"நாங்கள் பழிவாங்குவதை பற்றி சிந்திக்கவில்லை" : இந்தியா U-19 கேப்டன் விளக்கம்!
Jul 23, 2025, 03:15 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

“நாங்கள் பழிவாங்குவதை பற்றி சிந்திக்கவில்லை” : இந்தியா U-19 கேப்டன் விளக்கம்!

Web Desk by Web Desk
Feb 11, 2024, 12:15 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

நாங்கள் பழிவாங்குவதை பற்றி சிந்திக்கவில்லை. தற்போது எங்களது முழு கவனமும் இறுதிப்போட்டி குறித்து தான் இருக்கிறது. கடந்த காலத்தை பற்றி சிந்திக்கவோ, திரும்பி பார்க்கவோ விரும்பவில்லை என இந்திய அணியின் கேப்டன் உதய் சாஹரன் கூறியுள்ளார்.

19 வயதுக்கு உட்பட்டோருக்கான ஆண்கள் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் இறுதிக் கட்டத்தை நெருங்கியுள்ளது. கடந்த 19 ஆம் தேதி தொடங்கிய இந்த தொடரின் இறுதிப்போட்டி இன்று நடைபெறவுள்ளது.

மொத்தமாக 16 அணிகள் கலந்துகொண்ட இந்தப் போட்டியானது தென் ஆப்பிரிக்காவில் நடைபெற்று வந்தது. இந்தத் தொடரில் இறுதிப்போட்டியில் இந்தியா – ஆஸ்திரேலியா அணிகள் மோதவுள்ளன.

இந்நிலையில் கடந்த ஆண்டு நடைபெற்ற சீனியர்களுக்கான ஒரு நாள் உலகக்கோப்பை தொடரின் இறுதி போட்டியில் இந்தியா – ஆஸ்திரேலியா அணிகள் விளையாடின.

அந்த போட்டியில் இந்தியா தான் வெற்றி பெறும் என்று அனைவரும் எண்ணினார். ஆனால் அதற்கு மாறாக அந்த அப்போட்டியில் ஆஸ்திரேலியா 6வது முறையாக கோப்பையை கைப்பற்றியது

அண்ணன்கள் விட்ட அந்த கோப்பையை தம்பிகள் கைப்பற்றி ஆஸ்திரேலியாவை பழிதீர்ப்பார்கள் என்று ரசிகர்கள் எதிர்பார்த்து காத்துக்கொண்டிருக்கிறார்.

இந்நிலையில் நாங்கள் பழிவாங்குவதை பற்றி சிந்திக்கவில்லை என இந்திய அணியின் கேப்டன் உதய் சாஹரன் கூறியுள்ளார்.

இதுகுறித்து பேசிய அவர், ” நாங்கள் பழிவாங்குவதை பற்றி சிந்திக்கவில்லை. தற்போது எங்களது முழு கவனமும் இறுதிப்போட்டி குறித்து தான் இருக்கிறது. கடந்த காலத்தை பற்றி சிந்திக்கவோ, திரும்பி பார்க்கவோ விரும்பவில்லை.

கோடிக்கணக்கான மக்களின் கனவுகளை தோளில் சுமந்தபடி உலகக் கோப்பை இறுதிப்போட்டியை அணுகுகிறோம். இந்த இறுதிப்போட்டியின் மூலம் அடுத்த தலைமுறைக்கு உத்வேகம் அளிக்கும் வரலாற்றை உருவாக்குவதே எங்கள் நோக்கமாகும். இது வெறும் விளையாட்டு மட்டுமல்ல. வரலாற்றில் நமது பெயரை பொறிக்க ஒரு வாய்ப்பாகும்.

இந்த போட்டி தொடரில் முதல் ஆட்டத்தில் இருந்தே ஆர்வமுடனும், உறுதியுடனும் விளையாடி வருகிறோம். அத்துடன் உலகக் கோப்பையை நாட்டுக்கு கொண்டு செல்ல முடியும் என்ற நம்பிக்கையுடனும் உள்ளோம். அதேபோல் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான இறுதி ஆட்டத்திலும் சிறப்பாக செயல்பட்டு கோப்பையை கைப்பற்றி நாட்டுக்கு பெருமை சேர்க்க தயாராக இருக்கிறோம்” என்று கூறினார்.

மேலும் போட்டியை குறித்து பேசிய ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் ஹியூக் வெப்ஜென், ” இறுதிப்போட்டியில் இந்தியாவை எதிர்கொள்ள காத்திருக்க முடியவில்லை. இந்த போட்டி தொடரில் எங்களது ஒட்டுமொத்த அணியும் அற்புதமாக செயல்பட்டு இருக்கிறது.

ஒரு அணியாக கோப்பையை கையில் ஏந்துவது மிகவும் முக்கியமானதாகும். இந்த போட்டி தொடரில் இதுவரை இந்தியாவும் அபாரமாக செயல்பட்டுள்ளது. மேலும் இந்தியா ஒரு தரமான அணியாகும். அவர்கள் எங்களுக்கு சவால் அளிப்பார்கள் என்று எதிர்பார்க்கிறோம். அந்த சவாலை நாங்கள் எதிர்நோக்கி இருக்கிறோம்” என்று கூறினார்.

Tags: indian cricket teamIndianu 19 world cup
ShareTweetSendShare
Previous Post

மத்தியப் பிரதேசத்தில் ரூ.7,500 கோடி மதிப்பிலான பல்வேறு வளர்ச்சித் திட்டங்கள்! – பிரதமர் மோடி தொடங்கி வைக்கிறார்!

Next Post

திமுக அரசுக்கு விவசாயம் குறித்த கவலை இல்லை! – அண்ணாமலை

Related News

சென்னை : 2வது மாடியில் இருந்து கீழே விழுந்த 2 வயது குழந்தை!

தருமபுரி அருகே வீட்டின் மீது அரசு பேருந்து மோதி விபத்து – சிறுமி உயிரிழப்பு!

சீனா : வரவேற்பை பெற்ற சோலார் மின்விசிறி தொப்பிகள்!

சென்னை : தூய்மை பணியாளர்கள் கருப்பு பேட்ச் அணிந்து மனித சங்கிலி போராட்டம்!

ஆர்டிக் பகுதியில் காலநிலை மாற்றம், மாசுபாட்டால் பாதிக்கப்படும் துருவக் கரடிகள்!

அரசுப்பள்ளி மாணவர் சேர்க்கை தமிழகம் 10ம் இடம் – மத்திய அரசு தகவல்!

Load More

அண்மைச் செய்திகள்

டிஜிட்டல் உலகில் தற்போதுள்ள தொழில்நுட்பத்தை பயன்படுத்தி திரைத்துறை மேம்பட்டுள்ளது : நடிகர் கிங்காங்

மலையாள திரைப்படமான Ronth ஓடிடி தளத்தில் ரிலீஸ்!

உஸ்தாத் பகத்சிங் படத்தில் இணைந்த ராஷி கண்ணா!

தேசிய ஜனநாயக கூட்டணி வலுவடைவதை பார்த்து திமுகவுக்கு அச்சம் வந்துவிட்டது : டிடிவி தினகரன்

வலிமையான பாஸ்போர்ட் பட்டியல் : உலகளவில் 77வது இடத்திற்கு இந்தியா முன்னேற்றம்!

கொரோனா பணியில் உயிரிழப்பு : மருத்துவர் குடும்பத்தை கைவிட்ட தமிழக அரசு!

சினிமாவை விஞ்சிய கொலை – 10 ஆண்டு ரிவென்ஞ்ச் – பழிதீர்த்த இளைஞர்!

கோவை : ஃபிளிப்கார்ட்டின் இ-காமெர்ஸ் நிறுவனங்களில் சோதனை – காலாவதியான 278 கிலோ பேரீச்சை பழங்கள் பறிமுதல்!

ஹன்சிகாவுடன் விவாகரத்து? – கணவர் தரப்பு விளக்கம்!

கோட்டை மாரியம்மன் கோயில் ஆடித் திருவிழா பூச்சாட்டுதலுடன் தொடக்கம்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies