உத்தரகாண்ட் மாநிலத்தில் விதிமுறைகளை மீறி கட்டப்பட்ட மதராசா மற்றும் மசூதி இடிக்க முயன்ற போது நிகழ்ந்த வன்முறையில் 4 பேர் உயிரிழந்தனர். இதனையடுத்து அங்கு ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.
ஹர்த்வானி வான்புல்புரா பகுதியில் சட்டவிரோதமாக கட்டப்பட்ட மசூதி மற்றும் மதராசாவை இடிக்க நீதிமன்றம் உத்தரவிட்டது. இதனைத்தொடர்ந்து கட்டிடங்களை இடிப்பதற்காக நகராட்சி அதிகாரிகள் அங்கு சென்றனர். மசூதியை இடிக்க எதிர்ப்பு தெரிவித்த சிலர் வன்முறையில் ஈடுபட்டனர்.
இதனையடுத்து அங்கு இருதரப்புக்கும் இடையே கடும் மோதல் ஏற்பட்டது. கண்ணீர் புகைகுண்டுகளை வீசி காவல்துறையினர் கூட்டத்தை கலைத்தனர். இதில் 4 பேர் உயிரிழந்தனர். 250க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர்.
அப்பகுதியில் இருந்த காவல்நிலையம் உள்ளிட்ட பொதுச்சொத்துக்கள் சேதப்படுத்தப்பட்டன. இதனையடுத்து அங்கு ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டனர். 144 தடையுத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.