 10 ஆண்டு கால பொருளாதாரச் செயல்பாடுகள் மற்றும் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசின் 10 ஆண்டு கால பொருளாதாரச் செயல்பாடுகளுடன் ஒப்பிட்டு வெள்ளை அறிக்கை வெளியிடப்படும் என்று மத்திய அரசு அறிவித்தது.

இந்நிலையில்  மக்களவையில் இந்தியப் பொருளாதாரம் குறித்த வெள்ளை  அறிக்கையை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று தாக்கல் செய்தார். 2014ஆம் ஆண்டு  பாஜக தலைமையிலான அரசு ஆட்சிக்கு வந்தபோது, பொருளாதாரம்  பலவீனமான நிலையில் இருந்தது. பொது நிதி மோசமான நிலையில் இருந்தது.  பொருளாதார முறைகேடு மற்றும் நிதி ஒழுங்கின்மை இருந்தது. பரவலாக ஊழல் காணப்பட்டது என அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

பொருளாதாரத்தை படிப்படியாக சீர்படுத்தும் பொறுப்பும்,  நிர்வாக அமைப்புகளை சீரமைக்க வேண்டிய பொறுப்பும் மகத்தானது.அப்போது மோசமான நிலை குறித்து வெள்ளை அறிக்கை வெளியிடுவதை நமது அரசு தவிர்த்தது.அது எதிர்மறையான விளைவை கொடுத்து நம்பிக்கையை குலைத்திருக்கும்.

முதலீட்டாளர்கள் உட்பட அனைவருக்கும் நம்பிக்கையை அளிப்பதும், உள்நாட்டு மற்றும் உலகளாவிய முதலீடுகளை ஈர்ப்பதும் மற்றும் மிகவும் தேவையான  சீர்திருத்தங்களுக்கு ஆதரவை உருவாக்குவதும் காலத்தின் தேவையாக இருந்தது என அவர் தெரிவித்துள்ளார்.

தற்போது பொருளாதாரத்தை ஸ்திரப்படுத்தி, அதை வளர்ச்சிப் பாதையில் அமைத்துவிட்டோம்,ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசாங்கத்தால் ஒரு மரபுவழியாக விட்டுச் சென்ற சமாளிக்க முடியாத சவால்களை பொது களத்தில் வைப்பது அவசியம் என அவர் குறிப்பிட்டுள்ளார்

2014க்கு முந்தைய சகாப்தத்தின் ஒவ்வொரு சவால்களும் நமது பொருளாதார  மேலாண்மை மற்றும் நமது நிர்வாகத்தின் மூலம் முறியடிக்கப்பட்டன. இவை நாட்டை நிலையான  உறுதியான பாதையில் கொண்டு சென்றுள்ளன. இது எங்களின் சரியான கொள்கைகள், உண்மையான நோக்கங்கள் மற்றும் சரியான முடிவுகளால் சாத்தியமானது என்றும் வெள்ளை அறிக்கையில் அவர் தெரிவித்துள்ளார்.

Tags: upaIndian EconomyndaWhite Paper tabled in Lok SabhaFinance Minister Nirmala Sitharmancongress economic mismanagement
ShareTweetSendShare
Previous Post

திவாலாகும் நிலையில் கேரள பொருளாதாரம் : மத்திய அமைச்சர் ராஜிவ் சந்திரசேகர் குற்றச்சாட்டு!

Next Post

உத்தரகாண்ட் : பனியால் சூழ்ந்த ஹேம்குந்த் சாஹிப் குருத்வாரா!

Related News

சென்னையை மிரட்டும் நவோனியா திருட்டு கும்பல் – பொதுமக்களுக்கு போலீஸ் எச்சரிக்கை!

இந்தியா மீது ட்ரம்ப் காட்டம் ஏன்? – “இந்தியர்கள் குறைந்த நன்கொடை அளித்ததும் ஒரு காரணம்”!

இந்தியாவின் முதல் Vande Bharat SLEEPER TRAIN : விமானத்திற்கு நிகரான ரயிலில் பறக்க தயாரா?

உலகத் தலைவர்களுக்கு ஹெட்மாஸ்டர் பிரதமர் மோடி : புகழ்ந்து தள்ளிய இஸ்ரேல் பாதுகாப்பு நிபுணர்!

ட்ரம்பிற்கு எதிராக முழக்கம் : அமெரிக்க ஒபன் டென்னிஸ் போட்டியில் அவமானம்!

குடியரசு துணைத் தலைவர் தேர்தலில் சி.பி.ராதாகிருஷ்ணன் வெற்றி!

Load More

அண்மைச் செய்திகள்

நேபாளம் : சர்மா ஒலியின் இல்லத்தை சூறையாடி தீயிட்டு எரித்த போராட்டக்காரர்கள்!

விஜய் முழு நேர அரசியலில் ஈடுபட வேண்டும் – அண்ணாமலை

நேபாளம் : நாடாளுமன்ற வளாகத்துக்கு தீ வைத்த போராட்டக்காரர்கள்!

நாமக்கல் : 3ம் வகுப்பு மாணவியை தாக்கிய ஆசிரியர் – பெற்றோர் வாக்குவாதம்!

நேபாளம் : நிதி அமைச்சரை துரத்தி துரத்தி தாக்கிய போராட்டக்காரர்கள்

ராஜஸ்தான் : முதியவரை காப்பாற்ற பைக்குடன் மருத்துவமனைக்குள் நுழைந்த இளைஞர்கள்!

வழக்கறிஞர்கள் தாக்கப்பட்ட வழக்கு : ஒரு நபர் ஆணையத்திற்கு தடை – சென்னை உயர் நீதிமன்றம்

திமுக அரசு, ஒடுக்கு முறை ஆட்சி செய்வதாக தூய்மை பணியாளர்கள் குற்றச்சாட்டு!

உத்தரபிரதேசம் : வீட்டின் சுவர் இடிந்து 2 பேர் பலி – 2 பேர் காயம்!

BRICS நாடுகள் ஒன்றிணைய வேண்டுமென சீனா அழைப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies