"நாங்கள் பழிவாங்குவதை பற்றி சிந்திக்கவில்லை" : இந்தியா U-19 கேப்டன் விளக்கம்!
Oct 23, 2025, 06:51 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

“நாங்கள் பழிவாங்குவதை பற்றி சிந்திக்கவில்லை” : இந்தியா U-19 கேப்டன் விளக்கம்!

Web Desk by Web Desk
Feb 11, 2024, 12:15 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

நாங்கள் பழிவாங்குவதை பற்றி சிந்திக்கவில்லை. தற்போது எங்களது முழு கவனமும் இறுதிப்போட்டி குறித்து தான் இருக்கிறது. கடந்த காலத்தை பற்றி சிந்திக்கவோ, திரும்பி பார்க்கவோ விரும்பவில்லை என இந்திய அணியின் கேப்டன் உதய் சாஹரன் கூறியுள்ளார்.

19 வயதுக்கு உட்பட்டோருக்கான ஆண்கள் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் இறுதிக் கட்டத்தை நெருங்கியுள்ளது. கடந்த 19 ஆம் தேதி தொடங்கிய இந்த தொடரின் இறுதிப்போட்டி இன்று நடைபெறவுள்ளது.

மொத்தமாக 16 அணிகள் கலந்துகொண்ட இந்தப் போட்டியானது தென் ஆப்பிரிக்காவில் நடைபெற்று வந்தது. இந்தத் தொடரில் இறுதிப்போட்டியில் இந்தியா – ஆஸ்திரேலியா அணிகள் மோதவுள்ளன.

இந்நிலையில் கடந்த ஆண்டு நடைபெற்ற சீனியர்களுக்கான ஒரு நாள் உலகக்கோப்பை தொடரின் இறுதி போட்டியில் இந்தியா – ஆஸ்திரேலியா அணிகள் விளையாடின.

அந்த போட்டியில் இந்தியா தான் வெற்றி பெறும் என்று அனைவரும் எண்ணினார். ஆனால் அதற்கு மாறாக அந்த அப்போட்டியில் ஆஸ்திரேலியா 6வது முறையாக கோப்பையை கைப்பற்றியது

அண்ணன்கள் விட்ட அந்த கோப்பையை தம்பிகள் கைப்பற்றி ஆஸ்திரேலியாவை பழிதீர்ப்பார்கள் என்று ரசிகர்கள் எதிர்பார்த்து காத்துக்கொண்டிருக்கிறார்.

இந்நிலையில் நாங்கள் பழிவாங்குவதை பற்றி சிந்திக்கவில்லை என இந்திய அணியின் கேப்டன் உதய் சாஹரன் கூறியுள்ளார்.

இதுகுறித்து பேசிய அவர், ” நாங்கள் பழிவாங்குவதை பற்றி சிந்திக்கவில்லை. தற்போது எங்களது முழு கவனமும் இறுதிப்போட்டி குறித்து தான் இருக்கிறது. கடந்த காலத்தை பற்றி சிந்திக்கவோ, திரும்பி பார்க்கவோ விரும்பவில்லை.

கோடிக்கணக்கான மக்களின் கனவுகளை தோளில் சுமந்தபடி உலகக் கோப்பை இறுதிப்போட்டியை அணுகுகிறோம். இந்த இறுதிப்போட்டியின் மூலம் அடுத்த தலைமுறைக்கு உத்வேகம் அளிக்கும் வரலாற்றை உருவாக்குவதே எங்கள் நோக்கமாகும். இது வெறும் விளையாட்டு மட்டுமல்ல. வரலாற்றில் நமது பெயரை பொறிக்க ஒரு வாய்ப்பாகும்.

இந்த போட்டி தொடரில் முதல் ஆட்டத்தில் இருந்தே ஆர்வமுடனும், உறுதியுடனும் விளையாடி வருகிறோம். அத்துடன் உலகக் கோப்பையை நாட்டுக்கு கொண்டு செல்ல முடியும் என்ற நம்பிக்கையுடனும் உள்ளோம். அதேபோல் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான இறுதி ஆட்டத்திலும் சிறப்பாக செயல்பட்டு கோப்பையை கைப்பற்றி நாட்டுக்கு பெருமை சேர்க்க தயாராக இருக்கிறோம்” என்று கூறினார்.

மேலும் போட்டியை குறித்து பேசிய ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் ஹியூக் வெப்ஜென், ” இறுதிப்போட்டியில் இந்தியாவை எதிர்கொள்ள காத்திருக்க முடியவில்லை. இந்த போட்டி தொடரில் எங்களது ஒட்டுமொத்த அணியும் அற்புதமாக செயல்பட்டு இருக்கிறது.

ஒரு அணியாக கோப்பையை கையில் ஏந்துவது மிகவும் முக்கியமானதாகும். இந்த போட்டி தொடரில் இதுவரை இந்தியாவும் அபாரமாக செயல்பட்டுள்ளது. மேலும் இந்தியா ஒரு தரமான அணியாகும். அவர்கள் எங்களுக்கு சவால் அளிப்பார்கள் என்று எதிர்பார்க்கிறோம். அந்த சவாலை நாங்கள் எதிர்நோக்கி இருக்கிறோம்” என்று கூறினார்.

Tags: Indianu 19 world cupindian cricket team
ShareTweetSendShare
Previous Post

மத்தியப் பிரதேசத்தில் ரூ.7,500 கோடி மதிப்பிலான பல்வேறு வளர்ச்சித் திட்டங்கள்! – பிரதமர் மோடி தொடங்கி வைக்கிறார்!

Next Post

திமுக அரசுக்கு விவசாயம் குறித்த கவலை இல்லை! – அண்ணாமலை

Related News

சிதம்பரம், குறிஞ்சிப்பாடியில் ஆயிரக்கணக்கான ஏக்கர் நெற்பயிர்கள் சேதம்!

தமிழகம் முழுவதும் வெளுத்து வாங்கிய மழை – அரூரில் அதிக அளவாக 176 மி.மீ பதிவு!

சிதம்பரம் அருகே வீட்டின் சுவர் இடிந்து தாய், மகள் பலி!

அமெரிக்காவை முந்தும் சீனா : மிகப்பெரிய ராணுவ போக்குவரத்து விமானம் வடிவமைப்பு!

இந்தியாவின் புதிய பிரம்மாஸ்திரம் : எதிரிகள் இனி தப்ப முடியாது – வல்லுநர்கள் பெருமிதம்!

பீகார் தேர்தலில் பலவீனமாகும் மகா கூட்டணி – ஆர்.ஜே.டி. காங்., உறவில் விரிசல்!

Load More

அண்மைச் செய்திகள்

இந்தியர்களை அடிமைகளாக்கும் கஃபாலா : சவுதி அரேபியா ரத்து செய்தது ஏன்?

தீபாவளி வாழ்த்து சொன்ன ட்ரம்ப் : பயங்கரவாதத்தை அனுமதிக்க மாட்டோம் என மோடி பதில்!

அமெரிக்காவுடன் முக்கிய ஒப்பந்தம் கையெழுத்தாகிறது : இந்தியா மீதான வரி 16 சதவீதமாக குறைய வாய்ப்பு!

ஹிஜாப் சட்டத்தை மீறிய ஈரான் அதிகாரிகள் : கொந்தளித்த மக்கள் -“STRAPLESS” உடையில் தென்பட்ட மணமகளின் வீடியோவால் சர்ச்சை…!

PM SHRI திட்டத்தில் இணையும் கேரள அரசு : வீம்பு செய்யும் தமிழக அரசால் வீணாகும் மாணவர் எதிர்காலம்!

புதின்-ட்ரம்ப் சந்திப்பு ரத்து : ரஷ்யா – உக்ரைன் போர் நிறுத்த முயற்சி தோல்வி ஏன்?

தஞ்சையில் தொடர் மழை : மழையில் நனைந்து முளைக்கத் தொடங்கிய 30 ஆயிரம் நெல் மூட்டைகள்!

மாறும் தெற்காசிய அரசியல் : புதிய பாதையில் பயணிக்கும் இந்தியா- ஆப்கனிஸ்தான்!

சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சையில் புதிய திருப்புமுனை : A ரத்த வகை சிறுநீரகத்தை Universal Kidney- ஆக மாற்றி சாதனை!

ராமநாதபுரம் : நீரில் மூழ்கிய ஆயிரம் ஏக்கர் நெற்பயிர்கள் – கண்ணீரில் விவசாயிகள்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies