பீகார் முதல்வர் நிதிஷ்குமார் மாநில சட்டசபையில் இன்று நம்பிக்கை வாக்கெடுப்பு கோருகிறார்.
பீகார் மாநில முதல்வர் நிதிஷ்குமாருக்கும், கூட்டணிக் கட்சியான லாலு பிரசாத் யாதவின் ராஷ்ட்ரீய ஜனதா தளம் கட்சிக்கும் மோதல் போக்கு நிலவி வந்தது. பீகாரில் வாரிசு அரசியலை ஒழிக்க வேண்டும் என்று நிதிஷ்குமார் தெரிவித்தார். இதற்கு பதில் அளித்த லாலுவின் மகள், தனது சமூக வலைத்தள பக்கத்தில் நிதிஷ்குமாரை கடுமையாக சாடி பதிவிட்டார்.
இதனையடுத்து கூட்டணியில் முறித்துக்கொள்ள நிதிஷ்குமார் திட்டமிட்டார். பின்னர் அவருக்கு பாஜக ஆதரவு அளித்தது.இதனைத்தொடர்ந்து முதலவர் பதவியை ராஜினாமா செய்த அவர், பாஜக ஆதரவுடன் ஜனவரி 29ஆம் தேதி மீண்டும் முதலமைச்சராக பதவியேற்றார். மீண்டும் முதல் அமைச்சராக பதவி ஏற்ற நிதிஷ்குமார்
சட்டசபையில்பெரும்பான்மையை காட்ட வேண்டும் என்று அம்மாநில ஆளுநர் உத்தரவிட்டிருந்தார். இந்நிலையில் முதலமைச்சர் நிதிஷ் குமார் சட்டப்பேரவையில் இன்று நம்பிக்கை வாக்கெடுப்பு கோருகிறார்.
243 பேர் கொண்ட பீகார் சட்டசபையில், ராஷ்டீரிய ஜனதா தளத்திற்கு 79 எம்எல்ஏக்கள் உள்ளனர். அதைத் தொடர்ந்து பாஜகவுக்கு 78 உறுப்பினர்கள் உள்ளனர். ஐக்கிய ஜனதா தளம் கட்சிக்கு 45 எம்எல்ஏக்களும், காங்கிரஸுக்கு 19 சட்டமன்ற உறுப்பினர்களும் உள்ளனர். பெரும்பான்மையை நிரூபிக்க 122 உறுப்பினர்களின் ஆதரவு தேவை.