ஹல்த்வானி வன்முறை வகுப்புவாதமாக்க வேண்டாம்! - நைனிட்டால் மாவட்ட ஆட்சியர்
Jun 14, 2026, 06:54 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

ஹல்த்வானி வன்முறை வகுப்புவாதமாக்க வேண்டாம்! – நைனிட்டால் மாவட்ட ஆட்சியர்

Murugesan M by Murugesan M
Feb 9, 2024, 11:57 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

உத்தரகாண்ட் மாநிலம் ஹல்த்வானி வன்முறை வகுப்புவாதமாக்க வேண்டாம் என நைனிட்டால் மாவட்ட ஆட்சியர் வந்தனா சிங் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

உத்தாகண்ட் மாநிலம் நைனிடால் மாவட்டத்தின் ஹல்த்வானி பகுதியில் நேற்று மாலை ஆக்கிரமிப்பு எதிர்ப்பு இயக்கத்தின் போது வன்முறை வெடித்தது. இதில் 4 பேர் உயிரிழந்தனர், 100-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். பன்பூல்புராவில் “சட்டவிரோதமாக கட்டப்பட்ட” மதரஸா இடிக்கப்பட்டதை தொடர்ந்து வன்முறை வெடித்த நிலையில் இந்த சம்பவம் நடந்துள்ளது. இதையடுத்து பன்பூல்புராவில் மாவட்ட ஆட்சியர் ஊரடங்கு உத்தரவை பிறப்பித்துள்ளார். வன்முறையில் ஈடுபடும் நபர்களை கண்ட உடன் சுடவும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

உத்தரகாண்ட் மாநிலம் நைனிட்டால் மாவட்டம் ஹல்த்வானி பகுதியில் ஆக்கிரமிப்பு அகற்றும் பணிகளில் அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர். அப்போது, சட்டவிரோதமாக கட்டப்பட்டிருந்த மதரஸாவை அகற்றும் பணியில் அதிகாரிகள் ஈடுபட்டனர். அதற்கு அப்பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.

இதன்போது, போலீஸாருக்கும், உள்ளூர் மக்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. ஆக்கிரமிப்பை அகற்ற வந்த அதிகாரிகள் மீது கற்களை வீசியும், காவல் நிலையத்தை முற்றுகையிட்டும் தாக்குதல் நடத்தப்பட்டது. வாகனங்கள் தீக்கிரையாக்கப்பட்டன.

இந்நிலையில் காவல்துறையினர் கலவரக்காரர்களை அடக்கி, நிலைமை கட்டுக்குள் கொண்டுவந்தனர்.  தற்போது பன்பூல்புராவில் வன்முறை கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. துணை ராணுவ படைகளும் அப்பகுதியில் நிறுத்தப்பட்டுள்ளன. சட்டம் ஒழுங்கை பராமரிக்க அண்டை மாவட்டங்களில் இருந்து கூடுதல் போலீஸ் படையும் நகரத்தில் நிறுத்தப்பட்டுள்ளது.

உத்தரகாண்ட் மாநிலம் ஹல்த்வானி வன்முறை வகுப்புவாதமாக்க வேண்டாம் என நைனிட்டால் மாவட்ட ஆட்சியர் வந்தனா சிங் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

ஹல்த்வானி வன்முறை குறித்து நைனிட்டால் மாவட்ட ஆட்சியர் வந்தனா சிங், செய்தியாளர்களை சந்தித்து பேசியவர்,

கலவரக்கார கும்பலால் காவல் நிலையம் முற்றாக சேதப்படுத்தப்பட்டுள்ளது. இது துரதிஷ்டவசமான சம்பவம். குற்றம் சாட்டப்பட்டவர்கள் கண்டறியப்பட்டு கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.” என்றார்.

இந்த சம்பவம் வகுப்புவாதமானது அல்ல. இதை வகுப்புவாதமாகவோ, உணர்ச்சிகரமானதாகவோ ஆக்க வேண்டாம் என்று அனைவரையும் கேட்டுக்கொள்வதாக தெரிவித்தார். அதிகாரப்பூர்வ தகவல்களின்படி, இந்த வன்முறையில் சிக்கி இதுவரை இரண்டு பேர் இறந்துள்ளதாகவும் அவர் தகவல் தெரிவித்தார்.

Tags: Uttarakhand violence! - 4 people killedschools closed.. Internet service disabled!
ShareTweetSendShare
Previous Post

உத்தரகாண்ட் வன்முறை : 144 தடையுத்தரவு !!

Next Post

தனியார் பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் : இண்டர்போல் உதவியை நாட முடிவு!!

Related News

FIFA உலகக்கோப்பை கால்பந்து தொடர் – கத்தார், சுவிட்சர்லாந்துக்கு இடையேயான ஆட்டம் டிரா!

அமெரிக்க – ஈரான் அமைதி ஒப்பந்தம் இன்று கையெழுத்தாகும் – ட்ரம்ப் தகவல்!

அரசு முறை பயணமாக பிரான்ஸ் சென்ற பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு!

ஆர்எஸ்எஸ் எந்த ஒரு சமூகத்திற்கோ அல்லது அரசியல் கட்சிக்கோ எதிரான அமைப்பு அல்ல; மோகன் பாகவத்

டிரம்பை சந்திக்கும் பிரதமர் மோடி; வெள்ளை மாளிகை தகவல்

பாகிஸ்தானுக்கு எதிராக திரும்பிய கத்தி : பாக்.கின் உண்மைமுகத்தை அம்பலப்படுத்தும் POK மக்கள் – சிறப்பு தொகுப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் அலைமோதும் பக்தர்கள் – 24 மணிநேரம் காத்திருந்து தரிசனம்!

டெங்கு காய்ச்சாலால் பாதிக்கப்பட்ட 7 பேர் கோவை அரசு மருத்துவமனையில் அனுமதி!

அசாமில் விமானப்படைக்கு சொந்தமான விமானம் விபத்து!

பிரான்ஸ் புறப்பட்டார் பிரதமர் மோடி – ஜி7 மாநாட்டில் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்கிறார்!

இன்றைய தங்கம் விலை!

எரிசக்தி பாதுகாப்பு மற்றும் தேசிய நலன்களை முன்னிறுத்தியே இந்தியா செயல்படுகிறது – ஜெய்சங்கர்

பள்ளி என்பது பன்முகத்தன்மையை மதிக்கும் இடமாக இருக்க வேண்டும் – நயினார் நாகேந்திரன்

இந்திய கப்பல்கள் மீது ஈரான் தாக்குதல் – ட்ரம்ப் குற்றச்சாட்டு!

ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பாகவத் பயணித்த ரயில் மீது கல்வீச்சு!

நீட் மறு தேர்வுக்கு 15 நிமிடம் கூடுதல் நேரம் ஒதுக்கீடு – தேசிய தேர்வு முகமை அறிவிப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies