"நாங்கள் பழிவாங்குவதை பற்றி சிந்திக்கவில்லை" : இந்தியா U-19 கேப்டன் விளக்கம்!
Jun 15, 2026, 01:52 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

“நாங்கள் பழிவாங்குவதை பற்றி சிந்திக்கவில்லை” : இந்தியா U-19 கேப்டன் விளக்கம்!

Murugesan M by Murugesan M
Feb 11, 2024, 12:15 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

நாங்கள் பழிவாங்குவதை பற்றி சிந்திக்கவில்லை. தற்போது எங்களது முழு கவனமும் இறுதிப்போட்டி குறித்து தான் இருக்கிறது. கடந்த காலத்தை பற்றி சிந்திக்கவோ, திரும்பி பார்க்கவோ விரும்பவில்லை என இந்திய அணியின் கேப்டன் உதய் சாஹரன் கூறியுள்ளார்.

19 வயதுக்கு உட்பட்டோருக்கான ஆண்கள் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் இறுதிக் கட்டத்தை நெருங்கியுள்ளது. கடந்த 19 ஆம் தேதி தொடங்கிய இந்த தொடரின் இறுதிப்போட்டி இன்று நடைபெறவுள்ளது.

மொத்தமாக 16 அணிகள் கலந்துகொண்ட இந்தப் போட்டியானது தென் ஆப்பிரிக்காவில் நடைபெற்று வந்தது. இந்தத் தொடரில் இறுதிப்போட்டியில் இந்தியா – ஆஸ்திரேலியா அணிகள் மோதவுள்ளன.

இந்நிலையில் கடந்த ஆண்டு நடைபெற்ற சீனியர்களுக்கான ஒரு நாள் உலகக்கோப்பை தொடரின் இறுதி போட்டியில் இந்தியா – ஆஸ்திரேலியா அணிகள் விளையாடின.

அந்த போட்டியில் இந்தியா தான் வெற்றி பெறும் என்று அனைவரும் எண்ணினார். ஆனால் அதற்கு மாறாக அந்த அப்போட்டியில் ஆஸ்திரேலியா 6வது முறையாக கோப்பையை கைப்பற்றியது

அண்ணன்கள் விட்ட அந்த கோப்பையை தம்பிகள் கைப்பற்றி ஆஸ்திரேலியாவை பழிதீர்ப்பார்கள் என்று ரசிகர்கள் எதிர்பார்த்து காத்துக்கொண்டிருக்கிறார்.

இந்நிலையில் நாங்கள் பழிவாங்குவதை பற்றி சிந்திக்கவில்லை என இந்திய அணியின் கேப்டன் உதய் சாஹரன் கூறியுள்ளார்.

இதுகுறித்து பேசிய அவர், ” நாங்கள் பழிவாங்குவதை பற்றி சிந்திக்கவில்லை. தற்போது எங்களது முழு கவனமும் இறுதிப்போட்டி குறித்து தான் இருக்கிறது. கடந்த காலத்தை பற்றி சிந்திக்கவோ, திரும்பி பார்க்கவோ விரும்பவில்லை.

கோடிக்கணக்கான மக்களின் கனவுகளை தோளில் சுமந்தபடி உலகக் கோப்பை இறுதிப்போட்டியை அணுகுகிறோம். இந்த இறுதிப்போட்டியின் மூலம் அடுத்த தலைமுறைக்கு உத்வேகம் அளிக்கும் வரலாற்றை உருவாக்குவதே எங்கள் நோக்கமாகும். இது வெறும் விளையாட்டு மட்டுமல்ல. வரலாற்றில் நமது பெயரை பொறிக்க ஒரு வாய்ப்பாகும்.

இந்த போட்டி தொடரில் முதல் ஆட்டத்தில் இருந்தே ஆர்வமுடனும், உறுதியுடனும் விளையாடி வருகிறோம். அத்துடன் உலகக் கோப்பையை நாட்டுக்கு கொண்டு செல்ல முடியும் என்ற நம்பிக்கையுடனும் உள்ளோம். அதேபோல் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான இறுதி ஆட்டத்திலும் சிறப்பாக செயல்பட்டு கோப்பையை கைப்பற்றி நாட்டுக்கு பெருமை சேர்க்க தயாராக இருக்கிறோம்” என்று கூறினார்.

மேலும் போட்டியை குறித்து பேசிய ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் ஹியூக் வெப்ஜென், ” இறுதிப்போட்டியில் இந்தியாவை எதிர்கொள்ள காத்திருக்க முடியவில்லை. இந்த போட்டி தொடரில் எங்களது ஒட்டுமொத்த அணியும் அற்புதமாக செயல்பட்டு இருக்கிறது.

ஒரு அணியாக கோப்பையை கையில் ஏந்துவது மிகவும் முக்கியமானதாகும். இந்த போட்டி தொடரில் இதுவரை இந்தியாவும் அபாரமாக செயல்பட்டுள்ளது. மேலும் இந்தியா ஒரு தரமான அணியாகும். அவர்கள் எங்களுக்கு சவால் அளிப்பார்கள் என்று எதிர்பார்க்கிறோம். அந்த சவாலை நாங்கள் எதிர்நோக்கி இருக்கிறோம்” என்று கூறினார்.

Tags: indian cricket teamIndianu 19 world cup
ShareTweetSendShare
Previous Post

மத்தியப் பிரதேசத்தில் ரூ.7,500 கோடி மதிப்பிலான பல்வேறு வளர்ச்சித் திட்டங்கள்! – பிரதமர் மோடி தொடங்கி வைக்கிறார்!

Next Post

திமுக அரசுக்கு விவசாயம் குறித்த கவலை இல்லை! – அண்ணாமலை

Related News

முதலமைச்சர் விஜய் சங்கீதா விவாகரத்து வழக்கு; திங்களன்று விசாரணை

ஏ.ஐ தொழில்நுட்பத்துறைக்கு வளமான எதிர்காலம்; பிரான்சில் பிரதமர் மோடி பேச்சு

பாலிஸ்டிக் ஏவுகணைகளை இடைமறித்து அழிக்கும் சோதனை வெற்றி : DRDO அசத்தல் சாதனை – சிறப்பு தொகுப்பு!

பனிக்கட்டி சூழ்ந்த ஏரியில் மூழ்கிய சிறுமியை காப்பாற்றிய இந்திய தொழிலாளி : கெளரவ குடிமகன் அந்தஸ்து வழங்கி கவுரவித்த ருமேனியா – சிறப்பு தொகுப்பு!

கீர்த்தி சக்ரா விருது பெற்ற ராணுவ வீரருக்கு பாராட்டு – காலில் விழுந்து ஆசி பெற்ற தவெக எம்எல்ஏ!

பஞ்சாப் எல்லையில் தீவிர கண்காணிப்பு : ட்ரோன்கள் மூலம் போதைபொருள், ஆயுத கடத்தலை தடுக்க தீவிர நடவடிக்கை – சிறப்பு தொகுப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

அமெரிக்கா உடனான அமைதி ஒப்பந்தம் இன்று கையெழுத்தாக வாய்ப்பில்லை – ஈரான்

இந்தியா, நேபாளம் இடையே பயணிகள் ரயில் போக்குவரத்து – இருநாட்டு அதிகாரிகள் ஆலோசனை!

கோவை மாநகராட்சியில் கமிஷன் எதுவும் இன்றி டெண்டர் – ஒப்பந்ததாரர்கள் மகிழ்ச்சி!

இந்திய ராணுவத்தின் தலைமை தளபதியாக லெப்டினன்ட் ஜெனரல் தீரஜ்சேத் நியமனம்!

தவெக ஆட்சியில் பெண் காவலர்களுக்கே பாதுகாப்பில்லை – நயினார் நாகேந்திரன்

சிவகங்கை அருகே பெண் காவலருக்கு பாலியல் சீண்டல் – 3 பேர் கைது!

கன்னியாகுமரி அருகே கட்டுப்பாட்டை இழந்த கார் அடுத்தடுத்து வாகனங்களின் மீது மோதி விபத்து – 10 பேர் காயம்!

தவெக ஆட்சியில் கேலிக்கூத்து ஆன ஜனநாயகம் – மு.க.ஸ்டாலின் விமர்சனம்!

தவெகவில் இணைந்த மாற்று கட்சியினர் – அனைவருக்கும் உரிய மரியாதை அளிக்கப்படும் என அமைச்சர் ஆனந்த் பேச்சு!

FIFA உலகக்கோப்பை கால்பந்து தொடர் – கத்தார், சுவிட்சர்லாந்துக்கு இடையேயான ஆட்டம் டிரா!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies